<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633</id><updated>2012-02-15T23:17:35.957-08:00</updated><category term='முஹர்ரம்'/><category term='அபூபக்கர் (ரலி)'/><category term='நபி (ஸல்)'/><category term='நோன்பு'/><category term='இத்தா'/><category term='வாழ்வியல்'/><category term='அவலங்கள்'/><category term='அல்-குர்ஆன்'/><category term='ஆய்வுகள்'/><category term='உமர் (ரலி)'/><category term='அறிஞர் பீ.ஜே'/><category term='வழிபாடு'/><category term='வரலாறு'/><category term='தவ்ஹீத் ஜமாஅத்'/><category term='இப்ராஹீம் (அலை)'/><category term='குர்பானி'/><category term='பிரிவுகள்'/><title type='text'>தவ்ஹீத் முழக்கம்!</title><subtitle type='html'>சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்.(அல்குர்ஆன்.17:81)</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>75</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-1718917445440776436</id><published>2012-02-15T19:04:00.000-08:00</published><updated>2012-02-15T19:04:00.694-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நபி (ஸல்)'/><title type='text'>மாமனிதர் நபி(ஸல்) - 14 (அரசுக் கருவூலத்திருந்து எதையும் அனுபவிக்கவில்லை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;ஒரு பேரீச்சம் பழத்தைத் தமது பேரக் குழந்தை சாப்பிட்டதைக் கூட அவர்கள் கண்டித்ததை முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.&lt;div&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் எவருக்கும் அவர்கள் ஏழைகளாகவே இருந்தாலும் அரசுக் கருவூலத்திருந்து எதையும் கொடுக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் நபிகள் நாயகத்தின் குடும்பத்தினருக்குத் தெரியும். ஆயினும் ஸகாத் நிதியை வசூக்கும் வேலையில் சேர்ந்து அந்த வேலைக்காக ஊதியம் பெறுவது தவறில்லை என்று கருதியதால் தான் இவ்வாறு அந்த வேலையைக் கேட்டு வந்தனர்.&amp;nbsp;&lt;div&gt;&lt;br /&gt;ஆனால் அதற்கும் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. திருமணம் செய்யக் கூட வசதியில்லை என்ற நியாயமான காரணத்திற்காக அவர்கள் வேலை வாய்ப்பைக் கேட்ட போதும் தமது குடும்பத்தார் என்ற காரணத்திற்காக மறுக்கிறார்கள். மற்றவர்களுக்குக் கிடைக்கும் உரிமைகளையும், சலுகைகளையும் கூட தமது குடும்பத்தினர் அனுபவிக்கக் கூடாது என்று அறிவித்து நடைமுறைப்படுத்திக் காட்டிய ஒரே தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்கிறார்கள்.&lt;div&gt;&lt;br /&gt;பத்து வருட காலம் ஆட்சி புரிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இது போன்ற பதவிகளைப் பெற்று விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மையான ஆட்சியாளர் என்று நற்பெயர் எடுத்தவர்கள் கூட தகுதியுடைய தமது குடும்பத்தினருக்குப் பதவிகளையும், வேலை வாய்ப்பையும் வழங்காமல் இருந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாமனிதரோ தமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது போன்ற வேலைகளைக் கூட தரக் கூடாது என்பதை அடிப்படைக் கொள்கையாகவே வைத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'இவ்வூரும், இந்த மாதமும் எவ்வாறு புனிதமாக உள்ளதோ, அவ்வாறே உங்கள் உயிர்களும், உடமைகளும் புனிதமானவை. அறிந்து கொள்க! அறியாமைக் கால நடவடிக்கைகள் அனைத்தையும் என் காலுக்கடியில் மிதித்துப் புதைக்கிறேன். அறியாமைக் காலத்தில் நடந்த எல்லாக் கொலைகளுக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்படுகின்றது. முதன் முதல் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆவின் மகனுடைய கொலையை நான் மன்னிக்கிறேன். அறியாமைக் காலத்து வட்டிகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. முதன் முதல் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாஸின் வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என்று நபிகள் நாயகம் (ஸல்) வரலாற்றுச் சிறப்பு மிக்க இறுதிப் பேருரையில் பிரகடனம் செய்தார்கள்.நூல் : முஸ்லிம் 2137&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரகடனத்தில் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகத்தான பல பண்புகள் வெளிப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உயிர்களை மவாகக் கருதிய சமுதாயத்திற்கு வழிகாட்ட அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அற்பமான காரணங்களுக்குக் கூட அந்தச் சமுதாயம் மற்றவரின் உயிரைப் பறித்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமின்றி கொன்றவர்களைப் பழிவாங்க இயலாவிட்டால் பல தலைமுறைகளுக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று கொல்லப்பட்டவனது குடும்பத்தார் வெறி பிடித்து அலைந்தனர். தமது மக்களுக்கு இது குறித்து மரண சாசனம் செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு தியாகங்களுக்குப் பின் அரபகத்துக்கு அதிபதியானார்கள்.&lt;div&gt;&lt;br /&gt;உயிர்கள் மட்டுமின்றி பிறர் உடமைகளுக்கும் அந்தச் சமுதாயத்தில் எந்த மரியாதையும் இருக்கவில்லை. வலிமையுள்ளவர் வலிமையற்றவரின் பொருளைச் சர்வ சாதாரணமாகப் பிடுங்கிக் கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) மேற்கண்ட பிரகடனத்தைச் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கா என்ற நகரம் மட்டுமின்றி, மனிதனின் உயிர்களும், உடமைகளும் கூடப் புனிதமானவை எனப் பிரகடனம் செய்கிறார்கள். புனிதமான இடத்தில், ஊரில் எவ்வாறு அதன் புனிதத்தைப் பேணுவீர்களோ அவ்வாறே மற்றவரின் உயிரையும் புனிதமாகக் கருதிப் பேண வேண்டும்; மற்றவர்களில் பொருட்களையும் புனிதமாகக் கருத வேண்டும் எனக் கட்டளை இடுகிறார்கள். பிற மனிதர்களின் உயிரையும், உடமையையும் புனிதமானவை எனப் பிரகடனம் செய்த ஒரே தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரகடனம் செய்யப்படுவதற்கு முன்னர் எத்தனையோ கொலைகள் அச்சமுதாயத்தில் நிகழ்ந்துள்ளன. அக்கொலைகளுக்காக சம்பந்தப்பட்டவர்கள் பழி வாங்க நினைப்பது இயல்பான ஒன்று தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி மேல் கொலை செய்வது முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது என்று கூறினால் பாதிக்கப்பட்டவர்கள் இதை ஏற்றுக் கொள்வது கஷ்டமாக இருக்கும். ஏற்கனவே நடந்த கொலைக்குப் பழி வாங்க வேண்டும் என்ற உணர்வை அவர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே நடந்த கொலைகளை மன்னித்து விடுங்கள் எனக் கூறினால் உமது குடும்பத்தில் யாரேனும் கொல்லப்பட்டால் இவ்வாறு கூறுவீரா? என்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தோன்றலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு நமது நாட்டிலும், வேறு சில நாடுகளிலும் கொலையாளிகளை மன்னிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் இவ்வாறு மன்னிக்கும் போது 'இவரது மகன் கொல்லப்பட்டால் மன்னிப்பாரா?' என்று பாதிக்கப்பட்டவன் நினைப்பதைக் காண்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் 'கொலை செய்வது இன்று முதல் குற்றமாக்கப்படுகின்றது; இதற்கு முன் நடந்த கொலைகள் மன்னிக்கப்படுகின்றன' என்ற பிரகடனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யும் போது முதல் தமது குடும்பத்தில் நடந்த கொலையை மன்னிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரபீஆ (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தைக்கு ஒன்று விட்ட சகோதரர். அவரது மகனைத் தான் ஹுதைல்' என்ற கூட்டத்தார் கொலை செய்திருந்தனர். தம் சகோதரர் மகனை (தம்பியை அல்லது அண்ணனை) கொலை செய்தவர்களை முதல் மன்னிப்பதாக அறிவிக்கிறார்கள். தமது குடும்பத்தார் அனைவரிடமும் இது பற்றிப் பேசி அவர்கள் அனைவரையும் மன்னிக்கச் செய்து தாமும் மன்னிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாம் கூறுவதை தமது குடும்பத்திருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்ற இந்தப் பண்பின் காரணமாகவே அவர்கள் மாமனிதர் எனப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது போல் வட்டி வாங்குவது இதற்கு முன் தடை செய்யப்படாமல் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் மிகப் பெரிய அளவில் வட்டித் தொழில் செய்தவர் நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) ஆவார்.&lt;br /&gt;வட்டியைத் தடை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கு முன் யாரெல்லாம் வட்டிக்குக் கடன் கொடுத்தார்களோ அவர்கள் அசலை மட்டும் தான் வாங்க வேண்டும்; ஏற்கனவே பேசப்பட்ட வட்டியானாலும் அதை வாங்கவும், கொடுக்கவும் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'தம்மிடமிருந்தே எதையும் ஆரம்பிக்க வேண்டும்' என்ற கொள்கையின் காரணமாக தமது பெரிய தந்தையின் வட்டிகள் அனைத்தையும் முதல் தள்ளுபடி செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது பெரிய தந்தையிடம் வட்டிக்குக் கடன் வாங்கியவர் அசலை மட்டும் கொடுத்தால் போதும். வட்டியைக் கொடுக்கக் கூடாது என்று அறிவிப்புச் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தப் பிரகடனத்தில் மற்றொரு முக்கியமான விஷயமும் அடங்கியுள்ளது.&lt;div&gt;&lt;br /&gt;இன்றைக்குச் சட்டங்களை இயற்றுவோர் எதிரிகளைப் பழிவாங்கிட முன் தேதியிட்டு சட்டங்களை அமுல்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நடந்த குற்றங்களைப் புதிதாக இயற்றப்படும் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது மாபெரும் அநீதி என்ற சாதாரண அறிவு கூட யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;தாம் வகுத்த எந்தச் சட்டத்தையும் தம்மிடமிருந்தும் தமது குடும்பத்திலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். தம்முடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சட்டத்தை மீறினால் மற்றவர்களை விட கடுமையாக அவர்களைத் தண்டிப்பதும் நபிகள் நாயகத்தின் வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸகாத் நிதியை வசூலிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அப்போது இப்னு ஜமீல் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), அப்பாஸ் (ரலி) ஆகிய மூவர் ஸகாத் கொடுக்க மறுத்தனர். இது பற்றி நபிகள் நாயகத்திடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இப்னு ஜமீல் ஏழையாக இருந்தார். அல்லாஹ்வும், அவனது தூதரும் அவரை வசதி படைத்தவராக ஆக்கினார்கள் என்பதற்காகவே ஸகாத் தர மறுக்கிறார். காலித் தனது கவச உடைகளையும், தளவாடங்களையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தவர். எனவே (அவரிடம் ஸகாத் கேட்டதன் மூலம்) அவருக்கு நீங்கள் அநீதி இழைக்கிறீர்கள். அப்பாஸ் அல்லாஹ்வின் தூதராகிய எனது பெரிய தந்தையாக இருக்கிறார். அவர் தன் மீது கடமையான ஸகாத்தைத் தர வேண்டும். மேலும் அது போல் இன்னொரு மடங்கும் அவர் மீது உள்ளது' என்று கூறினார்கள்.நூல் : புகாரி: 1468&lt;br /&gt;&lt;br /&gt;காலித் (ரலி) ஸகாத் தராமல் இருந்ததை நபிகள் நாயகம் மன்னிக்கிறார்கள். ஏனெனில் அதை விட அதிகமாகவே அவர் ஏற்கனவே கொடுத்துள்ளார். இப்னு ஜமீல் (ரலி) ஸகாத் கொடுக்க மறுப்பது தவறு தான் எனக் கூறுகிறார்கள். அதாவது அவரிடம் கட்டாயம் ஸகாத் வசூலிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் தமது பெரிய தந்தையிடம் ஸகாத்தையும் வசூலிப்பதுடன் அதே அளவு அபராதமாகவும் வசூலிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.&lt;br /&gt;சட்டத்தை மதிக்காத மூவரில் தமது குடும்பத்தினருக்கு மட்டும் அபராதம் விதித்தன் மூலம் குடும்பப் பாசத்தை வென்று காட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிறர் நலம் பேணல்&lt;/b&gt;ஆட்சித் தலைவர்களானாலும், ஆன்மீகத் தலைவர்களானாலும் ஊரை வளைத்துப் போடுவது, அவர்களின் தகுதிகளில் ஒன்றாகவே ஆகிவிட்டதை நாம் காண்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமக்காகவும், தமது கட்சிக்காகவும், இயக்கத்துக்காவும் பொது மக்களின் நிலங்களை வளைத்துப் போடுவதை எவ்வித உறுத்தலு மின்றி செய்து வருவதை நாம் காண்கிறோம். தமக்காக வளைத்துப் போடுவதில் ஒளிவு மறைவான போக்கைக் கடைப்பிடித்தாலும் தமது கட்சிக்காகவும், இயக்கத்திற்காகவும் இடங்களை வளைத்துப் போடுவதில் எவ்வித உறுத்தலும் அவர்களுக்கு இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகத் தலைவர்களின் மடங்களுக்காகவும் இத்தகைய நிலை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றில் ஒரு நிகழ்ச்சியைக் காணுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அபூதல்ஹா (ரலி) மதீனாவில் அதிக அளவு பேரீச்சை மரங்கள் வைத்தி ருந்ததன் காரணமாக அதிக வசதியுடையவராக இருந்தார். அவரது சொத்துக் களில் பைருஹா' எனும் தோப்பு அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு எதிரில் அமைந்திருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அங்கே அடிக்கடி சென்று, அங்குள்ள சுவையான தண்ணீரை அருந்துவது வழக்கம். இந்த நிலையில், 'நீங்கள் விரும்புவதிருந்து செலவு செய்யாத வரை நன்மையை அடையவே மாட்டீர்கள்' என்ற வசனம் (3:92) இறங்கியது. அப்போது அபூதல்ஹா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்புவதிருந்து செலவிடாத வரை நன்மையை அடையவே மாட்டீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். எனக்கு மிகவும் விருப்பமான சொத்து பைரூஹா எனும் தோப்பு தான். எனவே அது அல்லாஹ்வுக்காக தர்மமாக ஆகட்டும். அதன் நன்மையையும், பயனையும் அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன். எனவே நீங்கள் விரும்பும் வகையில் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' எனக் கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேண்டாம்! அது இலாபம் தரும் சொத்தாயிற்றே! அது இலாபம் தரும் சொத்தாயிற்றே! நீ கூறுவது எனக்கு விளங்குகிறது. அதை உமது உறவினர்க்கு நீர் அளிப்பதையே நான் விரும்புகிறேன்' என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறே செய்கிறேன்' என்றார். அதைத் தமது உறவினர்களுக்கும், தமது சிறிய தந்தையின் உறவினர்களுக்கும் வழங்கினார்.&amp;nbsp;இதை அபூதல்ஹா (ரலி) பராமரிப்பில் வளர்ந்த அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.&amp;nbsp;நூல் : புகாரி 1461, 2318, 2769, 4555, 5611&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்தது. அங்கு தான் இஸ்லாமிய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்று வந்தன. அந்தப் பள்ளிவாசலை ஒட்டிய சிறிய குடிசையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசித்தும் வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்றமாகவும், போர்ப் பயிற்சி அளிக்கும் இடமாகவும், அரசின் கருவூலமாகவும், தொழுகை நடத்தும் இடமாகவும், கைதிகளைப் பராமரிக்கும் இடமாகவும் அந்தப் பள்ளியின் வளாகம் அமைந்திருந்தது. ஒரு அரசின் அனைத்துப் பணிகளையும், ஆன்மீகப் பணியையும் நிறைவேற்றிட அந்த இடம் போதுமானதாக இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீடும் போதுமான பரப்பளவு கொண்டதாக இருக்கவில்லை. ஒருவர் தொழுதால் இன்னொருவர் தூங்க இடமிருக்காது என்பது தான் அவர்கள் வீட்டின் நிலை. (இது பற்றி முன்னர் விளக்கப்பட்டுள்ளது)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் பள்ளிவாசலுக்கு எதிரிலேயே மதிப்புமிக்க ஒரு சொத்து கிடைக்கிறது. அதுவும் அதன் உரிமையாளரால் மனப்பூர்வமாக அளிக்கப்படுகிறது. அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமையும் நபிகள் நாயகத்திடமே உரிமையாளரால் வழங்கப்படுகிறது. சுவையான தண்ணீரும் அதில் கிடைக்கிறது, அந்தத் தண்ணீரில் நபிகள் நாயகத்துக்கு நாட்டமும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் ஒருவர் மனமுவந்து அளிக்கும் அந்தத் தோப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கலாம். தமக்காக இல்லாவிட்டாலும், அரசு மற்றும் ஆன்மீகப் பணிகளுக்குத் தேவை என்ற அடிப்படையில் அதைப் பெற்றுக் கொண்டிருக்கலாம். பொதுவாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகில் இது போன்ற இடம் கிடைக்காது. யாரும் சொத்துக்களை விற்கவும் முன்வர மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், இதை அல்லாஹ்வுக்காக வழங்க முன் வருபவர் ஏழையாக இருக்கவில்லை. இதை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வதால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகப் போவதில்லை. அவரது சொத்துக்களைப் பொருத்த வரை இது சிறிய அளவே என்பதால் அவரது வாரிசுகளோ, உறவினர்களோ பாதிக்கப்பட மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இந்த மாமனிதர், இருக்கின்ற அந்த இடமும், குடிசையுமே போதும் என்று நினைத்தார்கள். முதல் உறவினரைத் தான் கவனிக்க வேண்டும் என்று தாம் போதனை செய்து வந்ததை, தமக்காக மாற்றிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. உமது உறவினருக்கே வழங்குவீராக' என்று வலியுறுத்தி, அவ்வாறே செய்யச் சொல்கிறார்கள். இவை அனைத்தையும் மேற்கண்ட நிகழ்ச்சியிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. அது இலாபம் தரும் சொத்தாயிற்றே என இரு முறை கூறி, அதற்குப் பதிலாக வேறு சொத்தைக் கொடுக்கலாமே என்ற அறிவுரையையும் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பண்பிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறர் சிரமப்படுவதைக் கண்டால் அதைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். இதுவும் நபிகள் நாயகத்தின் பண்பாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகத்தின் வீட்டு வாசலில் இரண்டு பேர் குரலை உயர்த்தி வாய்ச்சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தனது கடனில் சிறிதளவைத் தள்ளுபடி செய்யுமாறும், மென்மையாக நடக்குமாறும் கேட்டார். அதற்கு மற்றவர் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக இவ்வாறு நான் செய்ய மாட்டேன்' என்று கூறினார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உடனே வெளியே வந்து 'நன்மை செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர் யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் 'அல்லாஹ்வின் தூதரே! நான் தான்; இவர் எதை விரும்புகிறாரோ அதன்படியே செய்கிறேன்' எனக் கூறினார்.நூல் : புகாரி: 2705&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவருக்கு உதவ முடியாது என்று சத்தியம் செய்வதைக் கூட இந்த மாமனிதரால் ஏற்க முடியவில்லை.&lt;div&gt;&lt;br /&gt;மன்னரின் வீட்டருகில் இரண்டு பேர் சண்டையிட்டால் இருவரையும் விரட்டியடிக்குமாறு தான் கூறுவார்கள். ஆனால் இந்த மாமன்னரோ அது என்ன சண்டை என்று உன்னிப்பாகக் கவனித்து பலவீனமானவருக்குச் சார்பாக களமிறங்குவதைக் காண்கிறோம்.&lt;div&gt;&lt;br /&gt;இது போன்ற மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;கஃபு பின் மாலிக் (ரலி), இப்னு அபீ ஹத்ரத் (ரலி)க்கு கடன் கொடுத்திருந் தார். அந்தக் கடனை பள்ளிவாசலில் வைத்து திருப்பிக் கேட்டார். இருவரின் சப்தங்களும் உயர்ந்தன. தமது வீட்டில் இருந்த நபிகள் நாயகத்துக்கு இது கேட்டது. உடனே இருவரையும் நோக்கி வந்தார்கள். 'கஃபே!' என்று அழைத்த போது 'வந்தேன் அல்லாஹ்வின் தூதரே!' என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதி' என்பதை தமது கையால் சைகை செய்து காட்டி 'இந்த அளவு தள்ளுபடி செய்' என்றார்கள். 'அல்லாஹ்வின் தூதரே அவ்வாறே செய்கிறேன்' என்று கஃபு கூறினார். 'நீ சென்று கடனை அடைத்து விடு' என்று மற்றவரிடம் கூறினார்கள்.நூல் : புகாரி: 457, 471, 2418, 2424, 2706, 2710&lt;br /&gt;&lt;br /&gt;கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதையும், கடன் கொடுத்தவர் நல்ல நிலையில் இருப்பதையும் நபிகள் நாயகம் காண்கிறார்கள். பாதிக் கடனைத் தள்ளுபடி செய்தால் கடன் வாங்கியவர்ரால் திருப்பிச் செலுத்த முடியும் என்பதையும் உணர்ந்து அவ்வாறு பரிந்துரை செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற கொடுக்கல் வாங்கல் தகறாரின் போது நம்மைப் போன்ற சாதாரண மக்களே கண்டு கொள்ளாமல் ஒதுங்கிச் சென்று விடுவோம். முக்கியப் பிரமுகர்கள் என்றால் இது போன்ற காரியங்களை வேண்டாத வேலை என ஒதுக்கி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மாமன்னராகவும், மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் ஒருவர் சிரமப்படுவதைக் கண்ட பின் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து உதவுகிறார்கள்.&lt;div&gt;&lt;br /&gt;மக்கள் சிரமப்படுகிறார்கள் என்றால் போலி சம்பிரதாயங்களைக் கூறி மக்களைக் கஷ்டப்பட விடமாட்டார்கள். கஷ்டப்படுவோருக்கு உதவுவதற்குத் தடையாக மத நம்பிக்கை இருக்கக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அபூ மூஸா (ரலி) கூறுகிறார்:நான் சிறு கூட்டத்தினருடன் நபிகள் நாயகத்திடம் வந்து வாகனம் (ஒட்டகம் அல்லது குதிரை) கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'என்னிடம் வாகனம் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு வாகனம் எதையும் தர மாட்டேன்' எனக் கூறினார்கள். சிறிது நேரத்தில் அவர்களிடம் ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அஷ்அரி கோத்திரத்தைச் சேர்ந்த அந்தக் கூட்டத்தினர் எங்கே?' எனக் கேட்டார்கள். எங்களுக்கு உயர் தரமான ஐந்து ஒட்டகங்களைத் தந்தார்கள். நாங்கள் திரும்பச் சென்ற போது 'நாம் செய்த காரியத்தில் நமக்கு இறையருள் கிட்டாது' என்று கூறிக் கொண்டு நபிகள் நாயகத்திடம் வந்தோம். 'எங்களுக்கு வாகனம் தர முடியாது என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினீர்களே? அதை மறந்து விட்டு எங்களுக்கு வாகனம் தந்து விட்டீர்களே' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு வாகனம் தரவில்லை. அல்லாஹ் தான் தந்தான். நான் ஏதேனும் சத்தியம் செய்து விட்டு அதை விடச் சிறந்த காரியத்தைக் கண்டால் சத்தியத்தை முறித்து விட்டு சிறந்ததைத் தான் செய்வேன்' எனக் கூறினார்கள்.&lt;br /&gt;நூல் : புகாரி: 3133, 4385, 5518, 6623, 6649, 6680, 6718, 6731, 7555&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்பதற்கு மக்கள் எத்தனையோ தவறான நம்பிக்கைகளைக் கேடயமாக வைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் உதவி கேட்டால் இரவு நேரத்தில் பணத்தை வீட்டை விட்டு வெளியே கொண்டு போகக் கூடாது என்பார்கள். அல்லது இந்த நாளில் தர முடியாது, இந்த நேரம் நல்ல நேரம் இல்லை என்றெல்லாம் கூறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறருக்கு உதவாமல் இருப்பதற்காகத் தான் இது போன்ற நம்பிக்கைகளை உருவாக்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாமனிதரோ தம்மிடம் எந்த வாகனமும் இல்லாததால் தர முடியாது என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறி விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் ஒட்டகங்கள் வந்து சேர்ந்தன. ஒட்டகங்கள் வந்ததைப் பார்த்து விட்டு அந்த மக்கள் மீண்டும் தமது கோரிக்கையை முன் வைக்கவில்லை. நபிகள் நாயகம் தான் தாமாக அவர்களை அழைக்கிறார்கள்.