Wednesday, July 28, 2010

ஏகத்துவவாதிகளும் இணைவைப்பவர்களும்?

குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள்களை பின்பற்றும் ஏகத்துவவாதிகளும் மத்ஹபுகளையும் இஸ்லாத்தின் பெயரால் புனையப்பட்ட கட்டுக் கதைகளையும் ஆதாரமாகக் கொண்டு தங்கள் செயலுக்கு நியாயம் கற்பித்து வரும் இணைவைக்கும் முஷ்ரிக்குகளும்.

ஏகத்துவவாதிகள்:
அல்லாஹ்வை தவிர எதையும் வணங்காதீர்கள் (அல்குர்ஆன்)

இணைவைக்கும் முஷ்ரிக்குகள்:
அவ்லியாவையும் வணங்குவோம், கபர்களையும் வணங்குவோம், யானையையும் வணங்குவோம் பீடி மஸ்தானையும் வணங்குவோம்.

ஏகத்துவவாதிகள்:
இறந்தோரை பிரார்த்திக்காதிர்கள் (அல்குர்ஆன்)

இணைவைக்கும் முஷ்ரிக்குகள்:
இறந்தோர் நமக்கு அருள்புரிவார்கள். ஒரே நேரத்தில் எத்தனை பேர்கள் கூப்பிட்டாலும் பதில் சொல்வார்கள்.

ஏகத்துவவாதிகள்:
கப்ருகளை உயர்த்திக் கட்டாதீர்கள் (நபிமொழி)

இணைவைக்கும் முஷ்ரிக்குகள்:
கப்ருகளை உயர்த்திக் கட்டுவோம். அப்போதுதானே நாங்கள் கந்தூரி தேர்த்திருவிழா யானை கொடி பாத்திஹா நேர்ச்சை காணிக்கை இதெல்லாம் செய்து மக்களை மூடர்களாக்கலாம்.

ஏகத்துவவாதிகள்:
உயர்த்திக் கட்டப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்குங்கள். (நபிமொழி)

இணைவைக்கும் முஷ்ரிக்குகள்:
உயர்த்திக் கட்டப்படட கப்ருகளையும், தர்காஹ்களையும் இடிக்கமாட்டோம்!

ஏகத்துவவாதிகள்:
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி அவர்கள் நவின்றார்கள். (அலி(ரலி) அபூதாவூது, நஸயீ.)

இணைவைக்கும் முஷ்ரிக்குகள்:
மார்க்கத்தில் புதுமையை விரும்புவோம் மவ்லூது, கத்தம் பாத்திஹா, கந்தூரி விழா, ஷபே பராத், மண்ணரை திருவிழா யானை கொடிவிழா சந்தன கூடு விழா  1000 முறை கவுஸ் என்ற அழைப்போம் இன்னும் ஏராளம் இருக்கு சரக்கு அது நம் மூதாதையர்கள் காட்டித்தந்த வழிமுறை அதை விடமாட்டோம்!

ஏகத்துவவாதிகள்:
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.’அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்

இணைவைக்கும் முஷ்ரிக்குகள்:
தாயத்தை கட்டினால் என்ன? தாயத்தை கட்டுவோம், கட்டக்கூடாது என்று கூறுபவர் யார். இதையெல்லாம் விடு சொன்னா நாங்க எப்படி பிழைக்கிறது. Source

0 comments:

Post a Comment