Thursday, August 5, 2010

தொழுகையின் முக்கியத்துவம்!

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) ‎
“உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என ‎வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து ‎வந்தாரென்றால், அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு ‎எஞ்சியிருக்குமா?” என நபி ‎ அவர்கள் தம் தோழர்களிடம் வினவினார்கள்.‎

அதற்குத் தோழர்கள், “இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது” ‎என்றார்கள். “இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும்! அல்லாஹ் ‎இத்தொழுகைகளின் மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான்” என்று நபி ‎ ‎அவர்கள் அருளினார்கள். (புகாரி, முஸ்லிம்)‎

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
ஒருவர் ஓர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டார். உடனே தம் தவறை உணர்ந்து ‎வெட்கமும், வேதனையும் அடைந்தார். “நம் கதி என்னவாகுமோ?”என நினைத்து ‎அண்ணல் நபி ‎ அவர்களிடம் ஓடி வந்து நிலைமையை விளக்கினார். செய்த ‎தவறை உணர்ந்து வேதனையால் துடிக்கும் அவருக்கு நபி ‎ அவர்கள் பின்வரும் ‎திருமறையின் வசனத்தை ஓதி ஆறுதல் அளித்தார்கள்.

‎“பகலின் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும் இரவு சிறிது கழிந்த ‎நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நன்மைகள் ‎பாவங்களைப் போக்கிவிடும்.” (திருக்குர்ஆன் 11:114) இதைக் கேட்ட அந்த மனிதர் ‎‎“எனக்கு மட்டும்தானா?” என வினவினார். “இல்லை! இது என்னைப் பின்பற்றும் ‎உம்மத்தினர் (சமூகத்தினர்) அனைவருக்கும்தான்” என நவின்றார்கள் நபி ‎ ‎அவர்கள். (புகாரி, முஸ்லிம்)‎

அறிவிப்பாளர் : உபாதா பின் ஸாமித் (ரலி)
அண்ணல் நபி ‎ நவின்றார்கள்: “ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் மக்கள் ‎மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, ‎இத்தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ இன்னும் எவருடைய ‎உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது இறைவனின் ‎பொறுப்பாகும். மேலும், எவர் இவ்வாறு தொழுகையைப் பேணிச் ‎செயல்படவில்லையோ அவரை இறைவனின் மன்னித்தருளுதல் எனும் ‎பொறுப்பான வாக்குறிதி சேராது. இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான், ‎நாடினால் தண்டிப்பான்.” (அபூதாவூத்)‎

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)
நபிகள் நாயகம் ‎ அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை ‎நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள்: “எவர் தம் ‎தொழுகைகளைச் சாpயான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு - அவரது ‎தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஔpயாகவும் ஆதாரமாகவும் அமையும். ‎ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் ‎பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ‎ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் இருக்காது. (முஸ்னத் ‎அஹ்மத், இப்னு ஹிப்பான்)‎

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)
நபி ‎ அவர்கள் நவின்றார்கள்: “இது நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் ‎உட்கார்ந்து கொண்டு, சூரியன் மஞ்சளித்துப் போகும்வரை எதிர்பார்த்துக் ‎கொண்டிருக்கின்றான். இணை வைப்பாளர்களுக்குரிய சூரிய வழிபாட்டு நேரம் ‎வரும்போது அவன் எழுகின்றான், சீக்கிரம் சீக்கிரமாக நான்கு ரக்அத்களை கொத்தி ‎எடுக்கின்றான் (கோழி தன் அலகை பூமியில் கொத்தி எடுப்பதைப்போல) அவன் தன் ‎தொழுகையில் அல்லாஹ்வைச் சிறிதும் நினைவு கூர்வதில்லை.” (முஸ்லிம்)‎

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)
நபி ‎ அவர்கள் நவின்றார்கள்: உலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் ‎அமர்த்தப்பட்டுள்ள பகல் நேர இரவு நேர வானவர்கள், வைகறை வேளையிலும் ‎மாலைப்பொழுதினிலும் தொழுகையில் அவர்கள் ஒன்று கூடுகிறார்கள். தம் ‎பணியை பரஸ்பரம் ஒப்படைக்கின்றார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் ‎வானவர்கள் தம் இறைவனிடம் செல்லும்போது, “நீங்கள் என் அடியாரை எந்த ‎நிலையில் விட்டு வந்தீர்கள்?” என்று அவன் வினவுவான். அதற்கவர்கள்,

‎“நாங்கள் உன் அடியார்களிடம் சென்றபோது அவர்கள் தொழுகையில் இருந்ததைக் ‎கண்டோம். நாங்கள் அவர்களை விட்டு வரும்போது கூட அவர்கள் தொழும் ‎நிலையிலேயே விட்டு வந்தோம்” என்பார்கள். (புகாரி, முஸ்லிம்)‎

உமர்பின் கத்தாப் (ரலி) அவர்களைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது
அவர்கள் ‎தம்முடைய ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் அழுதினார்கள்: ‎உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் ‎வாய்ந்தது தொழுகையே! எவன் தன் தொழுகையைப் பேணுகின்றானோ அதனைக் ‎கண்காணித்த வண்ணம் இருப்பானோ அவன் தன் மார்க்கம் முழுவதையும் பேணி ‎நடப்பான். எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ அவன் மற்ற ‎விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவனாகவே இருப்பான். (மிஷ்காத்)‎

அறிவிப்பாளர் : அப+ஹுரைரா (ரலி)
நபி ‎ அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் ‎இல்லாத நாளில் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் நிழலில் இடம் ‎கொடுப்பான்.
1. நீதி செலுத்தும் அரசன்.
2. அல்லாஹ்வின் வணக்கத்தில் தன் ‎இளமையைக் கழித்த வாலிபன்.
3.எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் ‎நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன். அவன் பள்ளிவாசலை விட்டு ‎வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த ‎வண்ணமிருப்பான்.
4.எந்த இரு மனிதர்களுடைய நட்புக்கு அல்லாஹ்வும் அவனது ‎மார்க்கமும் அடிப்படைகளாக அமைந்திருந்தனவோ அந்த மனிதர்கள். அவர்கள் ‎அதே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள், அதே உணர்வுடன் பிரிவார்கள்.
5. ‎தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் ‎மனிதன்.
6. உயர் குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி தகாத செயல் ‎செய்திட அழைத்தபோது, இறையச்சத்தின் காரணத்தால் அவ்வழைப்பை ஏற்க ‎மறுத்துவிட்ட மனிதன்.
7. தன் வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத ‎வகையில் தருமம் செய்த மனிதன்.”(புகாரி, முஸ்லிம்)
‎ ‎
அறிவிப்பாளர் : ஷக்காத் பின் அவ்ஸ் (ரலி)
நான் நபி ‎ அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டிருக்கின்றேன் ‎‎“வெளிப்பகட்டுக்காகவே தொழுதவன் (ஷிர்க் செய்தவன்) இணை வைத்தவன் ‎ஆவான். வெளிப்பகட்டுக்காகவே நோன்பு நோற்றவனும் இணை வைத்தவன்தான், ‎வெளிப்பகட்டுக்காகவே கொடை அளித்தவனும் இணை வைத்தவனே!” (முஸ்னத் ‎அஹமத்)‎
ரீட்இஸ்லாம்

0 comments:

Post a Comment