&lt;br /&gt;உங்களுக்குத் தருவதற்கு என்னிடம் ஒட்டகங்கள் இப்போது வந்துள்ளன. ஆயினும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டதால் அதைத் தர முடியாத நிலையில் இருக்கிறேன் எனக் கூறினால் அந்த மக்கள் எவ்வித வருத்தமுமின்றி அந்தச் சமாதானத்தை ஏற்றிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கு உதவ மாட்டேன் என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்தாலும் அதை நிறைவேற்றத் தேவையில்லை என்பதால் அவர்களுக்கு ஒட்டகங்களைக் கொடுத்து அனுப்பினார்கள். நபிகள் நாயகம் செய்த சத்தியத்தை மறந்து விட்டு நமக்குத் தந்து விட்டார்களோ என்று எண்ணி அம்மக்கள் நினைவு படுத்திய போது 'தெரிந்தே தான் இவ்வாறு செய்தேன். நல்லது செய்வதற்குத் தான் இறைவன் பெயரைப் பயன்படுத்த வேண்டும். நல்லது செய்ய மாட்டேன் என்பதற்காகப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அதன் படி நடக்கத் தேவையில்லை. அதை விடச் சிறந்ததைத் தான் செய்ய வேண்டும். அது தான் எனது நிலை' என்று தெளிவுபடுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக தலைவர்கள் மக்கள் கருத்தை மதிப்பது கிடையாது. தாங்களாக ஒரு முடிவை எடுத்துக் கொண்டு மக்கள் மத்தியில் கருத்துக் கேட்பது போல் பாவனை செய்வார்கள். தலைவரின் கருத்துக்கு எதிர் கருத்துக் கூற இயல்பாகவே தயக்கம் ஏற்படும். இதைத் தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு மக்களின் கருத்தாக அதைக் காட்டிக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித் தான் அமைச்சரவைக் கூட்டங்களும், இயக்கங்களின் பொதுக் குழுக்களும் இயங்கி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த மாமனிதர் மக்களிடம் எந்த ஆலோசனை கேட்டாலும் மக்கள் சுதந்திரமாக கருத்துக் கூற எல்லாச் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹவாஸின் கூட்டத்தினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நபிகள் நாயகத்திடம் வந்தனர். தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை யும், தங்கள் கைதிகளையும் தங்களிடம் தர வேண்டும் என அல்லாஹ் வின் மீது சத்தியம் செய்து கோரிக்கை வைத்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உண்மை பேசுவது தான் எனக்கு மிகவும் விருப்பமானது. கைதிகள் அல்லது பொருட்கள் இரண்டில் ஒன்றைக் கேளுங்கள்' என்றார்கள். இரண்டில் ஒன்றைத் தான் நபிகள் நாயகம் திருப்பித் தருவார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்தவுடன் 'கைதி களையே நாங்கள் கேட்கிறோம்' என்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர் கள் முஸ்லிம்களைக் கூட்டினார்கள். அல்லாஹ்வை அவனது தகுதிக் கேற்ப புகழ்ந்தார்கள். பின்னர், 'உங்கள் சகோதரர்கள் திருந்தி வந்து விட்டனர். அவர்களின் கைதிகளை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க நான் விரும்புகிறேன். உங்களில் கைதிகளை அடிமைகளாகப் பெற்றவர் களில் யார் மனப்பூர்வமாக விட்டுத் தருகிறாரோ அவ்வாறே அவர் தரட்டும். அல்லது கைதிகளை விடுவித்து விட்டு எதிர் காலத்தில் முதன் முதலாக அல்லாஹ் தருவதிலிருந்து பெற்றுக் கொள்ள சம்மதிப்பவர் அவ்வாறு செய்யட்டும்' என்றார்கள். அப்போது அனைவரும் 'அல்லாஹ்வின் தூதருக்காக மனப்பூர்வமாக விட்டுத் தருகிறோம்' என்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உங்களில் இதை ஏற்பவர் யார்? ஏற்காதவர் யார்? என்பதை நம்மால் அறிய முடியவில்லை. நீங்கள் திரும்பச் சென்று நன்கு ஆலோசித்து உங்கள் பிரமுகர்கள் வழியாக முடிவைச் சொல்லி அனுப்புங்கள்' என்றார்கள். பின்னர் பிரமுகர்கள் வந்து 'அனைவரும் மனப்பூர்வமாக விட்டுத் தருகின்றனர்' எனக் கூறினார்கள்.நூல் : புகாரி: 2308, 2540, 2608, 3132, 4319, 2608&lt;br /&gt;&lt;br /&gt;ஹவாஸின் கூட்டத்தினர் தோல்வியடைந்த பின் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும், கைதிகளையும் நபிகள் நாயகம் முஸ்லிம் போர் வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டனர். போரில் பிடிக்கப்படுவோர் அடிமைகளாக நடத்தப்படுவது அன்றைய வழக்கம். அந்த அடிமைகளைத் தமது வேலைகளுக்காகவும் வைத்துக் கொள்ளலாம். அல்லது வசதியுள்ளவர்களிடம் விற்றும் விடலாம். இது அன்றைக்கு உலகம் முழுவதும் ஏற்கப்பட்ட நடைமுறையாக இருந்தது.&lt;br /&gt;அந்த அடிப்படையில் போர்க் கைதிகள் முஸ்லிம்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப் பட்ட பின்னர் ஹவாஸின் கூட்டத்தினர் திருந்தி வந்தனர். தங்கள் கைதிகளையும் கேட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தான் கைதிகளைப் பெற்றவர்கள் மனப்பூர்வமாக விடுதலை செய்யுமாறு மக்களிடம் நபிகள் நாயகம் கேட்கிறார்கள். அவ்வாறு விருப்பமில்லாதவர்கள் விடுதலை செய்து விட்டு அடுத்தடுத்த போர்களில் வெற்றி கிடைக்கும் போது இதற்கு ஈடானதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இரு திட்டங்களை முன் வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் மனப்பூர்வமாக விட்டுத் தர முன்வந்தனர். கூட்டத்தில் இவ்வாறு கூறுவதால் உண்மையிலேயே மனப்பூர்வமாக கூறுகிறார்களா என்பதை அறிய நபிகள் நாயகம் நினைக்கிறார்கள். திரும்பச் சென்று நன்கு ஆலோசனை செய்யச் சொல்கிறார்கள். மேலும் ஆலோசனை செய்து ஒவ்வொருவரும் நேரில் வந்து முடிவைக் கூறுங்கள் என்று கூறினால் அப்போது நபிகள் நாயகத்திடம் எதிர் கருத்து கூற தயக்கம் காட்டுவார்கள். எனவே தான் முடிவு செய்து பிரமுகர்கள் வழியாக உங்கள் முடிவைக் கூறுங்கள் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் எந்தத் தனி நபரும் தயக்கம் காட்டும் நிலை ஏற்படாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்கள் கருத்தை அறிய விரும்பி னால் இது போன்று தான் அறிய வேண்டும். அவர்கள் சுதந்திரமாகக் கருத்துக் கூறுவதற்கு ஏற்ப வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அளவுக்கு மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் நபிகள் நாயகம் மதித்துள்ளனர்.&lt;div&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் மீது யூதர்கள் சிலர் அவதூறு கூறினார்கள். இதை முஸ்லிம்களில் சிலரும் முன்னின்று மக்களிடம் பரப்பினார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாட்கள் மனம் உடைந்து போனார்கள். பின்னர் இது அவதூறு என்று தெரிய வந்ததும் அவதூறு கூறியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அவதூறு பரப்பியவர்களில் மிஸ்தஹ் என்பவரும் ஒருவர். இவர் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார். இவருக்கு ஆயிஷா (ரலி)யின் தந்தை அபூபக்ர் (ரலி) பொருளாதார உதவிகள் செய்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிஸ்தஹ் கூறியது அவதூறு என்று நிரூபிக்கப்பட்ட பின் அவருக்கு இனி மேல் உதவுவதில்லை என்று அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து முடிவு செய்தார். அப்போது தான் கீழ்க்கண்ட வசனம் அருளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;'உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். 'அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.(அல்குர்ஆன் 24:12)&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வசனம் அருளப்பட்ட பின் 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்று அபூபக்ர் (ரலி) கூறினார்.நூல் : புகாரி: 2661, 4141, 4750, 6679&lt;br /&gt;&lt;br /&gt;தமது மனைவியின் மீது களங்கம் சுமத்தும் போது தான் மனிதன் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறான். அவ்வாறு பழி சுமத்துவேரை எளிதில் யாரும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் நபிகள் நாயகத்தின் மனைவி மீது களங்கம் சுமத்தியவருக்கு உதவ மாட்டேன் என்று அபூபக்ர் (ரலி) சத்தியம் செய்த போது அது தவறு என்றும் அவருக்கு உதவுவதை நிறுத்த வேண்டாம் என்றும் இறைவனிடமிருந்து தமக்குச் செய்தி வந்ததாகக் கூறி உதவியைத் தொடரச் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறருக்கு உதவுவதைச் சடங்கோ, சம்பிரதாயமோ, முன் பகையோ, அவர் நமக்குச் செய்த தீங்கோ தடுக்கக் கூடாது என்பதில் நபிகள் நாயகம் எந்த அளவுக்கு உறுதியான நிலைபாட்டைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;b&gt;&lt;a href="http://www.onlinepj.com/" target="_blank"&gt;www.onlinepj.com&lt;/a&gt; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://iniyamaarkam.blogspot.in/2010/09/11.html" target="_blank"&gt;&lt;b&gt;http://iniyamaarkam.blogspot.in/2010/09/11.html&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-1718917445440776436?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/1718917445440776436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2012/02/14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/1718917445440776436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/1718917445440776436'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2012/02/14.html' title='மாமனிதர் நபி(ஸல்) - 14 (அரசுக் கருவூலத்திருந்து எதையும் அனுபவிக்கவில்லை)'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-1840221020906360497</id><published>2012-02-15T18:55:00.000-08:00</published><updated>2012-02-15T18:55:44.301-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நபி (ஸல்)'/><title type='text'>மாமனிதர் நபி(ஸல்) - 13 (அதிகாரத்தைப் பெற்று வரவில்லை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;இத்தகைய ஆன்மீகத்தினால் யாருடைய சுயமரியாதைக்காவது பங்கம் ஏற்படுமா? யாரேனும் சுரண்டப்பட முடியுமா?&amp;nbsp;எப்படி நடப்பது நல்லது என்று அறிவுரை கூறத் தான் இறைவனால் தேர்வு செய்யப்பட்டுள்ளேனே தவிர மறுமையில் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும் அதிகாரத்தைப் பெற்று வரவில்லை என்பதைப் பல முறை அவர்கள் தெளிவுபடுத்தி யுள்ளார்கள். அவர்களின் கீழ்க்கண்ட அறிவுரைகளைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அது பெரிய பாவம் என்பதையும் எடுத்துரைத்தார்கள். 'கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கணைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் மறுமை நாளில் தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து, 'அல்லாஹ்வின் தூதரே என்னைக் காப்பாற்றுங்கள்' என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் அப்போது காண வேண்டாம். (ஏனெனில்) 'உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று அப்போது நான் கூறி விடுவேன். கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தன் கழுத்தில் சுமந்து வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்) 'என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன் என்று அப்போது நான் கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியையும், தங்கத்தையும் சுமந்து கொண்டு வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்) 'என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று அப்போது நான், கூறி விடுவேன். அல்லது அசைகின்ற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து 'அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று அலறிய நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்), 'என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன் என்று அப்போது நான் கூறி விடுவேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.&lt;br /&gt;நூல் : புகாரி 1402, 3073&lt;br /&gt;&lt;br /&gt;எத்தகைய அக்கிரமத்தையும் நாம் செய்யலாம். செய்து விட்டு ஒரு ஆன்மீகக் குருவைப் பிடித்து, அவருக்கு தட்சணை கொடுத்து விட்டால், அவரிடம் ஆசி வாங்கி விட்டால் அல்லது அவரிடம் அருள்வாக்கு பெற்றால் எல்லாம் சரியாகி விடும் என்பது தான் பெரும்பாலான மக்களின் ஆன்மீக நம்பிக்கையாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளையடிப்பவர்கள், ஊழல் செய்வோர், சுரண்டுவோர் அதில் சிறு பகுதியைக் கடவுளுக்குக் காணிக்கை செலுத்தினால் தப்பித்துக் கொள்ள முடியும் என்று 20 ஆம் நூற்றாண்டிலும் நம்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஆன்மீகத்தால் யாருக்கு என்ன நன்மை? குற்றம் புரிவதை வாடிக்கையாகக் கொண்டவனை இத்தகைய நம்பிக்கைகள் திருத்துமா? ஒருக்காலும் திருத்தாது. மாறாக அவன் மேலும், மேலும் குற்றங்கள் புரிவதைத் தான் இந்த நம்பிக்கை உருவாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நம்பிக்கை அவனை மட்டும் பாதிப்பதில்லை. மற்றவர்கள் அவனது அக்கிரமத்தால் பாதிக்கப்படவும் இந்த நம்பிக்கை தான் காரண மாக அமைகிறது. போ ஆன்மீக குருமார்கள் பலவிதத்திலும் மக்களை ஏமாற்ற இந்த நம்பிக்கை தான் முழு முதற்காரணமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களை நல்வழிப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அவர்களை தீமை செய்யத் தூண்டுகிற ஒரு நெறி தேவை தானா? என்று அறிவுடையோர் விமர்சனம் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாமனிதரோ இது போன்ற விமர்சனங்கள் வரவே முடியாத அளவுக்கு அணை போடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் அதிகாரத்தின் மூலம் இவர் எந்தப் பலனையும் அடையாதது போல் ஆன்மீகத் தலைமையின் மூலமாகவும் எதையுமே அடையவில்லை; யாரையும் ஏமாற்றவில்லை என்று அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முரண்பாடினமை&lt;/b&gt;&lt;div&gt;&lt;br /&gt;எத்தனையோ துறைகளில் தலைமை தாங்குவோரை நாம் காண்கிறோம். அவர்கள் தமக்கே முரண்படுவதையும் காண்கிறோம். அதிலும் ஆன்மீகவாதிகள் மற்றவர்களை விட அதிக அளவில் தமக்குத் தாமே முரண்படுவதைக் காணமுடியும். ஆசையை அறுக்கச் சொல்வார்கள். அவர்கள் தான் அறுசுவையுடனும், அதிகமாகவும் சாப்பிடுவார்கள்.&lt;br /&gt;எளிமை, அடக்கம் பற்றிப் போதிப்பார்கள். தங்கள் கால்களில் மக்கள் விழுந்து எழுவதை விரும்புவார்கள்.&lt;br /&gt;ஆடையில் மாத்திரம் தான் வித்தியாசம் காட்டுவார்களே தவிர மற்ற விஷயங்களில் சராசரி மனிதனின் அளவுக்குக் கூட அவர்கள் பக்குவப்பட்டிருக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஏராளமான முரண்பாடுகளை ஆன்மீகத் தலைவர்களிடம் நாம் காண்கிறோம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும் முரண்பாடில்லாத ஒரே ஆன்மீகத் தலைவராகத் திகழ்கிறார்கள். இதுவரை நாம் எடுத்துக் காட்டிய அத்தனை நிகழ்ச்சிகளுமே இதற்குரிய ஆதாரங்களாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் முரண்பாடில்லாத தூய வாழ்க்கையை நம் கண் முன்னே நிறுத்தும் இன்னும் பல சான்றுகளும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அகில உலகுக்கும் ஒரே கடவுள் தான் இருக்கிறான். அந்த ஒரு கடவுளை ஏற்காமல் பல கடவுளை வணங்கினால் அவர்கள் மறுமையில் நரகத்தை அடைவார்கள் என்பது நபிகள் நாயகம் (ஸல்) போதித்த முக்கியக் கொள்கை. இஸ்லாத்தின் உயிர் நாடியான கொள்கையும் இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு கொள்கையைச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் எந்தக் கட்டத்திலும் முரண்பட்டதேயில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'என் தந்தை எங்கே இருக்கிறார்' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகத்தில்' என்றார்கள். அவர் கவலையுடன் திரும்பிச் சென்றார். அவரை மீண்டும் அழைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'என் தந்தையும், உன் தந்தையும் நரகத்தில் தான் இருப்பார்கள்' என்று கூறினார்கள்.&lt;br /&gt;நூல் : முஸ்லிம் 302&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி கேட்டவரின் தந்தை ஒரு கடவுளை நம்பாமல் சிலைகளைக் கடவுளாக கருதி வணங்கி வந்தார். அந்த நிலையிலேயே மரணித்தும் விட்டார். நபிகள் நாயகம் (ஸல்) கூறிய ஆன்மீக நெறியின் படி அவர் நரகத்தில் தான் இருப்பார் என்று தயக்கமின்றி விடையளிக்கிறார்கள். யாருடைய மனமும் புண்படக் கூடாது என்பதற்காக எந்த விதமான சமரசமும் அவர்கள் செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வந்தவர் நபிகள் நாயகத்தின் தந்தை பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. வேறு யாரும் இத்தகைய கேள்விகளைக் கேட்கவில்லை. ஆனாலும் வய வந்து 'தமது தந்தையும் நரகத்தில் தான் இருப்பார்' என்று கூறுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இது அவர்களின் மாசு மருவற்ற நேர்மைக்கும், கொள்கைப் பிடிப்புக்கும் எடுத்துக் காட்டாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி கேட்டவரின் தந்தை எவ்வாறு பல தெய்வ நம்பிக்கையுடையவரோ, அது போல் தான் நபிகள் நாயகத்தின் தந்தையும் இருந்தார். பல தெய்வ நம்பிக்கையுடையோரை இறைவன் நரகத்தில் தள்ளுவான் என்ற விதியில் எனது தந்தை என்பதற்காக எந்த விதி விலக்கும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தையைப் பற்றி மட்டுமின்றி தமது தாயாரைப் பற்றியும் இவ்வாறே அறிவிப்புச் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'என் தாயாரின் பாவங்களை மன்னிக்கும் படி பிரார்த்திக்க இறைவனிடம் நான் அனுமதி கேட்டேன். அவன் மறுத்து விட்டான்' என்று அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;நூல் : முஸ்லிம் 1621, 1622&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் தந்தையைப் போலவே தாயாரும் பல தெய்வ நம்பிக்கையுடையவராகவே இருந்து மரணித்திருந்தார். நபிகள் நாயகத்தின் தாயார் என்பதற்காக எவ்வித விதி விலக்கும் அளிக்கப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்துகிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆன்மீகத் தலைவர்கள் மற்றவர்களுக்கு விலக்கு அளிக்கிறார்களோ இல்லையோ தங்களுக்கு விலக்கு அளித்துக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதைப் போதித்தார்களோ அதற்கு மாற்றமாக நடப்பார்கள். யரேனும் கேள்வி எழுப்பினால் நாங்கள் தனிப் பிறவிகள் என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் 'இந்தக் கொள்கையை நான் மீறினாலும் எனக்குக் கிடைப்பது நரகமே' என்று தெளிவான வார்த்தைகளால் பிரகடனம் செய்தார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் தண்டனையை நான் அஞ்சுகிறேன் எனக் கூறுவீராக!&lt;br /&gt;அல்குர்ஆன் 6:15, 39:13, 19:15&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வசனங்கள் தமக்கு இறைவனிடமிருந்து வந்தவை என நபிகள் நாயகம் கூறினார்கள். மற்றவர்கள் எவ்வாறு இறைவனை வணங்கி வழிபடுவது அவசியமோ அது போல் நானும் அவனை வழிபட்டாக வேண்டும். ஆன்மீகத் தலைவர் என்பதால் உங்களுக்குக் கூறுவதை நான் கடைபிடிக்காது வாழ்ந்தால் உங்களைத் தண்டிப்பது போலவே என்னையும் இறைவன் தண்டிப்பான். இப்படித் தான் எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்று பிரகடனம் செய்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆன்மீகத் தலைமை காரணமாக எந்த விதிவிலக்கும் கிடையாது என்று அறிவித்த ஒரே தலைவராக அவர்கள் திகழ்கின்றார்கள். இதையும் கடந்து மற்றவர்களை விட நான் தான் ஆன்மீக நெறியைக் கூடுதலாகக் கடைபிடிப்பேன் எனவும் கூறி அதன் படி வாழ்ந்தும் காட்டினார்கள். இதைப் பின்வரும் செய்தியிருந்து அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமது கால்கள் வீங்கி விடும் அளவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) இரவில் நின்று வணங்குவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டால் 'நான் நன்றியுள்ள அடியானாக இருக்கக் கூடாதா?' என்பார்கள்.நூல் : புகாரி 1130, 4836, 6471&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;b&gt;அனைவருக்கு சம நீதி&lt;/b&gt;&lt;br /&gt;ஒரு மனிதனின் நேர்மையை உரசிப் பார்த்திட அனைவரையும் அவன் சமமாகக் கருதுகிறானா? என்பது முக்கியமான உரை கல்லாகும். குறிப்பாக ஆன்மீகத் தலைவர்களை இந்த உரை கல்லால் உரசிப் பார்ப்பது மிகவும் அவசியமாகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;தாமும் பக்குவப்பட்டு மற்றவரையும் பக்குவப்படுத்துவதாகக் கூறிக் கொள்வோரின் கண்களுக்கு செல்வாக்குமிக்கவனும், சாமான் யனும் சமமாகவே தென்பட வேண்டும். இன்னும் சொல்வதென்றால் பலவீனர்களிடம் அதிகம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அளவுகோன் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நூறு சதவீதம் தமது நடவடிக்கைகளை அமைத்திருந்தார்கள் என்பதற்கு மேலும் சில சான்றுகளைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;குரைஷ் கோத்திரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தார்கள். இந்தக் கோத்திரம் அன்றைய மக்களிடம் மிக உயர்ந்த கோத்திரமாக மதிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;குரைஷ் கோத்திரத்தின் உட்பிரிவான மக்ஸுமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷ் குலத்தவருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணின் திருட்டுக் குற்றத் திற்காக கைகள் வெட்டப்படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது) இது பற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும்' என்று கருதினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உஸாமா (ரலி) இது பற்றிப் பேசினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரைக்கிறீரா?' என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள், 'உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்' எனப் பிரகடனம் செய்தார்கள்.&lt;br /&gt;நூல் : புகாரி 3475, 3733, 4304, 6787, 6788&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பார்வையில் தமது குலத்தைச் சேர்ந்த பெண்மணியும், மற்றவர்களும் சமமாகவே தென்படுகிறார்கள். நபிகள் நாயகத்தின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவின் பரிந்துரையையும் கூட அவர்கள் ஏற்கத் தயாராகயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மிகப்பெரிய காரியங்களில் மட்டுமின்றி அற்பமான காரியங்களில் கூட மக்களை அவர்கள் சமமாகவே நடத்தியுள்ளனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பாத்திரத்தில் பால் கொண்டு வரப்பட்டது. அதில் சிறிதளவு அவர்கள் அருந்தினார்கள். அவர்களின் வலப்புறத்தில் குறைந்த வயதுடைய ஒரு இளைஞர் இருந்தார். இடப்பக்கம் பெரியவர்கள் பலர் இருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இளைஞரே! பெரியவர்களுக்கு முதல் கொடுக்க எனக்கு அனுமதி தருகிறீரா?' என்று கேட்டார்கள். அதற்கு இளைஞர் 'உங்கள் மூலம் எனக்குக் கிடைக்கும் பாக்கியத்தை மற்றவருக்கு நான் கொடுக்க மாட்டேன்' என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த இளைஞருக்கு முதல் கொடுத்தார்கள் மற்றவர்களுக்குப் பின்னர் கொடுத்தார்கள்.&lt;br /&gt;நூல் : புகாரி 2351, 2366, 2451, 2602, 2605, 5620&lt;br /&gt;&lt;br /&gt;அனஸ் (ரலி) வீட்டில் வளர்க்கப்பட்ட ஆட்டிலிருந்து பால் கறந்து நபிகள் நாயகத்திடம் கொண்டு வரப்பட்டது. அனஸ் (ரலி) வீட்டில் உள்ள கிணற்று நீர் அத்துடன் கலக்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரம் தரப்பட்டது. அதை அவர்கள் பருகினார்கள். அவர்களின் இடப் புறம் அபூபக்ர் (ரலி) இருந்தார். வலப் பக்கம் ஒரு கிராமவாசி இருந்தார். அந்தக் கிராமவாசிக்கு நபிகள் நாயகம் (ஸல்) முதலில் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சிய உமர் (ரலி) 'அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ருக்குக் கொடுங்கள்' என்றார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலப்புறம் இருந்த கிராமவாசிக்கு முதலில் கொடுத்தார்கள். மேலும் 'வலப்புறம் வலப்புறமாகத் தான் கொடுக்க வேண்டும்' எனவும் குறிப்பிட்டார்கள்.நூல் : புகாரி: 2352&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகத்தின் தோழர்களில் முதலிடம் பெற்றவர்கள் அபூபக்ர் (ரலி). தமக்கு அடுத்து அபூபக்ர் தான் என்று பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடையாளம் காட்டினார்கள். இதனால் தான் நபிகள் நாயகத்துக்குப் பின் அபூபக்ர் ஜனாதிபதியாகப் பொறுப்பு ஏற்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகத்துக்கு இடது புறத்தில் நபிகள் நாயகத்தின் உயிர்த் தோழர் அபூபக்ர் (ரலி) இருக்கிறார். வலது புறத்திலோ யாரெனத் தெரியாத கிராமவாசி இருக்கிறார். நபிகள் நாயகத்தின் அருகில் அமரத் தக்கவர்கள் என்ற தர வரிசை ஏதும் நபிகள் நாயகத்தால் வகுக்கப்படவில்லை. யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் நபிகள் நாயகத்தின் அருகில் அமரலாம். எவ்வளவு சாதாரணமானவராக அவர் இருந்தாலும் பிரச்சினையில்லை என்பது தான் அவர்கள் ஏற்படுத்திய நடைமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அடிப்படையில் வலது புறத்தில் கிராமவாசி அமர்ந்து கொண்டார். அபூபக்ர் (ரலி) இடது புறத்தில் தான் அமர முடிந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாலை விநியோகம் செய்யும் போது தமது நெருங்கிய தோழர் பக்கத்தில் இருக்கிறாரே என்பதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. அபூபக்ருக்கு அடுத்த தகுதியைப் பெற்ற உமர் (ரலி) சுட்டிக் காட்டிய பிறகும் அதை ஏற்கவில்லை. வலது புறத்திலிருந்து தான் எதையும் துவக்க வேண்டும் என்ற மிகச் சாதாரண விஷயமானாலும் அதிலும் நான் எவருக்காகவும் வளைந்து கொடுக்க முடியாது என்று தாட்சண்மின்றி அறிவித்து விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வலது புறத்தில் இருந்த கிராமவாசிக்கு அடுத்து அபூபக்ருக்கு கொடுத்தார்களா என்றால் அதுவுமில்லை. வலது புறம் வலதுபுறமாகத் தான் கொடுக்க வேண்டும் என்று கூறிவிடுகிறார்கள். அதாவது அந்தக் கிராமவாசிக்கு பின் அவரை அடுத்திருந்தவர், அதற்கடுத்தவர் என்ற முறையில் தான் கொடுப்பேன் என்கிறார்கள். இவ்வாறு கொடுத்தால் ஆகக் கடைசியில் தான் அபூபக்ருக்குக் கிடைக்கும். இதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒருவர் எதையும் பங்கிடுவதென்றால் தனது வலப்புறத்திருந்து ஆரம்பிக்க வேண்டும்; வலப்புறத்தை முடித்து விட்டுத் தான் இடப்பக்கத்தில் உள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சட்டம் வகுத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வலப் பக்கம் ஒரு இளைஞர் இருக்கிறார். இடப் பக்கமோ பிரமுகர்கள் இருக்கிறார்கள். பிரமுகர்கள் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இடப் பக்கத்தில் உள்ளவர்களுக்கு முதல் பாலைக் கொடுத்திருக்க முடியும். ஆனாலும் தாம் வகுத்த நல்விதியை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளவில்லை. அந்த இளைஞரின் அற்பத்திலும் அற்பமான உரிமையைக் கூட மதிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ அனுமதி தந்தால் பெரியவர்களுக்குக் கொடுக்கிறேன். நீ அனுமதி தராவிட்டால் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று வேண்டுகிறார்கள். அவர் விட்டுத் தர விரும்பவில்லை என்ற போது இந்த அற்பமான விஷயத்திலும் அவரது முன்னுரிமையை நிலை நாட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்ருப் போர் அன்று ஒரு ஒட்டகத்திற்கு மூவர் என்ற அடிப்படையில் பயணம் செய்தோம். நபிகள் நாயகத்துடன் அபூ லுபாபா, அ பின் அபீதாப் ஆகிய இருவரும் ஒட்டகத் தோழராக இருந்தனர். நபிகள் நாயகத்தின் முறை வந்த போது 'உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம்' என இருவரும் கூறினார்கள். 'நீங்கள் என்னை விட வலிமையானவரும் அல்லர். நான் உங்களை விட (இறைவனின்) கூலியில் தேவையற்றவனும் அல்லன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : அஹ்மத் 3706, 3769, 3807, 3834&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய வரலாற்றில் திருப்பு முனை ஏற்படுத்திய போர் பத்ருப் போர். நபிகள் நாயகம் (ஸல்) தலைமை தாங்கி நடத்திய இந்த முதல் போர் மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் நடந்தது. முஸ்லிம்கள் மிகவும் வறுமையில் இருந்த நேரம். எண்ணிக்கையிலும் குறைவாக இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 300 பேர் தான் நபிகள் நாயகத்தின் படையில் இருந்தனர். எதிரிகளின் படை மூன்று மடங்காக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னூறு பேருக்கும் சேர்த்து சுமார் நூறு ஒட்டகங்கள் மட்டுமே இருந்ததால் ஒரு ஒட்டகத்திற்கு மூவர் என்ற அடிப்படையில் பயணம் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஒட்டகத்திற்கு மூவர் என்ற விதியிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துக் கொண்டிருந்தால் யாரும் அதைத் தவறாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இஸ்லாமிய அரசின் தலைவராக இருந்தார்கள். இப்போரில் தளபதியாகவும் இருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீகத் தலைவராகவும் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மூன்று தகுதிகளுக்காக தமக்கு மட்டும் தனியாக ஒரு ஒட்டகத்தை ஒதுக்கிக் கொள்வதை எந்த முஸ்லிமும் தவறாக நினைக்க மாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த மாமனிதரோ மற்றவர்களுக்கு எவ்வாறு வாகன ஒதுக்கீடு செய்தார்களோ அதையே தமக்கும் ஒதுக்கிக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கும் எத்தனையோ ஆன்மீகத் தலைவர்களைப் பார்க்கிறோம். அவர்கள் தமது ஆசனத்தில் சற்று ஒதுக்கி இன்னெருவருக்கு, இடம் தர மாட்டார்கள். அவர்கள் ஆசனத்தில் மட்டுமின்றி அவர்கள் ஆசனத்திற்குச் சம உயரத்தில் இன்னொருவருக்கு ஆசனம் அளிப்பதில்லை. மாறாக தாம் மட்டும் உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டு மற்றவர்களைத் தாழ்வான இடத்தில் அமரச் செய்து ஆணவத்தைக் காட்டுவார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அற்பமான இந்தத் தலைவர்களே இப்படி நடக்கும் போது, உயிரையும் அர்ப்பணிக்கும் தொண்டர்களைப் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு உயரத்தில் அமர வேண்டும்? ஆனாலும் ஒரு ஒட்டகத்துக்கு மூவர் என்ற மற்றவர்களுக்குச் சமமான நிலையை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் உள்ளம் பக்குவப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போர்த் தளவாடங்கள், தட்டுமுட்டுச் சாமான்களுடன் ஒரு ஒட்டகத்தில் மூவர் ஒரு நேரத்தில் பயணம் செய்ய முடியாது. எனவே இருவர் ஒட்டகத்தில் ஏறிச் செல்லும் போது ஒருவர் ஒட்டகத்தைப் பிடித்து வழிநடத்திச் செல்ல வேண்டும் எனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தொலைவு வந்ததும் நடப்பவர் ஒட்டகத்தில் ஏறிக் கொள்ள ஒட்டகத்தில் இருப்பவர் இறங்கிக் கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் முறை வந்த போது, மற்ற இருவரும் அதை ஆட்சேபிக்கின்றனர். 'உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம். நீங்கள் ஒட்டகத்திருந்து இறங்க வேண்டாம்' எனக் கூறுகின்றனர். இதை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்கவில்லை. மற்ற இருவரும் தத்தமது முறை வரும் போது எவ்வாறு நடந்தார்களோ அது போல் அவர்கள் இருவரையும் ஒட்டகத்தில் ஏற்றி விட்டு ஒட்டகத்தை வழிநடத்தி நடந்து செல்லும் இந்த அற்புத வரலாற்றைப் பார்க்கும் எந்த முஸ்லிமும் இம்மாமனிதரைத் தலைவராகப் பெற்றமைக்காக பெருமிதம் கொள்வார். இதற்காக மற்றவர்கள் முஸ்லிம்கள் மீது பொறாமைப்படும் அளவுக்கு அற்புதமான தலைவராகத் திகழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் நடந்து சென்றது மட்டுமின்றி அதற்கு அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளத் தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;யார் யார் எவ்வளவு சிரமப்படுகிறார்களோ அதற்கேற்பவே மறுமையில் இறைவனின் பரிசு கிடைக்கும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஆன்மீகத் தலைவர்கள் எதை போதிக்கிறார்களோ அதில் மற்றவர்களை விட குறைவான நம்பிக்கையுடையவர்களாகத் தான் இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் ஆன்மீகத்தின் பின்னே சுய லாபம் மறைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ எந்தச் சந்தர்ப்பத்திலும் தாம் போதித்த ஆன்மீக நெறியை மற்றவர்களை விட அதிகம் பின்பற்றக் கூடியவர்களாக இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுமையில் இறைவனிடம் பரிசு பெறும் போது உங்கள் இருவரையும் விட குறைவான தியாகம் செய்தவனாக நான் நிற்க மாட்டேன். எனவே உங்களைப் போலவே என் முறை வரும் போது நானும் நடந்து, உங்களுக்குக் கிடைக்கும் அதே பரிசைப் பெறுவேன் என்பது தான் அவர்கள் கூறிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பழுக்கற்ற பரிசுத்த வாழ்க்கை வார்ந்தார்கள் என்பதை அனைவரும் அறிவர். சந்தேகத்தின் சாயல் கூட தம்மீது படியக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சரியாகத் தான் நடக்கிறேன். எவருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்று சாதாரண இயக்கங்களுக்குத் தலைமை தாங்குபவர்களே நினைக்கிறார்கள். மக்களிடம் எது குறித்து சந்தேகம் நிலவுகிறதோ அதை நீக்கும் கடமை தமக்கு இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைப் பற்றி எந்தச் சந்தேகம் வந்தாலும் மக்களிடம் உடனே தெளிவுபடுத்துவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதம் கடைசி பத்து நாட்களில் பள்ளிவாசலிலேயே தங்கி விடுவார்கள். அப்போது அவர்களைக் காண அவர்களின் மனைவி சஃபிய்யா (ரலி) வந்தார். நபிகள் நாயகத்திடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் புறப்படலானார். அவருடன் நபிகள் நாயகமும் உடன் வந்து பள்ளியின் வாசல் வரை வந்தனர். அப்போது இரண்டு மனிதர்கள் நபிகள் நாயகத்துக்கு ஸலாம் கூறி விட்டு நபிகள் நாயகத்தைக் கடந்து சென்றனர். அப்போது அவ்விருவரையும் நோக்கி 'அப்படியே நில்லுங்கள்' என்று நபிகள் நாயகம் கூறிவிட்டு, 'இவர் என் மனைவி சஃபிய்யா' என்றார்கள். இது அவ்விருவருக்கும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தியது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மனிதர்களின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் உங்கள் உள்ளங்களில் தீய எண்ணத்தை விதைத்து விடுவான் என்று அஞ்சியே இதை உங்களிடம் கூறினேன்' என்றார்கள்.&lt;br /&gt;நூல் : புகாரி: 2035&lt;br /&gt;&lt;br /&gt;அவ்விருவரும் நபிகள் நாயகத்தைக் கண்டு ஸலாம் கூறிவிட்டுத் தான் சென்றார்கள். அவர்களின் மனதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. பின்னர் ஷைத்தான் தனது வேலையைக் காட்டுவான். நபிகள் நாயகம் பேசிக் கொண்டிருந்தார்களே அந்தப் பெண் யாராக இருக்கும் என்ற எண்ணத்தை விதைத்து விடுவான் என்று அஞ்சி தெளிவுபடுத்தி விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தேகத்தின் சாயல் கூட தம்மீது படியக் கூடாது என்பதில் இந்த அளவுக்குத் தூய்மையாக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று முதல் இன்று வரை ஆன்மீகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் எந்த அடிப்படையில் மதிக்கப்படுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தினால் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணவம் எந்த அளவுக்கு அதிகமாகவுள்ளதோ அந்த அளவுக்கு தலைவர்கள் மதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண மக்களிடம் வெறுக்கத் தக்கதாகக் கருதப்படும் ஆணவமும், மமதையும் தலைவர்களிடம் இருந்தால், வீரமெனவும், துணிச்சல் எனவும் வர்ணிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண மக்களிடம் ஏமாற்றும் பண்பு இருந்தால் அதை வெறுக்கின்ற மக்கள், நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் பண்பு தலைவர்களிடம் இருந்தால் அதை ராஜதந்திரம் எனக் கருதுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண மனிதனிடம் இருக்கக் கூடாது எனக் கருதப்படும் ஆடம்பரமும், படாடோபமும் தலைவர்களிடம் இருந்தால் அதுவே பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர்கள் எதனால் மதிக்கப்படுகிறார்கள் என்று கவனித்தால் தீய பண்புகளால் தான் மதிக்கப்படுவதைக் காணலாம்.&lt;br /&gt;தலைவர்களிடம் காணப்படும் லஞ்சம், ஊழல், விபச்சாரம் போன்ற எந்தத் தீய செயல்களின் காரணமாகவும் தலைவர்கள் வெறுத்து ஒதுக்கப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தீய செயல்களைச் செய்தாவது நூறு பேருக்குத் தெரிந்த முகமாக ஆவது மட்டுமே தலைவர்களுக்குரிய ஒரே தகுதியாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஆன்மீகத் தலைவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வேறுபாடு பார்க்கப்படுவதில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே தமது நற்பண்புகளுக்காவும், நன்னடத்தைக்காகவும் பாராட்டப்படும் தகுதியைப் பெற்றுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்மைப் பாதிக்கும் விஷயமானாலும் நீதியை நிலை நாட்டத் தவறவில்லை. தனது நாட்டின் பிரஜையை ஒட்டகத்தில் ஏற்றி ஒட்டகத்தைப் பிடித்து நடந்து செல்வதற்கு கொஞ்சமும் வெட்கப்படவில்லை. நபிகள் நாயகத்திற்கு நீதி என்றால் நீதி தான். இதில் எந்தச் சமரசமும் கிடையாது என்பதற்கு இது தெளிவான சான்றாக உள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;b&gt;குடும்பத்தினருக்கு சலுகை காட்டவில்லை&lt;/b&gt;&lt;br /&gt;அரசியல் தலைவர்களானாலும், ஆன்மீகத் தலைவர்களானாலும் அவர்கள் எவ்வளவு தான் நேர்மையாக நடக்க முயன்றாலும் அவர்கள் தமது குடும்பப் பாசத்தின் முன்னே தோற்றுப் போய் விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தரும் நெருக்கடியின் காரணமாக தமது கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக நடக்க ஆரம்பித்து விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைவரும் தோற்று விடக்கூடிய இந்த இடத்திலும் வெற்றி பெற்றார்கள். அவர்களின் குடும்பப் பாசமோ, உறவினர்கள் மீது அவர்களுக்கு இருந்த அன்போ அவர்களைச் சிறிதும் தடம் புரளச் செய்ய இடம் தரவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி). நபிகள் நாயகத்தின் ஒன்று விட்ட பெரிய தந்தை ரபீஆ என்பவர். இவ்விருவரும் ஒரு நாள் சந்தித்தனர். இவ்விருவரும் தத்தமது மகன்களுக்காக (அப்பாஸின் மகன் ஃபழ்லு, ரபீஆவின் மகன் அப்துல் முத்தப் ஆகியோருக்காக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வேலை கேட்டு அனுப்ப முடிவு செய்தனர். ஸகாத்தை வசூக்கும் பணியில் இருவருக்கும் வேலை கேட்டு நபிகள் நாயகத்திடம் அனுப்புவது என்று முடிவு செய்தனர். இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையின் மகனும், மருமகனுமான அலீ (ரலி) வந்து 'வேலை கேட்பதற்காக நபிகள் நாயகத்திடம் இவ்விருவரையும் அனுப்பாதீர்கள்! நபிகள் நாயகம் அவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள்' என்று தடுத்தார். 'நபிகள் நாயகத்தின் மருமகன் என்ற உறவின் காரணமாகவும், எங்கள் மீது கொண்ட பொறாமையின் காரணமாகவுமே இதைத் தடுக்கிறீர்கள்' என்று அயிடம் ரபீஆ கூறினார். 'அப்படியானால் இருவரையும் நபிகள் நாயகத்திடம் வேலை கேட்டு அனுப்புங்கள்' என்று அலீ (ரலி) கூறினார். இருவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மனிதர்களிலேயே அதிகம் நன்மை செய்பவராகவும், உறவினர்களுக்கு அதிகம் உதவுபவராகவும் இருக்கிறீர்கள். எங்களுக்கோ திருமண வயதாகி விட்டது. எனவே ஸகாத் நிதியை வசூக்கும் பணியில் எங்களையும் நியமியுங்கள்! மற்றவர்கள் வசூப்பது போல் நாங்களும் வசூத்துத் தருவோம். மற்றவர்களுக்குக் கிடைப்பது போல் எங்களுக்கும் கிடைக்கட்டும்' என்று முறையிட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஸைனப் அவர்கள் 'இவ்வாறு கோரிக்கை வைக்க வேண்டாம்' என்று சாடை காட்டினார்கள். நீண்ட நேரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். பின்னர் 'ஸகாத் என்பது மக்களின் அழுக்குகளாகும். அவை முஹம்மதின் குடும்பத்திற்குத் தகுதியானது அல்ல' என்று கூறினார்கள். பின்னர் இரண்டு நபித் தோழர்களை அழைத்து இவ்விருவருக்கும் பெண் கேட்டு மணமுடித்துக் கொடுத்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)&amp;nbsp;நூல் : முஸ்லிம் 1784&lt;br /&gt;&lt;br /&gt;ஸகாத் நிதியை, தாமோ, தம்முடைய குடும்பத்தினரோ சாப்பிடுவது பாவம் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் செய்திருந்தார்கள்.&lt;br /&gt;(நாளை தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;b&gt;&lt;a href="http://www.onlinepj.com/" target="_blank"&gt;www.onlinepj.com&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;a href="http://iniyamaarkam.blogspot.in/2010/09/10.html" target="_blank"&gt;http://iniyamaarkam.blogspot.in/2010/09/10.html&lt;/a&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-1840221020906360497?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/1840221020906360497/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2012/02/13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/1840221020906360497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/1840221020906360497'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2012/02/13.html' title='மாமனிதர் நபி(ஸல்) - 13 (அதிகாரத்தைப் பெற்று வரவில்லை)'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-1934693755554298890</id><published>2012-02-12T08:09:00.000-08:00</published><updated>2012-02-12T08:11:52.431-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அல்-குர்ஆன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வழிபாடு'/><title type='text'>குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span id="goog_214984350"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;உலகில் மக்களை நல்வழிப் படுத்துவதாகக் கூறி சிறப்பான வேதங்கள் என்று பலரும் பல வேதங்களை தங்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டு வழிபாடுசெய்கிறார்கள். &lt;span id="goog_214984358"&gt;&lt;/span&gt;ஆனால் &lt;span id="goog_214984359"&gt;&lt;/span&gt;அந்த வேதங்களில் தவறுகளும், அசிங்கங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படுவதை பார்ப்பவர்கள் அவதானிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய உலகில் பல தரப்பினராலும் பல வகையான விமர்சனங்களுக்கும் உற்படுத்தப்படும் ஒரு வேதமாக திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத, இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியையும், வேகத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத பலர் இஸ்லாத்திற்கெதிராக தங்கள் விஷமக் கருத்துக்களை பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இந்த அனைத்து விமர்சனங்களையும் தாண்டி இஸ்லாம் தான் தூய்மையான மார்க்கம் என்று உலகமே ஒத்துக் கொள்ளும் அளவிற்கு தன்னைத் தானே உண்மைப் படுத்தும் வேதமாக புனித மிக்க திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முஸ்லீம்களும், திருமறைக் குர்ஆனும் ஓர் சமூகவியல் ஒப்பீடு.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நாட்களில் திருமறைக் குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்டிருக்கும் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சிந்திக்கும் போது அவர்களின் நிலை மிகவும் கவலைக்குறியதாகவே காணப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்றால் இறைவனிடமிருந்து வந்த வஹியை தம் கரங்களில் வைத்துக் கொண்டிருக்கும் நமது சமுதாய சொந்தங்கள் அதைப் பற்றிய உண்மையான கண்ணியத்தைப் புரிந்து அதற்குறிய உரிமையைக் கொடுப்பதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;# வயதில் மூத்த பலருக்கு இன்றும் குர்ஆன் ஓதத் தெரியாத அவல நிலை காணப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;# வருடத்தில் ஒரு தடவை கூட குர்ஆனைத் திறக்காத பலர் நம் சமுதாயத்தில் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;# ரமழான் மாதத்தில் மாத்திரம் குர்ஆனை முற்படுத்தி விட்டு மற்ற 11 மாதங்களும் அதை மறந்து வாழ்வோர் நம்மில் பலர்.&lt;br /&gt;&lt;br /&gt;# மரணித்தவர்களுக்கு மாத்திரம் குர்ஆனை ஓதி (பித்அத்தை செய்து பாவத்தை சுமந்து) விட்டு காலம் கழிப்பவர்கள் பலர்.&lt;br /&gt;&lt;br /&gt;# குர்ஆன் சாதாரண மக்களுக்கு புரியாது 64 கலைகள் படித்த அறிஞர்களுக்குத் தான் புரியும் என்று கூறி இன்றும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;# குர்ஆனை உழு செய்து விட்டுத்தான் தொட வேண்டும், உழூ இல்லாதவர்கள் தொடக் கூடாது என்று கூறி ஓத நினைப்பவர்களுக்கும் தடை போடுபவர்கள் நிறையவே உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் திருமறைக் குர்ஆனும் நபியர்களின் வாழ்வும் திருமறைக் குர்ஆனின் முக்கியத்துவம் தொடர்பாக பல ஆழமான கருத்துக்களை முன்வைத்திருப்பதை ஏனோ இந்த இஸ்லாமிய சமுதாயம் புரிந்து கொள்வதில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;திருமறைக் குர்ஆன் தொடர்பாகவும், அதனை ஓதுவது தொடர்பாகவும் இஸ்லாம் முன்வைக்கம் கருத்துக்களைப் பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒட்டகங்களுக்கு ஈடாகும் வசனங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமறைக் குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தின் பெருமானத்தைப் பற்றியும் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் மிகவும் அருமையாக தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். "உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம், புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்'' என்று பதிலளித்தோம். "உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதா? அவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது'' என்று சொன்னார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி), நூல் : முஸ்லிம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வசனத்தை ஓதுவதற்கும் ஒவ்வொரு ஒட்டகங்கள் கிடைப்பது சமனானது என நபியவர்கள் தெரிவிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு நிறைவான பலன்கள் கிடைக்கும் திருமறைக் குர்ஆனை ஓதுவதற்கு நம்மில் எத்தனை பேர் ஆர்வம் காட்டுகின்றோம். அதன் வசனங்களை படித்து விளங்க வேண்டும், அதன் மூலம் இம்மை மறுமை பயன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;வேதப் புத்தகமாக, வாழ்கை வழிகாட்டியாக இறக்கப்பட்ட திருமறைக் குர்ஆன், பக்திப் பரவசத்தோடு பார்க்கப்படுகிறதே தவிர படிக்கப்படவில்லை. தூசு தட்டி கண்ணாடிப் பெட்டிகளில் வைத்துப் பாதுகாப்பவர்கள்,தூய்மையான வேதத்தை படித்துணர ஆசைப்படுவதில்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எந்த வேதத்திற்கும் இல்லாத “எழுத்துக்குப் பத்து நன்மை” என்ற பெருமை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமறைக் குர்ஆனை ஓதுபவருக்கு வசனத்திற்கு ஒரு ஒட்டகம் கிடைப்பதைப் போல் ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகளையும் இறைவன் அள்ளித் தர தயாராக இருப்பதாக நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் - என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : திர்மிதி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எழுத்தை ஓதினால் கூட பத்து நன்மைகளை இறைவன் அதன் மூலம் நமக்கு வழங்குவதாக நபியவர்கள் கூறுகின்றார்கள். உதாரணமாக ஓரிடத்தில் இருக்கும் போது திருமறைக் குர்ஆனின் பத்து வசனங்களை நாம் ஓதினால் அந்த வசனங்களில் இருக்கும் ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் என்ற அடிப்படையில் பல்லாயிரக் கணக்கான நன்மைகளை அள்ளித் தருவதற்கு இறைவன் தயாராக இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நன்மைகளையெல்லாம் பெற்றுக் கொள்வதற்கு நாம் எத்தனை தடவைகள் முயற்சி செய்திருப்போம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வானவர்களுடன் இருக்கும் மனிதராக.............&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனின் தூதர்களான வானவர்கள் (மலக்குகள்) நம்முடன் இருக்கும் பாக்கியம் கிடைப்பது என்பது உண்மை முஃமினுக்கு எவ்வளவு சந்தோஷமான செய்தியாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தாலே உள்ளம் குளிர்ந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நபியவர்களின் நற்செய்தியைப் பாருங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்கள் : முஸ்லிம், திர்மிதி&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எழுமிச்சையானவரா? பேரிச்சையானவரா? அல்லது குமட்டிக் காயானவரா?&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதுபவருக்கும், நல்லவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதாமல் இருப்பவருக்கும், தீயவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதுபவருக்கும், தீயவராகவும் இருந்து கொண்டு குர்ஆனையும் ஓதாமலும் இருப்பவருக்கும் உவமானம் என்னவென்பதை பிரித்துப் பிரித்து உதாரணம் கூறி நபியவர்கள் தெளிவுபடுத்தும் காட்சியைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும்நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனைநன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது.&amp;nbsp;அறிவிப்பவர் : அபூமூஸல் அஷ்அரீ (ரலி), நூல் : புகாரி (5020)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொறாமைப் பட்டு நன்மை செய்யுங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் பொறாமை என்ற கெட்ட குணத்தை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றது. ஆனால் இரண்டு விஷயங்களில் தாராளமாக பொறாமைப் படலாம்,பொறாமைப்பட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அதில் ஒன்றாக திருமறைக் குர்ஆன் ஓதப்பட வேண்டும் என்பதையும் நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.&lt;br /&gt;அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : புகாரி (5025)&lt;br /&gt;&lt;br /&gt;திருமறைக் குர்ஆனுடன் ஒட்டி வாழ்பவர்களைப் பார்த்து நாமும் பொறாமைப் பட்டு அவர்களைப் போல் திருமறைக் குர்ஆனை நமது வாழ்வில் இணைத்து குர்ஆனிய வாழ்க்கை வாழ முற்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அமைதி இறங்கும். அருள் வானவர்களும் சூழ்ந்து கொள்வார்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் ஆலையமான பள்ளியில் திருமறைக் குர்ஆனுடன் தொடர்பு வைப்பவர்கள் தொடர்பாக விரிவாகப் பேசும் ஒரு செய்தியைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் கூடி அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் அதை ஓதிக் காட்டி, பாடம் படிக்கும் போது அமைதி அவர்கள் மீது இறங்காமல் இருக்காது. அவர்களை அருள் அரவணைத்துக் கொள்கின்றது. மலக்குகள் அவர்களைச் சூழ்ந்து விடுகின்றனர். குர்ஆன் ஓதும் அவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம் நினைவு கூர்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="goog_214984378"&gt;&lt;/span&gt;திருமறைக் குர்ஆனை கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது, அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது போன்ற விஷயங்கள் அனைத்தும் இம்மை, மற்றும் மறுமையில் அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும் செயல்பாடுகளாகும். இதனடிப்படையில் இறைவனின் இறுதி வேதமான புனித திருக் குர்ஆனை நமது வாழ்வில் எடுத்து நடந்து குர்ஆனிய சமுதாயமாக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக! &lt;span id="goog_214984362"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_214984367"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_214984373"&gt;&lt;/span&gt;Rasmin. M&lt;span id="goog_214984370"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_214984371"&gt;&lt;/span&gt;ISC&lt;span id="goog_214984379"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_214984374"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_214984368"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_214984363"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_214984364"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_214984365"&gt;&lt;/span&gt;&lt;a href="http://draft.blogger.com/"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-1934693755554298890?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/1934693755554298890/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2012/02/blog-post_12.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/1934693755554298890'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/1934693755554298890'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2012/02/blog-post_12.html' title='குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள!'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-6216308166590628030</id><published>2012-02-07T18:49:00.000-08:00</published><updated>2012-02-07T18:51:56.583-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவலங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆய்வுகள்'/><title type='text'>வாஸ்து சாஸ்திரம் என்ற பித்தலாட்டம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;முஸ்லிம்களில் அறிவீனர்கள் செய்யும் செயலை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தக்கூடாது. இஸ்லாம் ஆதரிக்கிறதா என்பதைத் தான் கவனிக்க வேண்டும். கடவுளை நம்புவோர்&amp;nbsp;மனிதனை விட கடவுளுக்கு அறிவு அதிகம் என்பதை நம்ப வேண்டும். நீங்கள் ஒரு கொலை செய்து விடுகிறீர்கள். அதற்காக உங்களுக்குத் தூக்குத் தண்டனையோ,  ஆயுள் தண்டனையோ விதிக்கப்படுகிறது. உடனே நீங்கள் உங்கள் வீட்டின் அமைப்பை மாற்றி அமைக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றி அமைக்கப்பட்ட வீட்டைப் பார்த்து விட்டு இவர் வீட்டை மாற்றி அமைத்துள்ளதால் இவரது தண்டனையை ரத்துச் செய்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பளித்தால் அவருக்கு மறை கழன்று விட்டது எனக் கூறுவோம். உலகமே கை கொட்டிச் சிரிக்கும். வாஸ்து சஸ்திரத்தை நம்புபவர்கள் இறைவனை இத்தகைய நிலையில் தான் நிறுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மனிதனைப் பொருத்தே அவனுக்கு ஏற்படும் நன்மை - தீமைகளை ஏக இறைவன் நிர்ணயம் செய்கிறான். இந்த ஆளுக்கு இது தான் என இறைவன் தீர்மானம் செய்து விட்ட பிறகு வீட்டை மாற்றுவதால், வீட்டின் அமைப்பை மாற்றுவதால், அணிந்திருக்கும் ஆடையை மாற்றுவதால் இவர் வேறு ஆள்' என்று இறைவன் நினைத்து ஏமாந்து போவான் என்று நம்புகிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனைப் பற்றிய இவர்கள் நம்பிக்கை இது தான் என்றால் இதை விட நாத்திகர்களாக அவர்கள் இருந்து விட்டுப் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஐயா! என் பெயரை மாற்றிக் கொண்டதால், அதிஷ்டக்கல் மோதிரம் அணிந்துள்ளதால் என்னைத் தண்டிக்காதீர்கள்!' என்று நீதிபதியிடம் ஒரு குற்றவாளி முறையிட்டால் தப்பித்து விட முடியாது எனும் போது நுண்ணறிவாளனான இறைவனிடம் எப்படி இது போன்ற கிறுக்குத்தனங்களால் தப்பிக்க இயலும்? நமக்கென விதிக்கப்பட்ட நன்மைகளும் இப்படித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வீட்டுக்கு இரண்டு ஜன்னல்கள் இருக்கும் போது உங்களுக்கு ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனுப்புகிறார்.அன்றைய தினம் தான் ஒரு ஜன்னலை வாஸ்துப் படி அடைக்கிறீர்கள். உங்களுக்கென அனுப்பட்ட தொகையை அவர் உங்களிடம் தராமல் திரும்பி விடுவாரா? பணம் ஆளுக்குத் தானே தவிர ஜன்னலுக்கு அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண மனிதனே இவ்வளவு தெளிவாக விளங்கும் போது, இறைவனுக்கு இது விளங்காது;ஏமாந்து விடுவான் என எண்ணுவது என்னே பேதமை!&lt;br /&gt;&lt;br /&gt;நமது தமிழகத்தைப் பொருத்த வரை 95 சதவிகிதம் கட்டிடங்கள் எல்லாவிதமான சாஸ்திரங்களும் பார்க்கப்பட்ட பிறகே கட்டப்படுகின்றன. வாஸ்து சாஸ்திரம் உண்மை என்றால்95 சதவிகிதம் பேர் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் பத்து சதவிகிதம் பேர் கூட நிம்மதியாக இல்லை. வாஸ்து சாஸ்திரம் பித்தலாட்டம் என்பதற்கு இது ஒன்றே நிதர்சனமான சான்றாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வாஸ்து நிபுணர் என்ற ஃபிராடு பேர்வழிகள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். ஒரு கட்டடம் இப்படி இருந்தால் இன்ன விளைவு ஏற்படும் என்பதை இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே இவர்களிடம் இதைக் கூறினாரா? நிச்சயமாக இல்லை. எவனோ ஒருவன் உளறி வைத்ததைப் பிழைப்புக்கு உதவுவதால் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தை நம்பும் ஒருவன் எந்த நிமிடம் இத்தகைய கிறுக்குத் தனங்களை நம்புகிறானோ அந்த நிமிடமே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான். உலகில் தான் முஸ்லிம்கள் கணக்கில் இவன் சேர்க்கப்படுவானே தவிர இறைவனிடத்தில் இறைவனை விபரங்கெட்டவனாகக் கருதிய குற்றத்தைச் செய்தவனாவான். அறியாத முஸ்லிம்கள் இனியாவது திருந்திக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;நூலின் பெயர் : அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;ஆசிரியர் : P.ஜைனுல் ஆபிதீன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;br /&gt;www.onlinepj.com&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-6216308166590628030?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/6216308166590628030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2012/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/6216308166590628030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/6216308166590628030'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2012/02/blog-post.html' title='வாஸ்து சாஸ்திரம் என்ற பித்தலாட்டம்!'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-692878363126854743</id><published>2011-08-26T07:24:00.000-07:00</published><updated>2011-08-26T07:28:18.867-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வழிபாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோன்பு'/><title type='text'>பெருநாள் தொழுகை!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.&amp;nbsp;அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பெருநாள் தொழுகையில் பெண்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப் பட்டோம். பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரீ 986&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தொழுகைக்கு முன் சாப்பிடுதல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 953&lt;br /&gt;&lt;br /&gt;நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: இப்னுகுஸைமா 1426&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முன் பின் சுன்னத்துகள் இல்லை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத் தொழுகையையும் தொழுததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும், பின்னும் எதையும் தொழவில்லை.&amp;nbsp;அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1616&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாங்கு இகாமத் இல்லை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது.&amp;nbsp;இரு பெருநாள் தொழுகையை பாங்கும் இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல; இரு தடவை அல்ல; பல தடவை நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன்.&amp;nbsp;அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி), நூல்: முஸ்லிம் 1610&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மிம்பர் இல்லை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் பெருநாள் அன்று மிம்பரில் ஏறி பயன் செய்தபோது.&amp;nbsp;“மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம் செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர். இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டு வரப்படவில்லை…” என்று இடம் பெற்றுள்ளது.&amp;nbsp;ஆதாரம் : அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265, அஹ்மத் 10651&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரேயொரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்குச் செல்வதற்காக) வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில் நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1278&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;b&gt;தக்பீரும் பிரார்த்தனையும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: &amp;nbsp;உம்மு அத்திய்யா (ரலி), &amp;nbsp;நூல்கள்: புகாரீ 971, முஸ்லிம் 1615&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில் கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில் தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.&amp;nbsp;உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205). &lt;a href="http://www.tntj.net/41704.html"&gt;TNTJ&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-692878363126854743?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/692878363126854743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/08/blog-post_7158.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/692878363126854743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/692878363126854743'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/08/blog-post_7158.html' title='பெருநாள் தொழுகை!'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-7748002497124301379</id><published>2011-08-26T07:17:00.000-07:00</published><updated>2011-08-26T07:28:30.632-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வழிபாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோன்பு'/><title type='text'>இஃதிகாஃபின் சட்டங்கள்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்’ என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;b&gt;ரமலானில் இஃதிகாப் எதற்காக?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இஃதிகாபின் ஆரம்பம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். (நூல்: முஸ்லிம் 2007)&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20 ஆம் நாள் தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இஃதிகாபின் முடிவு நேரம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரிபில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2018)&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப் இருக்கும் போது இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30 இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருநாள் தொழுகை முடித்து விட்டுத் தான் வீடு திரும்ப வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;b&gt;பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2033)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும் போது இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் குறிப்பானது என்பதை விளங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி)வின் கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள். “இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?” என்று கேட்டு விட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால் மாதம் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ (2034)&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?” என்ற கேள்வியும், நபி (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும் மற்றவர்கள் கூடாரம் அமைக்கக் கூடாது என்பதை விளங்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;… நபி (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது… (புகாரீ 2041)&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில் வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள். காலைத் தொழுகையை தொழுது விட்டு நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் பார்த்த கூடாரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி (ஸல்) அவர்களுக்குரியது, இரண்டாவது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்குரியது. மூன்றாவது அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள் அவசியம் என்றிருந்தால் நபித்தோழர்களும் கூடராங்களை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைத்திருந்தால் நான்கிற்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இருந்ததோ மொத்தம் நான்கு கூடாரங்கள் மட்டுமே! எனவே நபித்தோழர்கள் கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு கட்டளையிடவில்லை என்பதையும் நாம் அறியலாம். எனவே இஃதிகாபிற்கு கூடாரங்கள் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இஃதிகாபில் பேண வேண்டிய ஒழுங்குகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிவாசலில் இருக்கும் போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:187)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிஷா ரலி கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள். (நூல்: புகாரி 2029)&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களின் மனைவியரில் ஒருவரும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (309)&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபிகளாரின் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்களும் இஃதிகாஃப் இருந்ததாக நாம் அறிந்தவரை ஹதீஸ்களில் இடம் பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நபிகளாரின் மனைவிகள் இஃதிகாஃப் இருந்ததிலிருந்து கூடுதல் பட்சமாக பின்வரும் சட்டத்தை நாம் எடுக்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பள்ளிவாசலில் பெண்கள் இஃதிகாஃப் இருக்க வசதிகள் இருக்கமானால் கணவனுடன் அவர்கள் இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன் தான் அவர்களது மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பெண்கள் இஃதிகாஃப் தொடர்பாக அறிஞர்களிடையே உள்ள கருத்துக்களில் மேலே நாம் சொன்ன கருத்தே ஹதீஸுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. &lt;a href="http://www.tntj.net/41700.html"&gt;TNTJ&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-7748002497124301379?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/7748002497124301379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/08/blog-post_4284.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/7748002497124301379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/7748002497124301379'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/08/blog-post_4284.html' title='இஃதிகாஃபின் சட்டங்கள்!'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-3139966266887726686</id><published>2011-08-26T07:12:00.000-07:00</published><updated>2011-08-26T07:28:42.789-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வழிபாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோன்பு'/><title type='text'>ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.&amp;nbsp;ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஃபித்ராவின் நோக்கம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817&lt;br /&gt;&lt;br /&gt;நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கொடுக்கும் நேரம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.&amp;nbsp;சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை” என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ‘ரமளான் ஜகாத்’ என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;“ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்” என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது. &lt;a href="http://www.tntj.net/41702.html"&gt;TNTJ&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-3139966266887726686?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/3139966266887726686/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/08/blog-post_2918.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/3139966266887726686'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/3139966266887726686'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/08/blog-post_2918.html' title='ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்!'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-4358907423964211123</id><published>2011-08-26T07:08:00.000-07:00</published><updated>2011-08-26T07:28:51.669-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வழிபாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோன்பு'/><title type='text'>லைலதுல் கத்ர்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;b&gt;ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;b&gt;முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.&amp;nbsp;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;லைலத்துல் கத்ரு எந்த நாள்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;லைலதுல் கத்ர் 27வது இரவா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான் என்று முடிவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத் (1178)&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும் வந்துள்ளது. அவற்றை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), நூல்: அஹ்மத் (15466)&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;“ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2021&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;“லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2022&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.&lt;br /&gt;இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், “நபியவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?’ என்று கேட்கும் போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்” என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722)&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது. &lt;a href="http://www.tntj.net/41694.html"&gt;TNTJ&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-4358907423964211123?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/4358907423964211123/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/08/blog-post_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/4358907423964211123'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/4358907423964211123'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/08/blog-post_26.html' title='லைலதுல் கத்ர்!'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-2395453574068382552</id><published>2011-08-20T05:38:00.000-07:00</published><updated>2011-08-20T05:47:31.515-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வழிபாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோன்பு'/><title type='text'>இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;“ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)&amp;nbsp;நூல்: முஸ்லிம் 2157&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரீ 990&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இரவுத் தொழுகையின் நேரம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1340&amp;nbsp;ரக்அத்களின் எண்ணிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;8+3 ரக்அத்கள் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆயிஷா! என் &lt;br /&gt;&lt;br /&gt;கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: அபூஸலமா, நூல்கள்: புகாரீ 1147, முஸ்லிம் 1344&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;12+1 ரக்அத்கள் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1138,183 முஸ்லிம் 1400,1402, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;10+1 ரக்அத்கள் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1339 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;8+5 ரக்அத்கள் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1341&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;4+5 ரக்அத்கள் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து ”சின்னப் பையன் தூங்கிவிட்டானோ?” அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களது இடப்பக்கமாகப் போய் நின்று கொண்டேன். உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும் பின்னர் (சுப்ஹின் முன்ன சுன்னத்) இரண்டு இரக்அத்துகளும் தொழுது விட்டு அவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள். பிறது (சுபுஹத்) தொழுகைக்கு புறப்பட்டார்கள் நூல் : புகாரி (117)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;8+5 ரக்அத்கள் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (1341)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;9 ரக்அத்கள் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;7 ரக்அத்கள் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139 5,3,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;1 ரக்அத்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி), நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-2395453574068382552?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/2395453574068382552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/08/blog-post_20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/2395453574068382552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/2395453574068382552'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/08/blog-post_20.html' title='இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்?'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-2557763700931788600</id><published>2011-08-20T05:28:00.000-07:00</published><updated>2011-08-20T05:47:22.218-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வழிபாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோன்பு'/><title type='text'>ரமளான் மாதத்தின் சிறப்புகள்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;b&gt;அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div&gt;“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&amp;nbsp;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1898) முஸ்லிம் (1956) &lt;br /&gt;&lt;br /&gt;“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” &amp;nbsp;என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)&amp;nbsp;நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957) &lt;br /&gt;&lt;br /&gt;ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல! &lt;br /&gt;&lt;br /&gt;“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான். &lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903) &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம் &lt;/b&gt;&lt;br /&gt;மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல் &lt;/b&gt;&lt;br /&gt;ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான். &lt;br /&gt;&lt;br /&gt;யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உம்ரா செய்தால் ஹஜ் நன்மை &lt;/b&gt;&lt;br /&gt;ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும். &lt;br /&gt;&lt;br /&gt;“ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சுவர்க்கத்தில் தனி வாசல் &lt;/b&gt;&lt;br /&gt;நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;“சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம் &lt;/b&gt;&lt;br /&gt;“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894) &lt;br /&gt;&lt;br /&gt;“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904) &lt;br /&gt;&lt;br /&gt;இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது &lt;/b&gt;&lt;br /&gt;இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5) &lt;br /&gt;&lt;br /&gt;எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக! &lt;a href="http://www.tntj.net/41559.html"&gt;Source&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-2557763700931788600?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/2557763700931788600/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/2557763700931788600'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/2557763700931788600'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/08/blog-post.html' title='ரமளான் மாதத்தின் சிறப்புகள்!'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-7761571785298859900</id><published>2011-07-18T05:15:00.000-07:00</published><updated>2011-07-18T05:16:17.981-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்வியல்'/><title type='text'>இஸ்லாம் கூறும் குடும்பவியல்-02</title><content type='html'>&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;b&gt;2.கட்டுப்பாடற்ற உறவு.&lt;/b&gt; &lt;br /&gt;குடும்ப அமைப்பை சீரழிக்கும் சித்தாந்தங்களில் இரண்டாவது இடம் இதற்குத்தான் இருக்கிறது. நான் யாரோடு வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்வேன் என்னை யாரும் தட்டிக் கேட்க்க முடியாது என்ற இந்தக் கோட்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் யாரோடு வேண்டுமானாலும் உறவு வைக்க முடியும் என்றால் குடும்பம் என்றொன்று இல்லாமல் போகிறது. கணவன் மனைவி என்ற உறவு முறை இல்லாமல் போகும். நிலைமை இப்படியானால் குழந்தையை யார் வளர்ப்பது பிறந்த குழந்தைக்கு தந்தை யார்? என்ற பலவிதமான கேள்விகளும் அங்கு எழும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட சமுதாயத்தை சீர்குலைக்கக் கூடிய சித்தாந்தங்கள் இன்று நம் மத்தியில் பலமாக விதைக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அறிஞர்கள், நீதிமான்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் கூட இன்று இந்த சித்தாந்தத்தை ஆதரிப்பதைப் பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு பொறுப்பும் அற்ற வாழ்க்கை வாழ வேண்டும் யாரும் நம்மைக் கட்டுப்படுத்தக் கூடாது என்பதே இவர்களின் எண்ணக் கருவாக இருக்கிறது. ஒரு வருடத்திற்கு மணைவி, ஆறு மாதங்களுக்கு மணைவி என்று ஒப்பந்தத் திருமணங்கள் கூட இன்று மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதற்கு காரணம் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற கருத்துக்களை பல நடிகைகள் கூட பேசிய நேரத்தில் சில சமுதாய அக்கரை கொண்டவர்கள் இது தொடர்பாக உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நேரத்தில் நீதி மன்றமே இதுவொரு பிரச்சினை இல்லை என்றும் இது சுதந்திரமானது என்றும் இப்படிப்பட்ட செயல்பாடுகளை தடுப்பதற்கு எந்த ஒரு சட்டமும் நமது நாட்டில் இல்லையென்றும் கூறிவிட்டதைப் பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட கேடு கெட்ட சட்டங்கள் எல்லாம் நாட்டில் அனுமதிக்கப்பட்டால் நிலைமை எப்படியாகும் என்பது நாம் அறிந்ததே! இதனால் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் பெண்கள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதனால் ஏற்படும் பாதிப்புக்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;யாரோடு வேண்டுமானாலும் நாம் உறவு கொள்ள முடியும் என்ற கொள்கையை கொண்டவர்களினால் இன்று உலகில் பலவிதமான பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. அதில் முதலாவது இடம் வகிக்கும் பிரச்சினைதான் எயிட்ஸ் என்ற கொடிய நோயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நோய் ஏற்பட்டால் குறிப்பிட்ட சில வருடங்களில் உயிருக்கே ஆபத்து வந்துவிடுவதை பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடம் அல்லது ஐந்து வருடம் அதிக பட்சமாக 10 வருடங்கள் தான் அவனுடைய உயிர் வாழ்க்கை என்று இன்றைய மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. நோய் எதிர்ப்பு சக்கிகள் குறைந்து இருதியில் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு இந்த நோய் மிகவும் பாரதூரமான ஒன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த நோயானாலும் வரும் போகும் ஆனால் இந்த எயிட்ஸ் நோய் மாத்திரம் வந்தால் போகாது நோய் எதிர்பு சக்கியையை இல்லாமல் ஆக்கிவிடும் அளவுக்கு பயங்கரமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த எயிட்ஸ் ஏற்படுவதற்கான காணரம் இரண்டாகும்.&lt;/b&gt;&lt;br /&gt;ஒரு பெண் அதிகமான ஆண்களுடன் உறவு வைக்கும் போது இந்த நோய் ஏற்படுகிறது. (இந்த நோய் அதிகமாக பெண்களுக்குத் தான் தொற்றுகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவனுக்கு ஒருத்தி என்று நம் நாட்டில் ஒரு விளம்பரம் செய்வார்கள் இந்த விளம்பரமே தவறானது ஒருவனுக்கு ஒருத்தியல்ல ஒருத்திக்குத்தான் ஒருவன். ஒருத்திக்கு ஒருவன் என்பதை ஒருவனுக்கு ஒருத்தி என்று தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரபு நாடுகளில் ஒருவன் 4 மனைவிமார்களை வைத்துக் கொண்டு இருப்பான் ஆனால் அதனால் எந்த நோயும் தொற்றவில்லை. இதே நேரத்தில் ஒரு பெண் பல ஆண்களுடன் கூடும் போது பல வகையான நோய்கள் தொற்று ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு நாடுகளில் எல்லாம் தற்போது பாதுகாப்பான உறவு என்ற பெயரில் ஆணுரை போன்றவற்றைப் பயண்படுத்தி இந்த எயிட்சை கொஞ்சம் குறைத்துக் கொண்டார்கள். ஆனால் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் அதனைக் குறைக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே அதிகமாக எயிட்சினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆபிரிக்காவில் இருக்கிறார்கள் அதற்கு அடுத்த இடம் இந்தியாவிற்கும் இந்தியாவில் அதிகமாக எயிட்சினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த ப்ரீ செக்ஸின் பாதிப்பு இந்த மாநிலத்தில் தலை தூக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாடே நாச்காடாகிவிடும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;3. முறை கேடான உறவு.&lt;/b&gt;&lt;br /&gt;உலகில் வாழும் காலத்தில் மனிதன் தனது உடல் உணர்ச்சியைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் படைக்கப்பட்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதைத் தாண்டி இன்று பலர் ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் என்ற ஓரினச் சேர்க்கை முறையை சரி கண்டு வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக பல நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகள் இந்த ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சட்டத்தின் மூலம் அனுமதியும் கொடுத்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலை உலகம் முழுவதும் உருவானால் நிலைமை எவ்வாறு இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட மானங்கெட்ட முறைகளைக் கையான்டு தங்கள் உணர்வுகளை தீர்த்துக் கொள்பவர்களின் இறுதி கட்டத்தைப் பார்த்தால் தனது தள்ளாத வயதில் தனக்க கஞ்சி ஊற்றுவதற்குக் கூட வாரிசு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணோடு ஆண், பெண்ணோடு பெண் என்ற நிலை உருவானால் எப்படி வாரிசுகள் கிடைக்கும்? வாரிசுகள் இல்லாவர்களின் இறுதி நிலை தன்னை கவணிக்கக் கூட யாரும் அற்ற அநாதையாகவே அவன் ஆகிவிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் திருமணம் செய்திருந்தால் அவனுக்கு அவன் மணைவி இறுதி நேரத்தில் கூட துணையாக இருப்பால் ஆனால் ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்ற நிலையில் இருக்கும் யாருக்கும் இறுதி நேரத்தில் இப்படிப்பட்ட துணைகள் கிடைப்பதில்லை. கிடைக்கவும் மாட்டாது. இதுதான் நிதர்சனமான உண்மையாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட இழிந்த காரியத்தில் ஈடுபட்டதற்காக ஒரு சமுதாயத்தையே அல்லாஹ் அழித்திருக்கிறான் என்று இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நபி லூத் அவர்களின் சமுதாயம் தான் இப்படி அழிக்கப்பட்டவர்கள். இவர்கள் தான் முதன் முதலில் இந்த இழிந்த செயல்பாட்டில் மூழ்கிய சமுதாயத்தவர்கள். அந்த முதல் சமுதாயத்தையே இறைவன் அழித்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;லூத்தையும் (தூதராக அனுப்பினோம்) உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக் கேடான காரியத்தையா செய்கிறீர்கள்? என்று தமது சமுதாயத்திடம் கேட்டார். (அல் குர்ஆன் 7 - 80)&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள் (என்றும் கூறினார்) (அல் குர்ஆன் 7 - 81)&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே இந்த இழி செயலை செய்தவர்களில் முதல் கூட்டம் இவர்கள் தான். இதற்காகத் தான் அந்தக் கூட்டத்தையே இறைவன் அழித்ததாக தனது திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது கட்டளை வந்த போது அவ்வுரின் மீது சுடப்பட்ட கட்களால் கல் மழை பொழிந்து அதன் மேல் பகுதியை கீழ்ப் பகுதியாக்கினோம்.(அல் குர்ஆன் 11-82)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஓரிணச் சேர்க்கை மற்றும் கட்டுப்பாடு அற்ற உறவு ஆகியவை எயிட்சுக்கு காரணம் என்று இன்று கண்டுபிடித்துள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு முறைகளில் தான் எயிட்ஸ் உருவாகிறது (எயிட்ஸ் தொற்று பல விதங்களில் உண்டாகிறது) என்பதை நாம் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக முஸ்லீம்களாகிய நாம் எந்தக் காரணம் கொண்டும் திருமணத்தை வெறுப்பதாக சொல்லிக் கொள்ளும் துறவரத்தை ஆதரிக்கக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் ப்ரீ செக்ஸ் என்ற கட்டுப்பாடற்ற உறவு முறைக்கு எதிராக கடுமையான நிலைபாடுகளை எடுப்பதோடு பேசவும் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் காரணம் கொண்டும் ஓரிணச் சேர்க்கைக்கு துணையாக இருந்துவிடக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காரணங்கள் அணைத்தும் குடும்பத்தின் நல்லொழுக்கத்தை சீர் குலைப்பதுடன், குடும்ப வாழ்வையே நாசப்படுத்தும் செயல்பாடுகளுமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இன்ஷா அல்லாஹ் தொடரும்…………………….&lt;a href="http://rasminmisc.blogspot.com/2011/06/blog-post_06.htmlE0%AF%8D."&gt;Source&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-7761571785298859900?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/7761571785298859900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/07/02.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/7761571785298859900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/7761571785298859900'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/07/02.html' title='இஸ்லாம் கூறும் குடும்பவியல்-02'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-6184413284396450160</id><published>2011-06-16T05:40:00.000-07:00</published><updated>2011-07-18T05:16:39.049-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்வியல்'/><title type='text'>இஸ்லாம் கூறும் குடும்பவியல்-01</title><content type='html'>&lt;div dir="ltr" trbidi="on"&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;(தமிழுலகின் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த ரமழான் மாதம் முழுவதும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் பேசிய இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தொடர் சொற்பொழிவை எழுத்தில் தரும்படி பலரும் வேண்டிக் கொண்டதால் காலத்தின் தேவை கருதி தொடராக தருகிறோம்)&lt;br /&gt;இஸ்லாமிய மார்க்கம் அனைத்துப் பிரச்சினைகளையும் முழுமையாகவும், தெளிவாகவும், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் அனுகக் கூடிய ஒரு மார்க்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அடிப்படையில் குடும்பவியலைப் பற்றி இஸ்லாம் என்ன நடை முறைகளைகளை சொல்லித் தருகிறது என்பதை தெளிவு படுத்துவதற்காக இந்தத் தலைப்பு தெரிவு செய்யப் பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்காண காரணம் என்னவெனில் நம்முடைய சமுதாயத்திலலே முஸ்லீம்களாக இருந்தாலும்,முஸ்லீம் அல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களுடைய குடும்ப அமைப்பு பாரதூரமான முறையில் சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது.இவையணைத்தும் இஸ்லாம் சொல்லக் கூடிய குடும்ப அமைப்பு முறைமை அவர்களுக்கு தெரியாத காரணத்தினாலும்,எடுத்து சொல்லப் படாத காரணத்தினாலும் தான் உண்டாகிறது... &lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக...... &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் உலகில் எந்த படைப்பை படைத்திருக்கிறானோ அவை அனைத்தும் ஒன்றிலிருந்து இன்னொன்றை உற்பத்தி செய்யக் கூடியதாகவே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மனிதன் படைக்கும் படைப்பிற்கு அந்த ஆற்றல் இல்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பேனாவை ஒரு மனிதன் படைத்தால் (கண்டுபிடித்தால்)அது இன்னொரு பேனாவை பெற்றெடுக்காது.ஒரு தொலை பேசியை கண்டுபிடித்தால் அது இன்னொரு தொலை பேசியை பெற்றெடுக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தான் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இறைவன் ஒரு ஜோடி மனித இனத்தை உருவாக்கினான் அதிலிருந்து பல கேடி மக்கள் உருவாக்கபட்டு இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;இது போல்தான் மனிதனல்லாத மற்ற மிருகங்களாக இருந்தாலும் ஒரே ஒரு ஜோடியில் இருந்துதான் அத்தனையும் பல்கிப் பெருகியுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;தாவதங்களை எடுத்துக் கொண்டாலும் ஒரே ஒரு விதையின் மூலமாகத் தான் இறைவன் அனைத்தையும் உருவாக்குகிறான் ஆனால் மனிதனால் இப்படி இறைவனைப் போல் செய்ய முடியாது அவன் தனித்தனியாகத் தான் எதையும் உருவாக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்,பெண் என்ற இரண்டு வகைகள் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தாவரங்களாக இருந்தாலும் ஆண் பூவும் இருக்கிறது பெண் பூவும் இருக்கிது அந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தால் தான் காய்க்க முடியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;மிருகங்களாக இருந்தாலும் ஒன்றோடு மற்றையது இணைந்தால் தான் பல்கிப் பெருக முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மனிதனுக்கு மாத்திரம் தான் மற்ற படைப்பினங்களுக்கு இல்லாத குடும்பம் என்ற ஒன்றை இறைவன் ஏற்பாடு செய்திருக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆடுகளில் ஆணும் உண்டு பெண்ணும் உண்டு,மாடுகளில் ஆணும் உண்டு பெண்ணும் உண்டு இப்படி அனைத்து உயிரினத்திலும் ஆண்,பெண் என்ற இரண்டு வகை உண்டு இரண்டும் கலப்பதின் மூலம் இணவிருத்தி செய்து கொள்கின்றனவே தவிர மனிதனைப் போல் குடும்பம் என்றொன்ரு ஏற்படுத்தப் பட்டு ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமந்து கொள்வது இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் ஆடு படும் கஷ்டத்தில் ஆண் ஆடு பங்கெடுத்துக் கொள்ளாது. ஒரு பெண் ஆடு ஆண் ஆட்டின் மூலம் கற்பமாகி அதனது கருவை சுமந்து கொண்டிருக்கும் ஆனால் அந்த சுமையில் ஆண் ஆட்டுக்கு எந்த பொருப்பும் இருக்காது. பொருப்பெடுப்பதற்குறிய அறிவும் அவைகளுக்கு இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மனிதன் சிந்திக்கின்றவனாக இருப்பதினால் இதைப் பற்றி தெளிவாக சிந்திக்கின்றான்.இதனால் தான் ஒரு பெண்ணைப் பற்றி சிந்திப்பவனாக ஆண் இருக்கிறான். &lt;/div&gt;&lt;div&gt;அதனால் தான் குடும்பம் என்றொரு கட்டுக் கோப்புக்குள் மனிதன் இருக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;எப்படி வேண்டுமானாலும் வாழலாம்,யாரோடு வேண்டுமானாலும் வாழலாம் என்றொரு நிலை இருக்குமென்றால் பெண்ணினத்தின் கஷ்டத்தை,சுமையை பெண்கள் மாத்திரம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டிவரும்.ஆண்கள் அதில் எந்த ஒரு பகுதியையும் ஆண்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.அதை தவிர்ப்பதற்காகத் தான் ஆதி காலத்திலிருந்தே,ஆதம் நபியின் காலத்திலிருந்தே குடும்பம் என்றொரு முறையை இறைவன் உருவாக்கியிருக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆதம் நபியவர்களைப் படைத்து,அவருக்குத் துணையாக ஹவ்வா அவர்களையும் படைத்து அவர்கள் இருவரின் மூலம் மனிதனை பல்கிப் பெருக்கி ஒருவருக்கு மற்றவர் துணையாக இருப்பதற்காக அவர்களை குடும்பமாக இறைவன் மாற்றினான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்றைய நாம் வாழும் நவீன காலத்தில் இந்த குடும்ப அமைப்பை,சீர்குழைப்பதற்காக,இல்லாமலாக்குவதற்காக,அழித்தொழிப்பதற்காக, பலவிதமான கெட்ட சிந்தனைகள் மக்கள் மத்தியில் தூவப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;குடும்பம் என்றொன்ரு தேவையில்லை,கணவன்,மனைவி என்ற முறை வேண்டாம் என்றெல்லாம் கூறி ஒருவிதமான கேடு கெட்ட சிந்தனையை மக்கள் மத்தியில் சிலர் இன்று பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குடும்பம் எப்படி சிதைகிறது? &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பம் என்ற அழகான வாழ்க்கை முறையை இல்லாமலாக்குவதற்கு ஷைத்தான் மூன்று விதமான செயல் திட்டங்களை மக்களுக்கு மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;1.துறவரம். &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆணுக்கு பெண்ணோ,அல்லது பெண்ணுக்கு ஆணோ தேவையில்லை.ஒருவரை விட்டு ஒருவர் அகன்று கடவுளுக்காகவே நாம் வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டு திருமணம் முடிக்காமல் பெண்ணை ஆணும்,ஆணைப் பெண்ணும் அனுகாமல் தியானத்தில் இருப்பதற்குப் பெயர் துறவரம் என்று சொல்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இருப்பவர்கள் சிறந்தவர்களாகவும், நல்லவர்களாகவும், அறிவாளிகளாகவும் மற்ற மக்களை விட ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் வித்தியாசப்படுவதாகவும் இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து மத மக்களாலும் நம்பப்படுகிறார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இதே நேரம் யார் திருமணம் செய்து குடும்ப வாழ்;க்கையில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் அனைவரும் இவர்களை விட தாழ்வானவர்களாக கருதப் படுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகையவர்கள் குறைவானவர்கள் இருப்பதினால் இந்தக் கொள்கையின் பாதிப்பு நமக்குத் தெரியவில்லை.இதே நேரம் உலகில் உள்ள அனைவரும் இந்தக் கொள்கையை கையில் எடுத்தால் உலகமே நாசமாகிவிடும் என்பதையும் நாம் கவணத்தில் கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்றால் திருமணம் என்ற அமைப்பு இன்றி துரவரம் என்ற நிலைக்கு மணிதன் சென்றால் மனிதன் இணப்பெருக்கம் செய்ய மாட்டான் பிறந்தவன் மாத்திரம் தான்,புதிய படைப்பினம் இருக்காது அதனால் அந்த சொற்பமானவர்கள் மரணித்துவிட்டால் அதன் பின் மனிதன் என்ற இனம் அப்படியே படிப்படியாக அழிந்து போய் விடும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கொள்கையை மற்ற மதங்கள் ஆதரித்தாலும்,இஸ்லாமிய மார்க்கம் மாத்திரம் இதை வண்மையாக கண்டிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் நமக்கு முன்னால் கிட்டத்தட்ட இருபது,முப்பது வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்து நமது முன்னோர்களை எடுத்துப் பார்த்தால் அவர்களும் இந்தத் தாக்கத்திற்கு ஆற்பட்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தற்காலத்தில் ஏகத்துவ சிந்தனை ஏற்பட்டிருப்பதினால் துறவரத்தை தவறு என்று புரிந்து வைத்திருக்கிறார்கள் ஆனால் அன்றைய காலத்தில் அது சரி என்று நமது முன்னோர்களில் பலர் நினைத்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவரை மகான்,அவ்லியா என்றெல்லாம் மக்கள் போற்றினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்தை எதிர்த்து,திருமணத்தில் ஈடுபடுவதைப் பாவம் என்று பிரச்சாரம் செய்தவர்கள் அவ்லியாக்களாக மதிக்கப்பட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு குணங்குடி மஸ்தானைப் பற்றி நாம் சொல்ல முடியும்.தண்டையார் பேட்டையில் இவருக்கு இன்றும் தர்கா இருக்கிறது.இவரை மக்கள் பெரிய மகானாக அவ்லியாவாக நினைத்து அவரிடம் கோரிக்கை வைத்து வழிபாடும் நடத்தினார்கள் நடத்துகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவரோ கல்யாணத்தை,குடும்பவாழ்கையை கேவலமாக பேசுகிறார் பெண்களை பயங்கரமாக திட்டுகிறார். அவருடைய கவிதையை கவணியுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சங்கையும் போக்கி சதிமானமாக சகசன்டியாக்கிவித்திடுவாள் வெகு பங்கப்படுத்தி விட்டிடுவாள்.அந்த மங்கையர் ஆசை வைத்தையையோ வையத்தில் பெண் கொண்ட பேர் கொண்ட பாட்டையும் கேட்டையும் பேசுவோமே நெஞ்சமே! &lt;br /&gt;&lt;br /&gt;பெண் என்றால் நமது கண்ணியத்தை இல்லாமலாக்குபவள்,மக்கள் மத்தியில் நமக்கு கெட்ட பெயரை உண்டாக்குபவள் அந்த பெண் மீது ஆசை கொண்டவர்கள் படும் பாட்டைப் பற்றி பேசுவோமா நெஞ்சமே என்று பெண்கள் மீது அபாண்டமாக பழி சுமத்திப் பாடுகிறான் இந்த குணங்குடி மஸ்தான். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடல்கள் ஒரு காலத்தில் பள்ளிகளில் வைத்துப் பாடப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் தங்க நகையும்,முகப்பணிச் சேலையும்,தாவெனவே குரங்காட்டுவாள்.ஆதியைத் தேடி அருள்பட நாடி……………..(இன்னும் பல பாடல்கள் உண்டு) &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி திருமண வாழ்கையை,குடும்ப அமைப்பை சீர்கெடுத்தவர்கள் எப்படி அவ்லியாக்களாக இருக்க முடியும்? ஆனால் ஒரு காலத்தில் இவரெல்லாம் பெரிய அவ்லியாக்கள்.இன்றும் சிலர் இவருக்கு அந்த நிலையை கொடுத்துள்ளார்கள் இஸ்லாத்தின் மிக முக்கியமான ஒரு பகுதியை இல்லாமலாக்க முயன்றவர் அவ்லியாகவாக, நல்லவராக, அறிவாளியாக இருக்க முடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்தை மறுப்பவர் இஸ்லாத்தில் இருக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;குடும்பவாழ்வை யார் புறக்கணிக்கிறார்களோ,திருமணத்தை யார் வெருக்கிறார்களே அவர்கள் இஸ்லாத்தில் இருக்க முடியாது என நபியவர்கள் தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு)முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்கüல் ஒருவர் (இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால் எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன் என்றார். இன்னொருவர் நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தத் தோழர்களிடம்) வந்து இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன் விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன் உறங்கவும் செய்கிறேன்; மேலும் நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோஅவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். (புகாரி - 5063) &lt;br /&gt;&lt;br /&gt;நபியவர்களின் வீட்டுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முடிவை எடுக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் தூங்காமல் இறைவனை வணங்கிக் கொண்டே இருக்கப் போவதாகவும்,இரண்டாமவர் காலம் பூராகவும் நோன்பு நோற்கப் போவதாகவும்,மூன்றாமவர் திருமணமே முடிப்பதில்லை என்றும் முடிவெடுக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நபியவர்கள் வந்து அதை கண்டித்தது மட்டுமல்லாமல் திருமணம் செய்யாதவர் இஸ்லாத்திலேயே இருக்க முடியாது என்ற தகவலையும் அதில் தெரிவிக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் என்பது இஸ்லாத்தில் முஸ்லிமாக இருப்பதற்குறிய ஒரு அடையாளமாக நபியவர்கள் நமக்கு சொல்லித் தருகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விதத்தில் இந்த துறவரம் என்பது போலியானது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். &lt;/div&gt;&lt;div&gt;இறைவனுக்காக திருமணத்தை துறப்பதாக சொல்பவர்கள்,இறைவனுக்காக ஆடையை துறந்து நிர்வாண சாமியாக்களாக இருப்பவர்கள்,இறைவனுக்காக சாப்பாட்டை துரந்து சாப்பிடாமலேயே இருக்கிறார்களா என்றால் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆசைகளை துறக்க வேண்டும் என்று பேசுபவர்கள் ஏன் சாப்பாட்டைத் துறப்பதில்லை.இதிலிருந்து இந்தத் துறவரம் என்பது பொய்யானது மக்களை ஏமாற்றுவதற்காக இவர்கள் செய்யப் படும் ஒரு பொய்ப் பிரச்சாரம் என்பதை நாம் அறிய முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆசையை துறப்பாக சொல்பவர்கள் திருமணத்தை வெருப்பதாக சொல்பவர்களால் அதை நிரூபிக்க முடியாது பெண்ணில்லாமல் வாழ முடியாது.அப்படி யாராவது வாழ்தால் அவர்கள் பெண்களை சீண்டும் சந்தர்ப்பம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கும் அல்லது திருமணம் முடிப்பதற்கான வாய்பு அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;யாரெல்லாம் துறவரம் என்று பேசினார்களோ அப்படிப்பட்ட பலர் பெண்கள் விஷயத்தில் நாறிப்போனதை உலகம் கண்டு கொண்டுதான் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்துகொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்க வில்லை. ஆகவே நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? எனறு கேட்டோம். அப்போது நபி (ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். (புகாரி - 5071) &lt;br /&gt;&lt;br /&gt;அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதரே! நான் ஓர் இளைஞன்; பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தேவையான பொருள் ஏதும் என்னிடம் இல்லை. (இந்நிலையில்) நான் தவறான வழிக்குச் சென்றுவிடுவேனோ என என்னைப் பற்றி நானே அஞ்சுகிறேன். (நான் காயடித்துக்கொள்ளலாமா?) என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பதிலüக்காமல்) மௌனமாக இருந்தார்கள். மீண்டும் நான் முன் போலவே கேட்டேன். அப்போதும் மௌனமாகவே இருந்தார்கள். பிறகும் நான் முன் போலவே கேட்டேன். அப்போதும் மௌனமாகவே இருந்தார்கள். பிறகு (நான்காவது முறையாக) முன் போலவே நான் கேட்டபோது அபூஹுரைரா! நீங்கள் (வாழ்க்கையில்) சந்திக்கவிருக்கின்ற அனைத் தையும் (ஏற்கெனவே எழுதியாயிற்று. அவற்றை) எழுதிய எழுதுகோலும் கூட காய்ந்துவிட்டது. எனவேஇ நீங்கள் காயடித்துக்கொள்ளுங்கள்; அல்லது சும்மா இருங்கள். (எல்லாம் ஒன்று தான்.) என்று சொன்னார்கள். (புகாரி - 5076) &lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப அமைப்பை சீரழிக்கும் இந்த துறவரத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. தொடரும்.... &lt;a href="http://rasminmisc.blogspot.com/2011/05/blog-post_30.html"&gt;Source&lt;/a&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title"&gt;&lt;/h3&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-6184413284396450160?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/6184413284396450160/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/6184413284396450160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/6184413284396450160'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/06/blog-post.html' title='இஸ்லாம் கூறும் குடும்பவியல்-01'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-7228292152834144112</id><published>2011-02-15T01:59:00.000-08:00</published><updated>2011-02-15T02:02:09.888-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தவ்ஹீத் ஜமாஅத்'/><title type='text'>அவதூறுகளுக்கு அப்பால்? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.., எல்லாம் வல்ல ஏக இறைவனான அல்லாஹ்வின் அளப்பரிய கிருபையினால் இன்று நாம் இணைவைத்தல் மற்றும் இன்னபிற வழிகேடுகளை விட்டும் விலகி இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் அறியும் வாய்ப்பை பெற்றுள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னாள் சென்றால் முஸ்லிம்களுக்கு குர்ஆன் மட்டுமே தெரியும். அதுவும் நூற்றுக்கு இரண்டு மூன்று சதவீதத்தினர்களுக்கு மட்டுமே குர்ஆனை ஓதத்&amp;nbsp;தெரிந்து இருந்தார்கள். &lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;அவர்களிடம் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பு பற்றிய எந்த அறிவும் அப்போது இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அந்த கால கட்டத்தில் குர்ஆன் மொழிபெயர்ப்புகளோ ஹதீஸ் மொழிபெயர்ப்புகளோ இன்று இருக்கும் நிலையைப் போல் இல்லை. &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_btwPOzqW8bg/TOpAyxVMeKI/AAAAAAAAAoc/XVXY_bBCA_Q/s1600/IMG_1363-300x200.jpg" imageanchor="1" style="cssfloat: left; margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="263" ox="true" src="http://4.bp.blogspot.com/_btwPOzqW8bg/TOpAyxVMeKI/AAAAAAAAAoc/XVXY_bBCA_Q/s400/IMG_1363-300x200.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ஆலிம்கள் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்பிய காலம். மார்க்கம் என்ற பெயரில் இந்த ஆலிம்கள் செய்த காரியங்கள் ஒரு சாதாரண முஸ்லிம் சிறிது நேரம் சிந்தித்தால் விளங்கிவிடும். அதற்கென்று தனியாக ஒரு பட்டியல் தேவை. &lt;br /&gt;&lt;br /&gt;நாம் பல வருடங்களாக பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். இந்த மக்கள் தங்கள் அறிவையும் பொருளாதாரத்தையும் மார்க்கத்திற்கு புறம்பான துளியும் சம்பந்தமில்லாத காரியத்திற்கு செலவழிப்பதை காணலாம். இதை தடுக்க வேண்டிய ஆலிம்கள் அதைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் கண்டும் காணமல் இருப்பதை பார்க்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆலிம்கள் பெயரளவில் தான் முஸ்லிம்களாக வாழ்கிறார்கள். இவர்களே இப்படி இருந்தால் மார்க்கம் தெரியாத அன்றைய முஸ்லிம்களின் நிலை. இந்த ஆலிம்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஆடம்பரத்திற்காக பெருமைக்காக மார்க்கத்தை மறைத்து உலக ஆதாயம் தேடினார்கள். இன்னும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;ஆனால் இன்று அல்லாஹ் இதுபோன்ற அறியாமையில் இருந்தும் நம்மை காத்தான். குர்ஆன் என்றால் என்ன ஹதீஸ் என்றால் என்ன மொத்தத்தில் இஸ்லாம் என்றால் என்ன என்று சாதாரண முஸ்லிம்கள் கூட அறியும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்தினான். குர்ஆன் மொழிபெயர்ப்புகளும் ஹதீஸ் மொழிபெயர்ப்புகளும் இன்று நம் கையில் இருக்கிறது.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சில அல்ல பல மூட கோமாளிகள் இன்னும் உளறிக் கொண்டிருக்கிறார்கள் மார்க்க மேதை என்ற பெயரில். அது என்னவென்றால் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பை ஒரு சாதாரண முஸ்லிம் வாசித்தால் அவர்களால் விளங்க முடியாது என்று. ஆனால் அனைத்தையும் அறிந்த அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான் இந்த குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம் படிப்பினை பெறுவோர் உண்டா என்று.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஏகத்துவ தென்றல் அல்லாஹ்வின் அளப்பரிய கிருபையினால் வீச ஆரம்பித்தது. அந்த தென்றலின் சுகத்தை பலர் உணர ஆரம்பித்தார்கள். &lt;a href="http://tntj.net/" target="_blank"&gt;&lt;span style="color: #7d037d;"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்&lt;/span&gt;&lt;/a&gt; என்ற அமைப்பு கடந்த முப்பது வருடங்களாக இந்த தென்றலை பல பகுதிகளுக்கு சாதாரண முஸ்லிம்களுக்கு கொண்டு சென்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;இந்த ஜமாத்தை நிறுவி இஸ்லாத்தையும் அதன் ஓரிறைக் கொள்கையையும் உயிர் மூச்சாகக் கொண்டு இன்றளவும் இந்த &lt;a href="http://www.tntj.net/" target="_blank"&gt;&lt;span style="color: #7d037d;"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை&lt;/span&gt;&lt;/a&gt; கட்டுக் கோப்பாக ஒரு சாதாரண முஸ்லிமாக ஜமாத்தின் பல உறுப்பினர்களில் ஒரு உறுப்பினராக இருந்து சேவையாற்றி வரும் மௌலவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக. அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கத்தை வைத்து வயிறு வளர்த்த ஆலிம்கள் என்ற பெயரில் திரிந்தவர்களுக்கு இந்த &lt;a href="http://www.tntj.net/" target="_blank"&gt;&lt;strong&gt;&lt;span style="color: #7d037d;"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt; சாவு மணி அடித்தது. இதன் காரணமாக பொங்கி எழுந்த இந்த உலமா பெருமக்கள்??? &lt;a href="http://www.tntj.net/" target="_blank"&gt;&lt;span style="color: #7d037d;"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்&lt;/span&gt;&lt;/a&gt; மீதும் &lt;strong&gt;&lt;a href="http://onlinepj.com/" target="_blank"&gt;&lt;span style="color: #7d037d;"&gt;மௌலவி பி. ஜைனுல் ஆபிதீன்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt; அவர்களின் மீதும் அதிகமான விமர்சனங்களையும் மற்றும் அவதூறுகளையும் பரப்பினார்கள். ஆனால் இதில் எந்த அடிப்படையும் இருக்காது ஆதாரமும் இருக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;இந்த ஒன்றுக்கும் உதவாத ஆலிம்கள் இதுவரை மார்க்கத்திற்காக ஒரு போராட்டத்தையோ அல்லது முஸ்லிம்களுக்காக ஒரு போராட்டத்தையோ செய்தது கிடையாது. இவர்கள் தங்கள் வாழ்நாளை மௌலூது ஓதுவதிலும் பாத்திஹா ஓதுவதிலும் சந்தனம் பூசுவதிலும் சந்தனக் கூடு இழுப்பதிலும் கழிப்பவர்கள். இவர்கள் தங்கள் நிலையை குறித்து ஆராய வேண்டும்.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அல்லாஹ்வின் உதவியோடு &lt;a href="http://www.tntj.net/" target="_blank"&gt;&lt;span style="color: #7d037d;"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்&lt;/span&gt;&lt;/a&gt; மார்க்கப் பணியோடு&amp;nbsp;சமூகப் பணியையும்&amp;nbsp;சேர்த்து செய்தது. அத்துடன் எதிர்தரப்பினர்களின் விமர்சனங்களுக்கும் அவதூறுகளுக்கும் அவ்வப்போது தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது இந்த ஜமாஅத். ஏனென்றால் இந்த ஜமாத்திற்கு இருக்கிற பணிகள் போதாத காரணத்தினால் இந்த எதிர்தரப்பினர்கள் அளிக்கும் கூடுதல் பணி இது. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே இது போன்ற அவதூறுகளும் ஆரோக்கியமற்ற விமர்சனங்களும் இந்த அறிவிளிகளால் ஏறபடுவது எதிர்பார்த்த ஒன்று தான். இவைகளையும் இவர்களையும் அலட்சியம் செய்வோம். &lt;a href="http://www.tntj.net/" target="_blank"&gt;&lt;span style="color: #7d037d;"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்&lt;/span&gt;&lt;/a&gt; செயல்பாடுகளில் பங்கு கொள்வோம். நம் முஸ்லிம் சமுதாயத்தை பலமான சமுதாயமாக கல்வி வேலைவாய்ப்பில் முன்னேறிய சமுதாயமாக மாற்றுவது நம்மீது உள்ள கடமை. அல்லாஹ்வின் உதவியால் நாம் சாதனை படைப்போம். தவ்ஹீத் ஜமாஅத் சேவைகளுக்கு அரணாய் இருப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;a href="http://www.tntj.net/" target="_blank"&gt;&lt;span style="color: #7d037d;"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #741b47;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;இஸ்லாம் ஒரு அறிமுகம் என்ற நிகழ்ச்சியை முதல் முறையாக தொலைக்காட்சி வாயிலாக அறிமுகப்படுத்தியது. &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;ஒவ்வொரு வருடமும் ரமளானில் தொடர் உரைகள் மூலமாக முஸ்லிம்களுக்கு சொற்பொழிவாற்றுதல். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;உண்மையான இஸ்லாத்தை முஸ்லிம்கள் அறிவதற்காக ஒவ்வொரு மாதமும் பல ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்துவது. &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;வரதட்சணை ஒழிப்பு கருத்தரங்குகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தி வரதட்சணை என்ற சமூக கொடுமைக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;எந்த அரசு வந்தாலும் தவறை சுட்டிக் காட்டும் முதுகெலும்புடன், இடஒதுக்கீட்டிற்காக வரலாறு கண்டிராத போராட்டங்களை நடத்தி, முஸ்லிம்களுக்கு இறைவனின் நாட்டத்தால் இடஒதுக்கீடு பெற்றுத் தந்து 50 ஆண்டு கால வரலாற்றை மாற்றியமைத்தது. &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;தற்கொலைக்கு காரணமான கொடிய வட்டிக்கு எதிராக மக்களிடையே பிரச்சாரங்கள் செய்வது. &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;வட்டிக்கு எதிரான பிரச்சாரத்தோடு மட்டும் நின்று விடாமல் உதவி செய்யும் விதமாக ஜமாஅத் மூலம் பல கிளைகளில் வட்டியில்லா கடன் வழங்குவது. இன்னும் பல கிளைகளில் இதை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வது. &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;முஸ்லிம்களுக்காக உணர்வு என்ற வார இதழையும், ஏகத்துவம் என்ற மாத இதழையும் முஸ்லிம் பெண்களுக்காக தீன்குலப் பெண்மணி என்ற மாத இதழையும் நடத்துவது. &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;உயிர்காக்கும் இரத்ததான உதவி செய்தல். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;ஏழைகளுக்காக பல ஊர்களில் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம்கள். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;பித்ரா என்றால் என்னெவென்று தெரியாமல் இருந்த முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் முஸ்லிம்களிடம் இருந்து பித்ரா தொகை வசூல் செய்து ஏழைகளுக்கு விநியோகம் செய்தல். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;ஒவ்வொரு வருடமும் பல கிளைகள் மூலமாக கூட்டு குர்பானி ஏற்பாடு செய்து ஏழைகளுக்கு விநியோகம் செய்தல். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நேரடியாகச் சென்று உதவி செய்தல். அவர்களுக்காக களத்தில் இறங்கி நிதி திரட்டி உதவி செய்தல். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;பொது மற்றும் நடமாடும் நூலகங்களை ஏற்படுத்தி அதன்மூலம் சிடி மற்றும் நூல்களை தங்கள் இல்லத்திற்கு இலவசமாக எடுத்துச் சென்று படிக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தல். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;இஸ்லாத்தை தழுவும் சகோதரர்களுக்கு தாவா மையங்களை ஏற்படுத்தி அதன்மூலம் இலவசமாக மார்க்க கல்வி பயிற்றுவித்தல். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;இஸ்லாத்தை அறிய விரும்பும் சகோதரர்கள் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பினால் அவர்களுக்கு இலவசமாக நூல்களை அனுப்பி கொடுத்தல். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;தகவல் தொழில்நுட்பம் மற்றும் மீடியாக்களின் மூலமாக உள்ளூர், வளைகுடா மற்றும் பிற நாடுகளில் வாழும் சகோதரர்களுக்காக மார்க்க நிகழ்சிகளை ஒளிபரப்புதல். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;முஸ்லிமல்லாதவர்களுக்காக இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியும் முஸ்லிம்களுக்காக இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியும் பல ஊர்களில் நடத்தி வருவது. &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கு கிடைக்கும் உதவிகளை அறிய விரும்புபவர்களுக்கு உதவி செய்தல். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;முதியோர் உதவித்தொகை, ஏழைப் பெண்கள் திருமண உதவித்தொகை, விதவைகளுக்காக உதவித்தொகை மற்றும் பிரசவ உதவித்தொகை மற்றும் இதுபோன்ற அரசு நலத் திட்டங்களை அறியாத மக்களுக்கு வழிகாட்டுதல். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;வீட்டிலிருந்து சம்பாதிக்க வழிமுறைகளை விளக்குதல். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;சமூகத்திற்கு பாதிப்பு, அநீதி, அரசாங்க அடக்குமுறை இவைகளுக்கு எதிராக களமிறங்கி போராடுவது. &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இழைக்கப்படும் கொடுமைக்காக சக்திக்கு உட்பட்டு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தல். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: #741b47;"&gt;இதுபோன்ற பணிகள் சிறப்பாக நடக்க நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிகளை உங்கள் ஊரிலும் செயல்படுத்தவும் உங்களுக்காக உழைக்கவும் &lt;/span&gt;&lt;a href="http://www.tntj.net/" target="_blank"&gt;&lt;span style="color: #741b47;"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: #741b47;"&gt; தயாராக இருக்கிறது. அதற்காக தலைமையகத்தை தொடர்பு கொண்டால் தகுந்த விளக்கத்தைப் பெறலாம். &lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;இதுபோன்ற பல மார்க்க மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் &lt;a href="http://www.tntj.net/" target="_blank"&gt;&lt;span style="color: #7d037d;"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்&lt;/span&gt;&lt;/a&gt; மார்க்க வரம்புக்கு உட்பட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி மறுமை வாழ்கையை இலக்காகக் கொண்டு நாணயம் மற்றும் நேர்மையை கடைபிடித்து வெளிநாட்டு அரசாங்கத்திடமோ அல்லது வெளிநாட்டு நிறுவனத்திடமோ பொருளாதார உதவியை பெறாமல் பொதுமக்களுக்காக பொதுமக்களிடமே நிதி வசூல் செய்து அதில் ஒரு பைசாவைக் கூட முறைகேடாக பயன்படுத்தாமல் முறையாகப் பயன்படுத்தி வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே இந்த &lt;a href="http://www.tntj.net/" target="_blank"&gt;&lt;span style="color: #7d037d;"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்&lt;/span&gt;&lt;/a&gt; மீதுள்ள வெறுப்புகளையும் தவறான எண்ணங்களையும் விட்டுவிட்டு இந்த ஜமாத்தின் செயல்பாடுகளை அறிந்து உங்களை நீங்கள் இந்த ஜமாத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். மேலும் அறிய கிளிக் செய்யவும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="MsoNormal" style="line-height: normal; margin: 0in 0in 10pt; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; mso-outline-level: 3; text-align: left;"&gt;&lt;span style="color: #4c1130; font-family: 'Georgia Serif','serif'; mso-bidi-font-family: 'Times New Roman'; mso-fareast-font-family: 'Times New Roman';"&gt;&lt;a href="http://mpmpages.blogspot.com/2010/09/blog-post_3497.html" target="_blank"&gt;&lt;span lang="TA" style="color: #9f0606; font-family: Latha; mso-bidi-language: TA; text-decoration: none; text-underline: none;"&gt;&lt;strong&gt;Link-01&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="line-height: normal; margin: 0in 0in 10pt; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; mso-outline-level: 3; text-align: left;"&gt;&lt;span style="color: #4c1130; font-family: 'Georgia Serif','serif'; mso-bidi-font-family: 'Times New Roman'; mso-fareast-font-family: 'Times New Roman';"&gt;&lt;a href="http://thawheedmulakkam.blogspot.com/2010/07/blog-post_8912.html" target="_blank"&gt;&lt;span style="color: #814823;"&gt;&lt;strong&gt;Link-02&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: black;"&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="line-height: normal; margin: 0in 0in 10pt; mso-margin-bottom-alt: auto; mso-margin-top-alt: auto; mso-outline-level: 3; text-align: left;"&gt;&lt;span style="color: #4c1130; font-family: 'Georgia Serif','serif'; mso-bidi-font-family: 'Times New Roman'; mso-fareast-font-family: 'Times New Roman';"&gt;&lt;a href="http://www.tntj.net/" target="_blank"&gt;&lt;span style="color: #9f0606;"&gt;&lt;strong&gt;Link-03&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;a href="http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/maranaththirkuppin/" target="_blank"&gt;&lt;span style="color: #7d037d;"&gt;தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகளுக்கான ஆதாரம் மௌலவி பி.ஜே அவர்களின் உரையிலிருந்து,&lt;/span&gt;&lt;/a&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;&lt;a href="http://mpmpages.blogspot.com/2010/11/blog-post_22.html" target="_blank"&gt;மேலப்பாளையம் பதிவுகள்.&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-7228292152834144112?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/7228292152834144112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/02/blog-post_15.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/7228292152834144112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/7228292152834144112'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/02/blog-post_15.html' title='அவதூறுகளுக்கு அப்பால்? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்!'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_btwPOzqW8bg/TOpAyxVMeKI/AAAAAAAAAoc/XVXY_bBCA_Q/s72-c/IMG_1363-300x200.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-2647656261974096988</id><published>2011-02-06T01:17:00.000-08:00</published><updated>2011-02-06T01:19:33.709-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆய்வுகள்'/><title type='text'>ஏகத்துவமும், சோதனைகளும்...!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;ஸஃது (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே (அல்லாஹ்விற்காக) மக்களில் அதிகமாக சோதிக்கப் பட்டவர்கள் யார்?'' என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ''நபிமார்கள் பிறகு அவர்களைப் போன்றவர்கள். பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு முதுகெலும்பாக (உறுதியாக) இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப்பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப் படுவான். ஒரு அடியான் அவன் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்'' என்று கூறினார்கள். நூல்: திர்மிதி 2322&lt;br /&gt;&lt;br /&gt;இன்று குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம் என உறுதிகொண்டு அதனைப் பிரச்சாரம் செய்கின்ற ஒவ்வொருவரும் மேற்கண்ட ஹதீஸை மனதில் நிறுத்தக் கடமைப்பட்டுள்ளனர். இன்று தான் ஏகத்துவவாதிகளுக்கு மத்தியில் எவ்வளவு திருப்பங்கள் மாற்றங்கள் கருத்துருவாக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நேரத்தில் தர்ஹா வழிபாட்டை எதிர்த்து, மத்ஹபு பிரிவுகளை எதிர்த்து, சடங்கு சம்பிரதாயங்களை, பித்அத்தான அனாச்சாரங்களை எதிர்த்தவர்கள், வரதட்சணை திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டோம் என சூளுரைத்தவர்கள், ஊரை எதிர்த்து சமுதாயத்தை எதிர்த்து குடும்பத் தினரை எதிர்த்து, ஏன்? பெற்றெடுத்த தாய் தந்தையர்களைக் கூட எதிர்த்து எங்களுடைய தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டும் தான் நாங்கள் பின்பற்றுவோம். மார்க்க விஷயங்களில் எவருக்கும் வளைந்து கொடுக்கமாட்டோம் என மார் தட்டியவர்கள், இது போன்று எதிர்த்துக் கூற வ­மையில்லா விட்டாலும் நீங்கள் செய்வது சரிதான். இதுதான் சரியான வழிமுறை என்று ஆதரவாகப் பேசியவர்கள் இவர்களுக்கு மத்தியில்தான் எவ்வளவு திருப்பங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டுரையை எழுதுகின்ற நான் இந்த உண்மையான ஏகத்துவக் கொள்கையை விளங்கி ஆறு அல்லது ஏழு வருடங்கள் தான் ஆகின்றது. ஆனால் எனக்கு ஏகத்துவத்தைப் போதித்தவர்கள் தமிழகத்தில் இப்பிரச்சாரத்தின் ஆணி வேராகத் திகழ்ந்தவர்கள். அவர்களின் மூலம் நான் ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்னால் தமிழக முஸ்­லிம்களின் மார்க்கத்தின் நிலைகளைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறேன். இஸ்லாமிய சமுதாயம் ஓரிறைக் கொள்கைளை விளங்காமல் இணைவைக்கும் காரியங்களில் தான் மூழ்கிக் கிடந்தார்கள். இவைகள் தான் நம்மை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லக் கூடியவை என்று ஒரு ஆழமான நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. எங்கு நோக்கினும் கோயில் வழிபாடுகளைப் போல் மக்கள் தர்ஹாக்களிலும் கந்தூரி உரூஸ் திருவிழாக்களிலும் தான் மூழ்கிக் கிடந்தனர். தாயத்து தகடுகள் தான் அவர்களின் வீடுகளிலும் கடைகளிலும் அவர்களின் உடல்களிலும் அவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபாத்திஹாக்கள், மவ்லூதுகள், நூறு மஸாலாக்கள் தான் அவர்களுக்கு இறைவேதம் போல் காட்டப்பட்து. திருமறைக்குர்ஆனை மக்களுக்குக் கற்பிக்க வேண்டிய ஆ­ம் பெருமக்களே அதனைத் தமிழில் வெளியிடுவதற்குப் பெரும் தடைக் கற்களாக இருந்தார்கள். அனைத்து அனாச்சாரங்களிலும் முன்னின்று வழி நடத்தியவர்கள் இந்த ஆ­ம் பெரு மக்கள் தான். மக்கத்து காஃபிர்களின் இணைவைப்புக் கொள்கைகளை விட மிக மோசமான கொள்கையில் தான் அன்று நம்முடைய சமுதாயம் மூழ்கிக் கிடந்தது. மக்கத்து காஃபிர்களாவது துன்பம் வரும்போது அல்லாஹ்வை மட்டும் அழைப்பார்கள் என திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் இவர்களோ துன்ப நேரத்திலும் கூட 'முஹையித்தீனே' என்னை காப்பாற்றுங்கள்'' என்று அழைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கத்தைப் போதிக்க வேண்டிய மதரஸாக்கள் மத்ஹபு வெறியை வளர்க்கக் கூடிய கூடங்களாகவும். அங்கு பயின்று வெளிவரும் மாணவர்கள் புரோகிதர்களாகவும் மாறிக் கொண்டிருந்தனர். வரதட்சணைக் கொடுமை தலை விரித்தாடியது. வட்டியை பாவம் என்று அறியாமலேயே சமுதாயம் அதில் மூழ்கிக் கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்க விஷயத்தில் மட்டும் அவர்கள் பேரிழப்பில் இருக்கவில்லை. அரசியல் ரீதியாகவும் அவர்கள் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். தங்களுக்கெதிராக உலக அளவில் பின்னப்படுகின்ற சதிவலைகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. கிறிஸ்தவ சமுதாயத்தவர்கள், மதவெறியர்கள், நாத்திகவாதிகள், காதியானிகள் இஸ்லாத்தை சரியாக விளங்காமல் செய்கின்ற அவதூறுப் பிரச்சாரங்களுக்கு பதிலளிக்க இவர்களுக்குத் தெம்பில்லை. இஸ்லாமிய சமுதாயத்தவர்கள் சினிமா நடிகர்களை தங்களுடைய வாழ்க்கைக்கு முன் மாதிரியாக்கி அவர்களுக்குப் பின்னால் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். சமுதாயத்தில் காணப்பட்ட மூடநம்பிக்கைகளையும் அனாச்சாரங்களையும் கண்ட சிலர் இஸ்லாத்தையே வெறுத்து கம்யூனிஸ்டுகளாகவும் நாத்திகவாதிகளாகவும் மாறினர்கள். சின்னஞ் சிறிய சமுதாயங்கள் கூட தங்களுடைய உரிமைகளுக்குப் போராடி இடஒதுக்கீட்டைப் பெற்றுக் கொண்டிருந்த வேளையில் இவர்களுக்கென்று குரல் கொடுப்பதற்கு யாருமில்லை. போராட்ட வழிமுறைகளை அறியாமல் சமுதாயம் தடுமாறிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களை மார்க்க ரீதியாக சீர்திருத்தம் செய்யக்கூடிய எந்த இயக்கங்களும் அப்பொழுது தமிழகத்தில் இல்லை என நான் கூற வரவில்லை. இவற்றையெல்லாம் தவறு என விளங்கியவர்கள் அன்றைக்கும் இருக்கத்தான் செய்தனர். மக்கள் அந்த நம்பிக்கைகளில் கொண்டிருந்த நம்பிக்கையையும், ஆழ்ந்த பற்றையும் பார்த்தவர்கள் இதனை எதிர்த்துக் கூறினால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைக் கவனித்துத் தங்களோடு அதனை நிறுத்திக் கொண்டனர். இவற்றை எதிர்த்தால் தங்கள் இயக்கத்திற்குக் கூட்டம் சேராது என்ற கவலையும் அவர்களுக்கு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பட்ட காலகட்டத்தில் தான் பின் விளைவுகளைப் பற்றிக் கொஞ்சம் கூட சிந்திக்காமல் உள்ளதை உள்ளபடி தெளிவாகக் கூறி உண்மையான இஸ்லாத்தைப் போதிக்கக் கூடிய அழைப்பாளர்கள் இறைவனின் அருளால் உருவானார்கள். தமிழகத்தில் முஸ்­ம்களுக்கு மத்தியில் யாருடைய வார்த்தைகளுக்கும் இல்லாத தாக்கங்களும் எதிர்ப்புகளும் இவர்களுடைய வார்த்தைகளுக்கு இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் சத்தியப் பிரச்சாரம் ஒ­த்தது. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஏகத்துவத்தைப் போதிக்கக் கூடியவர்களின் கேஸட்டுகளும் கட்டுரைகளும் அலசப்பட்டுக் கொண்டிருந்தன. உண்மையான தவ்ஹீதை விளங்கி அதைப் பின்பற்றிய சகோதரர்கள் சமுதாய ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளானார்கள். ஊர்விலக்கம் செய்யப்பட்டார்கள், அவர்கள் பள்ளிவாசல்களுக்குள் வருவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் தொழுகையில் விரலை அசைக்கிறார்கள், நெஞ்சில் தக்பீர் கட்டுகிறார்கள், குழப்பம் செய்கிறார்கள் என அவர்கள் வெளிப்படையாகக் கூறிக் கொண்டாலும் அவர்கள் தடை செய்ததன் உண்மையான காரணம் அவர்களின் கொள்கைப் பிரச்சனை தான். காலம் காலமாக நாமும் நம்முடைய மூதாதையர்களும் செய்து வந்தவற்றை இவர்கள் கூடாது என்கிறார்களே இவற்றைச் செய்தால் நரகம் என்கிறார்களே என்ற கொள்கை வெறி தான் அவர்களைத் தூண்டிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த ஆ­ம் பெருமக்களும் இவர்களால் எங்கே நம்முடைய பிழைப்பிற்கு ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்து ''ஜமாத்துல் உலமா''வின் மூலம் கடுமையான எதிர்ப்புகளும் நம்மைப் பற்றி அவதூறுப் பிரச்சாரங்களையும் கடுமையாகத் தூண்டிவிட்டனர். சமுதாயத் துரோகிகள், யூதக் கைக்கூ­கள், பிரிவினை வாதிகள் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;''எரிகிற தீயில் பிடுங்கிய வரை லாபம்'' என்று கூறுவது போல் இந்த எதிர்ப்புகளைப் பயன்படுத்தி தங்களுடைய இயக்கத்திற்கு ஆள் பிடிப்பதற்காக முஸ்­ம் லீக், ஜமாத்தே இஸ்லாமி, தப்லீக் ஜமாத் போன்ற இயக்கத்தினரும் இவர்களை கடுமையாக எதிர்த்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்புகள் கடுமையாக இருந்தாலும் இந்த தவ்ஹீது பிரச்சாரம் மேலோங்கிய பிறகு இஸ்லாத்தின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறிய கிறிஸ்தவர்களுக்கும், மத வெறியர்களுக்கும், பிற மத சகோதரர்களுக்கும், நாத்திகவாதிகளுக்கும், காதியானிகளுக்கும் ஆதாரப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பதிலளிக்கப்பட்டது. இஸ்லாத்தைத் தவறாக விளங்கியவர்களெல்லாம் அதனுடைய தனிச் சிறப்பை விளங்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. கப்ரு வணங்கிகளோடு விவாதம் செய்யப்பட்டு உண்மையான மார்க்கம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இஸ்லாம் என்பது குர்ஆன் ஹதீஸ் மட்டும்தான். மத்ஹபு பிரிவினைகளுக்கும், தரீக்கா பிரிவினைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என எடுத்துரைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஏகத்துவப் பிரச்சாரகர்களின் பிரச்சாரத்தின் மூலம் அனைத்து அனாச்சாரங்களையும் இல்லாமல் ஆக்க முடியவில்லை என்றாலும் நாளுக்கு நாள் அதி­ருந்து விடுபடக்கூடிய சகோதரர்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களுக்குரிய எதிர்ப்புகளும் பலவிதங்களில் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்க விஷயத்தில் மட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் விழிப்புணர்வு ஏற்பட்டது. மார்க்க ரீதியாக இவர்களை எதிர்ப்பவர்கள் கூட இவர்களுடைய பொது நலச் சேவைகளையும், சமுதாயப் பிரச்சினைகளில் இவர்கள் காட்டுகின்ற தீவிரத்தையும் கவனித்து இவர்களுக்குப் பின்னால் அணி வகுக்கத் துவங்கினர். முஸ்­ம்களுக்கு எதிராக பின்னப்படும் சதி வலைகள் அனைத்தும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. ஜனநாயக ரீதியாகப் போராடும் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டனர். தங்களுடைய பிரச்சனைகளையும் பாதிப்புகளையும் மேல் மட்டம் வரை கொண்டு செல்லும் திறனைப் பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்க ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும். பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வரும் இவர்களுக்கு மத்தியில் இப்பொழுது புதுவிதமான ஒரு சோதனையும் ஏற்பட்டிருக்கிறது. அது ஒரு சில தவ்ஹீத்வாதிகள், சத்தியப் பிரச்சாரத்தையே சதிவேலை எனக் கூறும் அளவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுடைய சத்தியப் பிரச்சாரத்தின் மூலம் கவரப்பட்ட இளைஞர்கள் தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருப்பதைப் பார்த்த சில போ­கள் அவர்களைத் திசை திருப்புவதற்காக இவர்களைப் போன்று தங்களையும் காட்டிக் கொண்டு இவர்களோடு கலந்தனர். தங்களுக்கென்று செல்வாக்கையும் தேடிக் கொண்டனர். இன்றைக்கு இவர்கள் தங்களுடைய சுயரூபத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் என்று கூறுகின்ற இவர்கள் தர்ஹா வழிபாட்டுக்காரர்களை எதிர்த்தால் நியாயம் என்று கூறலாம். மத்ஹபு பிரிவினைகளையோ, பித்அத்தான அனாச்சாரங்களையோ, வரதட்சணை திருமணங்களையோ இவர்கள் எதிர்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக தர்ஹா வழிபாடுகளையும், மத்ஹபு பிரிவினைகளையும், வரதட்சனைக் கொடுமைகளையும், பித்அத்தான அனாச்சாரங்களையும் எதிர்த்து சமுதாய ரீதியாக, குடும்ப ரீதியாக, வட்டார ரீதியாக பிரச்சினைகளை எதிர் கொள்கின்ற மக்களைப் பார்த்து ''இவர்கள் சமுதாயத் துரோகிகள். சமுதாய ஒற்றுமையை சீர் குலைத்தவர்கள், பிரிவினைவாதிகள், சின்னஞ் சிறிய உப்புச் சப்பில்லாத விஷயங்களுக் கெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். முஸ்­லிம்களைக் காஃபிர்கள் என்று கூறிவிட்டார்கள்'' என்றெல்லாம் விமர்சனங்களைத் துவக்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தர்ஹா வழிபாட்டை எதிர்ப்பதும். மவ்லூதுகளை எதிர்ப்பதும். தாயத்து, தகடுகளை எதிôப்பதும் வரதட்சனைக்கு எதிராக களமிறங்குவதும் இவர்களுக்குச் சின்னஞ் சிறிய விஷயமாகவும், சமுதாயப் பிரிவினைகளாகவும் தெரிகிறது. மறுமையை மறந்து இவ்வுலக வாழ்வை மட்டும் சிந்திக்கக் கூடிய இவர்கள் ''இதனை எதிர்ப்பதால் சமுதாயத்திற்கு என்ன இலாபம்?'' என்று கேட்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இவர்கள் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் நாம் இந்த இணை வைப்புக்காரியங்களை எடுத்துரைக்கும் போது நிச்சயம் பெரும்பான்மையான மக்கள் அதனை எதிர்க்கத் தான் செய்வார்கள். இதைத் தான் அனைத்து நபிமார்களின் வாழ்வும் நமக்கு உணர்த்துகிறது. பெரும்பான்மை மக்களின் ஆதரவின் மூலம் வளரத் துடிக்கின்ற இவர்கள் அதற்கு இடையூறாக நாமும் நம்முடைய பிரச்சாரமும் இருப்பதினால் தான் இவ்வாறு கூறத் துவங்கியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;சமுதாயம் எவ்வளவு எதிர்த்தாலும், அனைவருமே இந்த சத்தியப் பிரச்சாரத்திற்கு எதிராகக் களமிறங்கினாலும், எவ்வளவு பின்னடைவுகளைச் சந்தித்தாலும் இந்த சத்தியப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டோம் என்பதில் உண்மையான தவ்ஹீத் வாதிகள் உறுதியாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சத்தியப் பிரச்சாரத்திற்காகத் தான் அல்லாஹ் அனைத்து நபிமார்களையும் அனுப்பியுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;''அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!'' என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம் (அல்குர்ஆன் 16:36)&lt;br /&gt;&lt;br /&gt;நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். ''என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார் (அல் குர்ஆன் 7:59)&lt;br /&gt;&lt;br /&gt;ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். ''என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' என்று அவர் கேட்டார். (அல்குர்ஆன் 7:65)&lt;br /&gt;&lt;br /&gt;ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸா­ஹை அனுப்பி வைத்தோம். ''என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை'' என்று அவர் கூறினார் (அல்குர்ஆன் 7:73)&lt;br /&gt;&lt;br /&gt;மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். ''என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 7:85)&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுலக வாழ்வு என்பது அற்பமானதாகும். மரணத்திற்குப் பிறகு நாம் சந்திக்கவிருக்கின்ற மறுமை வாழ்வு தான் நிரந்தரமானதாகும். மறுமையில் நம்மை காப்பாற்றக் கூடியது இந்த ஏகத்துவக் க­மா தான். இன்றைய சமுதாயமோ செல்வாக்கோ படை பலமோ அங்கு நமக்குப் பயனளிக்காது. பின் வரக்கூடிய ஹதீஸ்களி­ருந்து இந்தத் தவ்ஹீதின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்தி­ருந்து ஒரு மனினை தனியாக நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதி­ருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அல்லாஹ் அவனிடம் இதி­ருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா? என்று கேட்பான். ''என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள்தான்) என்று அவன் கூறுவான். (நீ வேதனையி­ருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் ''என் இரடசகனே ஏதுமில்லை'' என்று கூறுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும் அதில் ''அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு'' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் நிச்சயமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்று சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் க­லிமா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். ''என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?)'' என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் ''நிச்சயமாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய்'' என்று கூறுவான். அந்த பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்த சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடிவிடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது. அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ் (ர­லி) நூல்: திர்மிதி (2563)&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு ஹதீஸைப் பாருங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் (தனக்கு இணை வைக்காத ஒரு அடியானைப் பார்த்து) ''ஆதமுடைய மகனே நீ பூமி நிறைய பாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்கவில்லை. எனவே நான் உனக்கு பூமி நிறைய பாவமன்னிப்பை வழங்குகின்றேன்'' என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்: அஹ்மத் 20349&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனுக்கு இணை வைத்து விட்ட ஒருவன் மறுமையில் இவ்வுலக அளவிற்கு தங்கத்தைத் கொடுத்தாலும் நரக வேதனையி­ருந்து தப்பிக்க முடியாது என்பதை பின்வரக்கூடிய ஹதீஸி­ருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஒரு காஃபிர் (அல்லாஹ்வின் முன்னிலையில்) கொண்டு வரப்படுவான். ''உனக்கு பூமி நிறைய தங்கம் இருந்தால் நீ (நரக வேதனையி­ருந்து தப்பிப்பதற்காக) அதனை ஈடாகக் கொடுத்து விடுவாயா? நீ என்ன கருதுகின்றாய்?'' என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் ''ஆம்'' என்று கூறுவான். ''இதை விட மிக இலேசான ஒன்றை (எனக்கு இணைகற்பிக்காதே என்று) தானே நீ உலகத்தில் கேட்கப்பட்டாய். (ஆனால் நீ அதனைச் செய்து நிரந்தர நரகத்தில் வீழ்ந்து விட்டாய்)'' என்று அவனுக்கு கூறப்படும். அறிவிப்பவர்: அனஸ் (ர­லி) நூல்: புகாரி 6538&lt;br /&gt;&lt;br /&gt;நம்மை மறுமையில் காப்பாற்றக் கூடியது இந்த ஏகத்துவம் மட்டும் தான். நாம் அதில் தவறிழைத்து விட்டோம் என்றால் அதை விடப் பேரிழப்பு வேறோன்றுமில்லை. நாம் மக்களுக்கு செய்கின்ற சேவைகளிலேயே மிகச் சிறந்த சேவை அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைப்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு இதைத் தவிர மற்ற அனைத்துப் பணிகளுக்கும் பெரும் கூட்டம் இருக்கிறார்கள். இந்த சத்தியப் பிரச்சாரத்தை எடுத்துரைப்பதற்குத் தான் அனைவரும் தயங்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் இதனை எடுத்துரைக்கும் போது அவனுக்குப் பல விதமான சோதனைகள் பல விதங்களிலும் வந்து கொண்டிருக்கும். அப்படி சோதனைகள் வரவில்லை யென்றால் நாம் சத்தியத்தைக் கூறவில்லை என்று தான் பொருள். இதைத் தான் நாம் முத­ல் குறிப்பிட்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஏகத்துவ வாதி இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் சோதனைகளைச் சந்தித்து தான் தீரவேண்டும். நமக்கு நிரந்தர வெற்றி மறுமையில் தான் இருக்கிறது. எனவே இப்படிப் பட்ட உண்மையை உணர்ந்து உண்மையான சத்தியக் கொள்கையைப் பின்பற்றி அதனை எடுத்துரைத்து வாழக் கூடியவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக. &lt;a href="http://dubaitntj.blogspot.com/2010/12/blog-post_7556.html" target="_blank"&gt;Source&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-2647656261974096988?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/2647656261974096988/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/2647656261974096988'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/2647656261974096988'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2011/02/blog-post.html' title='ஏகத்துவமும், சோதனைகளும்...!'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-6352146396203726531</id><published>2010-12-26T21:40:00.000-08:00</published><updated>2010-12-26T22:00:14.305-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்வியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இத்தா'/><title type='text'>இத்தா: கடைபிடிக்க வேண்டியவைகள்!</title><content type='html'>&lt;a name='more'&gt;&lt;/a&gt;சில முஸ்­லிம்கள் கணவன் இறந்துவிடும் போது மனைவியாக இருந்தவளை இத்தா என்ற பெயரில் நான்கு மாதம் பத்து நாட்கள் இருட்டறையில் அடைத்து கொடுமைப்படுத்துகின்றனர். மேலும் வெள்ளைநிற ஆடையை அணிவிக்கின்றனர். நற்காரியங்களில் அவர்கள் வருவது அபசகுணம் என்று கூறி ஒதுக்கி வைக்கின்றனர். இது குற்றமாகும். இத்தா பற்றிய சரியான விளக்கம் இல்லாததே இதற்குக் காரணம். எனவே அது பற்றிய விபரங்களை காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவனை இழந்த பெண்களும், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். மேலும் திருமண ஆசையைத் தூண்டக்கூடிய அலங்காரங்களை செய்யக்கூடாது. இந்த கால கட்டமே இத்தா எனப்படும்.&lt;br /&gt;கணவனை இழந்த பெண் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் கழிப்பதற்குள் மறுமணம் செய்யக் கூடாது. விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாத விடாய் காலம் முழுமை அடைவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது. கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், அவர்கள் மறுமணம் செய்யக்கூடாது.&lt;br /&gt;உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். அல்குர்ஆன் (2 : 234)&lt;br /&gt;&lt;br /&gt;விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. அல்குர்ஆன் (2 : 228)&lt;br /&gt;&lt;br /&gt;கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்குர்ஆன் (65 : 4)&lt;br /&gt;&lt;br /&gt;கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தக் காலக்கெடுவிரிரிலிருந்து கர்ப்பினிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள் என்பதை மேலுள்ள வசனத்திரிரிலிருந்து அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் மரணிக்கும் போது மனைவி நிறைமாத கர்ப்பினியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது. கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இத்தாவின் போது அலங்கரித்தல் கூடாது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தா இருக்கும் பெண்கள் நறுமணம் பூசுதல் கண்களுக்கு சுர்மா இடுதல் கலர் ஆடைகளை அணியுதல் மருதாணி பூசுதல் போன்ற அலங்காரங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தலைக்கு எண்ணெய் தேய்த்து உடலையும் கூந்தலையும் தூய்மையாக வைத்துக்கொள்வதில் தவறில்லை. கூடுதலான அலங்காரங்களையும் ஒப்பனைப் பொருட்களையும் அதாவது மேக்கப் பொருட்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறந்து விட்டவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென நாங்கள் (நபியவர்களால்) தடைவிதிக்கப்பட்டோம். ஆனால் (கணவருக்காக அவர் இறந்தபின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர! (அதாவது இந்த நாட்கüல்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ, நறுமணம் பூசவோ சாயமிட்ட ஆடைகளை அணிவதோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்ட&amp;nbsp; (அஸ்ப் எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்துகொள்ளலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கணவனை இழந்தப் பெண் குங்குமப்பூச் சாயம் பூசப்பட்ட ஆடை மற்றும் சிவப்பு நிற ஆடையை அணியக்கூடாது. இன்னும் அவள் மருதாணி பூசக்கூடாது. அஞ்சனம் (அதாவது சுர்மா) இடுவதும் கூடாது. அறிவிப்பவர் : உம்மு சலமா (ர­லி) நூல் : நஸயீ (3479)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இத்தாவின் போது வெளியில் செல்லலாமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தா இருக்கும் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது என்று பலர் நினைக்கிறார்கள். இக்காலக்கட்டத்தில் அவர்களை இருட்டறையில் அடைத்துக் கொடுமைப் படுத்துகிறார்கள். இஸ்லாம் இவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறவில்லை. மற்றப் பெண்களைப் போல் இத்தாவில் இருக்கும் பெண்கள் தாராளமாக வெளியில் சென்று தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால் வீணாக ஊர் சுத்துவது கூடாது.&lt;br /&gt;என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (‘இத்தா’வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், ”ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள். ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்” என்றார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி­) நூல் : முஸ்லி­ம் (2972) &lt;a href="http://kadayanalluraqsha.com/?p=5524"target="_blank"&gt;Source&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-6352146396203726531?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/6352146396203726531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2010/12/blog-post_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/6352146396203726531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/6352146396203726531'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2010/12/blog-post_26.html' title='இத்தா: கடைபிடிக்க வேண்டியவைகள்!'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-2360468238976692701</id><published>2010-12-16T01:26:00.000-08:00</published><updated>2010-12-16T01:26:48.436-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வழிபாடு'/><title type='text'>நபி வழித் தொழுகை புகைப்பட விளக்கத்துடன்!</title><content type='html'>&lt;a name='more'&gt;&lt;/a&gt;நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103)&lt;br /&gt;&lt;br /&gt;தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2 : 238)&lt;br /&gt;&lt;br /&gt;(முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)&lt;br /&gt;&lt;br /&gt;இணைவைப்பு மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: நஸயீ என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல் : புகாரீ இந்த நபி மொழியைக் கவனத்தில் கொண்டு அடிப்படையில் நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;a href="http://www.tntj.net/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/"&gt;மேலும் இந்த கட்டுரையை முழுமையாக படிக்க இங்கு கிளிக் செய்யவும். TNTJ.&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-2360468238976692701?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/2360468238976692701/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2010/12/blog-post_16.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/2360468238976692701'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/2360468238976692701'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2010/12/blog-post_16.html' title='நபி வழித் தொழுகை புகைப்பட விளக்கத்துடன்!'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-1624021487130733257</id><published>2010-12-14T23:12:00.001-08:00</published><updated>2010-12-14T23:12:48.131-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தவ்ஹீத் ஜமாஅத்'/><title type='text'>தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!</title><content type='html'>&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_6oZb7qYAIwM/TPTJ8ql635I/AAAAAAAAABQ/bRw_C8pBfKI/s1600/tntj.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" ox="true" src="http://4.bp.blogspot.com/_6oZb7qYAIwM/TPTJ8ql635I/AAAAAAAAABQ/bRw_C8pBfKI/s200/tntj.jpg" width="161" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதன் நிறுவனர்களில் ஒரு ‎பிரிவினரான பி. ஜெய்னுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர் மற்றும் சிலரால் தனியாக பிரிந்து 16-05-‎‎2004 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்கிற பெயரில் இந்த அமைப்பு துவங்கப்பட்டது. ‎ஆரம்பத்தில் தமுமுக அரசியல் கட்சியாக செயல்படுகிறது அது ஏகத்துவப் ‎பிரச்சாரத்திற்கு தடங்கலாக உள்ளது என்கிற குற்றச்சாட்டுகளுடன் பிரிந்து வந்து இந்த ‎அமைப்பை உருவாக்கியது. ஆனால் பின்னர் தங்களுக்கென்று பச்சை வெள்ளை கருப்பு ‎கொடியுடன் அரசியல் சார்ந்த விவகாரங்களிலும் தலையிட்டு செயல்பட்டு வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நஜ்ஜாத் ‎அல்லது ஏகத்துவவாதிகள் என்று அழைக்கக்கூடியவர்களை மட்டுமே உறுப்பினர்களாக ‎கொண்டு தஃவா எனும் ஒரிறை அழைப்புப் பணியை செய்து வருகிறது.‎பின்னர் எஸ்.எம். பாக்கர் மற்றும் சிலர் இந்த அமைப்பிருந்து நீக்கப்பட்டு 16-01-2009 ‎அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்என்கிற பெயரில் புதிய அமைப்பு துவங்கியுள்ளனர்.‎&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு அரபு நாடுகளில் தமிழ் முஸ்லிம்களை நிர்வாகிகளாக கொண்டு கிளைகள் ‎அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ரமதான் காலங்களில் ஜகாத் மற்றும் ஏனைய ‎தர்மங்களைப் பெற்று தமிழகத்தில் இயங்கும் தலைமை அமைப்புக்கு வேண்டிய ‎நிதியுதவிகளை செய்து வருகின்றன.‎&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் இரத்தானம் செய்வதில் இரண்டு முறை முதல் இடம் பிடித்த முஸ்லிம் சமுதாய ‎இயக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அமைப்பின் கொள்கைள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‎1. இறைவேதம் திருக்குர்ஆனையும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் ‎வழிமுறையான சுன்னத்தையும் தனது வாழ்வில் வழி காட்டியாகவும் ஜீவ நாடியாகவும் ஏற்று ‎செயல் படுவதன் மூலமே ஒருவன் ஈடேற்றம் பெற முடியும்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎2. மனிதக்குலம் உயர்வதற்கு திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்கள் சுன்னத்தும் மாத்திரமே ‎போதும் அவற்றுடன் வேறெதுவும் தேவையில்லை.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎3. எந்தக் கருத்தாவது திருக்குர்ஆனின் ஏதேனுமொரு வசனத்திற்கோ, நம்பத்தகுந்த ‎ஏதேனுமொரு நபி மொழிக்கோ முரணாக இருந்தால் அது எவரது கூற்றாக இருந்தாலும் ‎புறக்கணிக்கப்படும்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎4. உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. ‎சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலின் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதைப் பற்றி மட்டும் ‎கருத்து கூறப்படும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அமைப்பின் நோக்கங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‎1. இவ்வமைப்பின் கொள்கைகளை தானும் ஏற்று பின்பற்றுவதுடன் அவ்வாறு பின்பற்றத் ‎தூண்டுவது.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎2. அமைப்பின் கொள்கைகளை விளங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தல் அதன்பால் அழைத்தல்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎3. மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சுகாதாரம், தொழில், தொழில் நுட்பம், ‎கலாச்சாரம், பண்பாடு, சமூக நலம் உள்ளிட்ட எல்லாதுறைகளிலும் மேம்பாடு ‎அடையப்பாடுபடுதல்.‎&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;கல்வி சேவை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாணவர் அணி தமிழகம் முழுக்க கல்வி சேவையை ‎செய்துவருகின்றது. ‎தவ்ஹீதை ஏற்ற படித்த இளைஞர்கள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் தமிழகம் ‎முழுவதும் இடைவிடாமல் அடித்தட்டு முஸ்லீம் மக்களின் கல்வி வளர்ச்சிகாக அயராது ‎உழைத்து கொண்டிருக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ், தமிழக்த்தில் எந்த முஸ்லீம் ‎அமைப்புகளும், கல்வி அறகட்டளைகளும் செய்திராத கல்வி சேவைகளை தமிழகத்தின் ‎அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை 255 கல்வி சேவை நிகழ்சிகளை தமிழகத்தில் 154 ‎இடங்களில் நடத்தி சாதனை புரிந்துள்ளது. TNTJ மாணவர் அணி செய்துவரும் பல்வேறு ‎பணிகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;கல்வி வளர்சி பணிகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‎1. கல்வி கற்பதும் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை வாங்குவதும் எளிதானதே, இதை ‎மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கும் விதமாக அல்லாஹ்வுடைய மிகப்பெரிய ‎கிருபையால் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாநிலம் முழுவதும் நடத்தி வருகின்றோம், ‎மிக குறுகிய காலத்தில் தமிழகத்தில் 154 இடங்களில் 255 மேற்பட்ட கல்வி கருத்தரங்குகளை ‎நடத்தி உள்ளோம், தமிழ முஸ்லீம்களுக்காக மட்டும் அல்லாமல் கர்நாடகா மாநிலத்திலும் ‎கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎2. மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்காலாம் ? என்று ‎அனைத்து சமுதாய மாணவ மாணவியரும் பயன்படும் வகையில் சிறந்த கல்வியாளர்களை ‎கொண்டு கல்வி கருத்தரங்கங்களை நடத்தி வருகின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎3 . ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரே நேரத்தில் கல்வி வழிகாட்ட கண்காட்சிகளை நடத்தில் ‎அதில் ஒவ்வொறு படிப்பிற்க்கும் தனி பிரிவுகள் அமைத்து மாணவ மாணவிகளுக்கு கல்வி ‎வழிகாட்டுகின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎4. நல்ல கல்லூரியில் சேர அதிகமாக மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும், அதற்க்காக தேர்வுக்கு ‎முன்னர் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சியை நடத்தி தேர்வு எழுதும் ‎நுணுக்கங்களை மாணவ மாணவியருக்கு கற்று கொடுக்கின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎5. வேலை வாய்ப்பு பெற ஆங்கில மொழித்திறமை அவசியம், அதற்க்காக ஆங்கில பயிற்சி ‎வகுப்புகள் இலவசமாக நடத்தி வருகின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎6. ஏழை மாணவர்களுக்கும் கணினி அறிவை மேம்படுத்த இலவசமாக கம்ப்யூட்டர் சாப்ட் வேர் ‎ஹார்ட்வேர் வகுப்புகள் நடத்தி வருகின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎7. கல்வியின் அவசியத்தை விளக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரங்களிலும், பொது ‎கூட்டங்களிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎8. சமுதாய மாணவர்கள் வேலை வாய்ப்பு தகவல் அறிந்து கொள்ள உள்நாடு வெளிநாட்டில் ‎வேலை உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை திரட்டி அனைவருக்கும் e-mail ‎மூலமாக தெரிவிக்கின்றோம். (நீங்களும் வேலை வாய்ப்பு தகவல் பெற tntjjob@gmail.com என்ற e-‎mail முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்).‎&lt;br /&gt;&lt;br /&gt;‎9. வேலைவாய்ப்பு பெற நடைபெறும் நேர்முக தேர்வில் எவ்வாறு பதில் என்று மாணவர்களுக்கு ‎‎" நேர்முக தேர்வு பயிற்சி முகாம்" நடத்திவருகின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎10. உயர் கல்வி நிறுவனக்கள் உயர்சாதியினருக்கே என்ற நிலைமையை மாற்றி IIT, IIM, IISc, NIT, ‎AIMS போன்ற உயர் கல்வி நிறுவங்கள் நடத்தும் நுழைவு தேர்வு பற்றிய தகவல்களை திரட்டி ‎முஸ்லீம்களும் உயர் கல்வி நிறுவங்களில் படிப்பதற்க்கான ஊக்கமும், வழிகாட்டுதலும், ‎பயிற்சியும் இலவசமாக அளித்து வருகின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎11. குழந்தைகளை எவ்வாறு படிக்க வைக்க வேண்டும், மாணவ மாணவியரின் கல்வி ‎மேன்பாட்டில் பெற்றோர்களின் பெரும் பங்கை விளக்கி பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல் ‎முகாம் களையும் நடத்தி வருகின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎12. மத்திய மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவி தொகையை முஸ்லீம் மாணவ ‎மாணவியருக்கு பெற்று கொடுக்கும் வகையில் அரசிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று ‎பூர்த்தி செய்து கொடுக்கும் முகாம்களை நடத்தி வருகின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎13. ஏழை மாணவ மாணவியருக்கு உதவும் வண்ணமாக இலவச நோட்டு புத்தகமும், எங்களால் ‎இயன்ற கல்வி உதவியும் செய்து வருகின்றோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;சமுதாய பணிகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‎1. முஸ்லீம்களுக்கு எதிரான பத்திரிக்கைதுறை பயங்கரவாதத்தை தடுக்க நமது சமுதாய ‎மாணவர்களும் பத்திரிக்கை துறையில் நுழைந்து சாதனை புறிய முஸ்லீம் மாணவர்க்ளுக்கு ‎பத்திரிக்கை துறை சம்மத்தமாக பயிற்சி அளித்து வருகின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎2. சமுதாய இளைஞர்களிடையே உள்ள வரதட்சணை மோகத்திற்க்கு எதிராக இளைஞர்களிடம் ‎வரதட்சணையால் ஏற்படும் தீமைகளை விளக்கி வரதட்சணைக்கு எதிராக கடுமையான ‎பிரச்சாரம் செய்து வருகின்றோம்&lt;br /&gt;&lt;br /&gt;‎3. இளைஞர்கள் மது, சிகெரெட் போன்ற போதை பழக்கத்திற்க்கு அடிமையாகமல் தடுக்க ‎மாணவர்களிடம் மது சிகெரெட் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீய்மைகளை விளக்கி ‎போதை எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வருகின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎4. நமது சமுதாய மாணவியர்களை காதல் என்ற போர்வையில் காவி கயவர்களிடம் சிக்காமல் ‎தடுக்க மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இதை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் ‎செய்து வருகின்றோம். காதல் என்ற பெயரில் நடக்கும் சமூக சீர்கேட்டிற்க்கு எதிராகவும் காதலர் ‎தினத்தில் நடக்கும் அனாச்சாரங்களுக்கு எதிராகவும், காதலர் தின எதிர்ப்பு பிரச்சாரம் ‎செய்கின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இஸ்லாமிய பணிகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‎1. முஸ்லீம்களின் இளைய சமுதாயம் ஷிர்க் பித்-அத் கொள்கையில் வீழ்ந்துவிடாமல் தடுக்க ‎மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏகத்துவ பிரசாரங்களை மேற்கொண்டுள்ளோம், ‎தனி நபர் தாவா மூலமும், துண்டு பிரசூரங்கள் மூலமும் ஏகத்துவ அழைப்பு பணியை ‎இளைஞர்கள் மத்தியில் முடுக்கிவிட்டுள்ளோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎2. மாணவர்கள் இஸ்லாத்தை முழுவதும்மாக அறிந்த்து கொள்ள ஒழுக்க பயிற்ச்சி முகாம் ‎‎(தர்பியா) நடத்தி வருகின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎3. மாற்று மத மாணவர்களின் இஸ்லாத்தை பற்றிய சந்தேகத்தை போக்கி இஸ்லாத்தின் பால் ‎அவர்களை அழைக்கும் வண்ணம் "மாற்று மத மாணவர்களுக்கான கேள்வி-பதில்" ‎நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றோம்&lt;br /&gt;&lt;br /&gt;‎4. சிறந்த இஸ்லாமிய அறிஞர்களை கொண்டு முஸ்லீம் மாணவர்களுக்கான கேள்வி-பதில் ‎நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎5. கல்லூரிகளில் ஜும்மா பயான் நிகழ்த்துவது, மாணவர் விடுதிகளில் (Hostels) இஸ்லாமிய ‎பயான்கள் நிகழ்த்துவது போன்ற தாவா பணிகளை செய்து வருகின்றோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎6 . SMS மூலம் கல்வி செய்திகள் குர் ஆன் ஹதீஸ்கள் பரப்பி வருகின்றோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இணையதள பணிகள் ‎&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணையதளத்தில் கல்வி வளர்ச்சி பணிகளையும் இஸ்லாமிய பணிகளையும் ஆற்ற ‎www.tntjsw.blogspot.com என்ற இணையத்தை (வலை பூ) நிறுவி உள்ளோம். இதில் கல்வி பற்றிய ‎தகவல்கள், குர் ஆன் ஹதீஸ்களையும் தொகுத்து வழங்கி உள்ளோம்.‎&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அமைப்பின் செயல் திட்டங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‎‎1. கல்வி நிறுவனங்கள் ஏற்ப்படுத்துதல்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎2. பத்திரிக்கைகள், மலர்கள், நுற்கள், பிரசுரங்கள், ஒளி-ஒலி நாடாக்கள், குறுந்தட்டுகள் ‎வெளியிடுதல்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎3. தொலைக்காட்சி, வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்குதல்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎4. தெரு முனை பிரச்சாரங்கள், சந்திப்புகள், கலந்துரையாடல், கூட்டங்கள், மாநாடுகள், ‎கருத்தரங்குகள் நடத்துதல்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎5. நோக்கங்கள் நிறைவேற நவீன விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையும், ‎சாதனங்களையும் தகவல் தொடர்பு சாதனங்களையும், கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட ‎அனைத்தையும் பயன்படுத்துதல்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎6. அதற்காக சொத்துக்கள் வாங்கி பராமரித்தல்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎7. நிதிக்காக உண்டியல், சந்தா, நன்கொடை மூலம் பொருள் திரட்டுதல்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎8. நோக்கங்கள் நிறைவேறவும், செயல்திட்டங்களை செயல்படுத்தவும் சிறப்புக் குழுக்கள், ‎அமைப்புகள் ஏற்படுத்தல்.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎9. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் ‎முஸ்லிம்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காகவும், ‎உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் முஸ்லிம்களின் மக்கள் ‎தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் தனித் தொகுதி முறையை பெற்றுத் தரவும் ‎பாடுபடுவது.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎10. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக – வரதட்சணை, வட்டி, சினிமா, ஆபாசம், அழகிப்போட்டி, ‎போதைப்பொருட்கள், மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு ‎பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் வெளியிடுதல், பிரச்சாரக் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் ‎நடத்துதல் மற்றும் தேவைக்கேற்ப ஜனநாயக ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கைகள் ‎மேற்கொள்வது.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎11. அடக்கு முறைகள், வரம்பு மீறல்கள், மனித உரிமை மீறல்கள், சட்ட மீறல்கள் ‎இவற்றுக்கெதிராகவும் போராடுவது.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎12. பாதிக்கப்பட்ட – அநீதி இழைக்கப்பட்ட எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து ‎வகையான உதவிகளையும் மேற்கொள்வது.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎13. மதவெறி , வன்முறை கலாச்சாரங்களை ஒழிப்பதற்குப் பாடுபடுவது.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎14. இளைஞர்களை வன்முறையின் பக்கம் செல்வதை விட்டும் தடுப்பதற்கு ‎அறவழிப்போராட்டத்திற்கான வழிமுறைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் ‎சொல்லி அவர்களை சிறந்த நெறியாளர்களாக உருவாக்கப்பாடுபடுவது.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎15. மத தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தலோ, ‎பாதிப்புகளோ ஏற்பட்டால்; அவற்றை ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் வலிமையாக ‎எதிர்ப்பது.‎&lt;br /&gt;&lt;br /&gt;‎16. அனைத்து மத, இன, மொழி மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ நல்லிணக்கத்தை ‎ஏற்ப்படுத்திட தேவையான அனைத்து முயற்ச்சிகளையும் மேற்க்கொள்வது.‎&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D#.E0.AE.85.E0.AE.AE.E0.AF.88.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.8D_.E0.AE.95.E0.AF.8A.E0.AE.B3.E0.AF.8D.E0.AE.95.E0.AF.88.E0.AE.B3.E0.AF.8D" target="_blank"&gt;ஆதாரம்: விக்கிபீடியா‎&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tntj.net/" target="_blank"&gt;&lt;strong&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிகாரப்பூர்வ இணையதளம்&amp;nbsp;TNTJ&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #7d037d;"&gt;&lt;strong&gt;&lt;a href="http://mpmpages.blogspot.com/2010/09/blog-post_3497.html" target="_blank"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்புடைய தலைப்புகள்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thawheedmulakkam.blogspot.com/2010/07/blog-post_27.html"&gt;&lt;strong&gt;ஏகத்துவ எழுச்சி&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/anbana_azaipu/" target="_blank"&gt;&lt;strong&gt;அன்பான அழைப்பு&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7206139074697101633-1624021487130733257?l=thawheedmulakkam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thawheedmulakkam.blogspot.com/feeds/1624021487130733257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2010/12/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/1624021487130733257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7206139074697101633/posts/default/1624021487130733257'/><link rel='alternate' type='text/html' href='http://thawheedmulakkam.blogspot.com/2010/12/blog-post_14.html' title='தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!'/><author><name>தவ்ஹீத் முழக்கம்!</name><uri>http://www.blogger.com/profile/04859551092327575557</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_6oZb7qYAIwM/TPTJ8ql635I/AAAAAAAAABQ/bRw_C8pBfKI/s72-c/tntj.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7206139074697101633.post-2065957004467411212</id><published>2010-12-10T09:46:00.000-08:00</published><updated>2010-12-14T02:04:38.705-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவலங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஹர்ரம்'/><title type='text'>முஹர்ரம் பத்தும் முஸ்லிம்களின் மூடப் பழக்கங்களும்!</title><content type='html'>&lt;a name='more'&gt;&lt;/a&gt;இஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று. ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது. &lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;கதிரவனை மறைக்கும் கர்பலா காரிருள்&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள். (ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட வரலாறு தனிக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது) &lt;br /&gt;&lt;br /&gt;மூஸா நபியை நம்பிய முஸ்லிம்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்குவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நாள் கர்பலாவால் மறைக்கப்பட்டு விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;கதிரவனை மறைக்கும் கிரகணத்தைப் போல ஆஷூரா தினத்தை, கர்பலாவும், அதையொட்டி ஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன. ஆஷூரா தினத்தை மையமாக வைத்து நடக்கும் பைத்தியக்காரத்தனமான செயல்பாடுகளையும், இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களையும், மாற்று மத அனுஷ்டானங்களையும் இப்போது பார்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;துக்க நாளாகி விட்ட ஆஷூரா &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹுசைன் (ரலி) கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒரு போதும் ஆகி விடாது.&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்களிடம் திங்கள் கிழமை நோன்பு நோற்பது பற்றி வினவப்பட்ட போது, “அது நான் பிறந்த நாளாகும். அந்த நாளில் தான் நான் இறைத்தூதராக அனுப்பப் பட்டேன்” என்று பதிலளித்தார்கள். (ஹதீஸ் சுருக்கம்).அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),நூல்: முஸ்லிம் 1387 &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை மரணித் தார்கள். (நூல்: புகாரி 1387) &lt;br /&gt;&lt;br /&gt;உலக வரலாற்றில் மிக மிக அருளுக்கும் ஆசிக்கும் உரிய நாள் அல்லாஹ்வின் வேதம் இறங்கிய நாளாகும். அந்த நாளை நபி (ஸல்) அவர்களின் மரணம் மறைத்து விடவில்லை. உலகில் நபி (ஸல்) அவர்களை விட சிறந்தவர் யாரும் கிடையாது. அப்படிப்பட்ட அவர்களின் மரண நாள் நினைவு கூரப்படுவதற்கு மிகவும் பொருத்தமான நாளாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த நாளையே நினைவு நாளாக, சோக நாளாக அனுஷ்டிக்க அனுமதியில்லாத போது மற்ற நாளை எப்படி சோக நாளாக அனுஷ்டிக்க முடியும்? இப்படியே இஸ்லாத்திற்காக உயிரை விட்ட நல்லவர்களின் மரண நாட்களைப் பார்த்தோம் எனில் நம் வாழ்நாளில் ஒரு நாள் கூட சந்தோஷ நாளாக இருக்காது. ஒவ்வொரு நாளும் துக்க நாளாகவே இருக்கும். அதனால் இஸ்லாத்தில் நினைவு நாளோ, பிறந்த நாளோ கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆண்டு தோறும் துக்கம் அனுஷ்டித்தல் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_6oZb7qYAIwM/TQNNohz_PWI/AAAAAAAAACM/dKQO9wf9xvE/s1600/ashoura20073-300x231.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="154" src="http://1.bp.blogspot.com/_6oZb7qYAIwM/TQNNohz_PWI/AAAAAAAAACM/dKQO9wf9xvE/s200/ashoura20073-300x231.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இஸ்லாமிய மார்க்கம் உளவியல் ரீதியாக மக்களின் மனதைப் பக்குவப்படுத்தும் மார்க்கமாகும். அதனால் இரவுத் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களுக்கு ஓர் உச்சவரம்பை நிர்ணயித்தது போல் ஒரு குடும்பத்தில் ஓர் உறவினர் இறந்து விட்டால் அதற்காக சோகம் அனுஷ்டிக்கும் நாட்களுக்கும் ஓர் உச்சவரம்பை விதித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையேல் அந்தச் சோகம் மனிதனின் உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்தி மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். அதனால் அவன் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவான். &lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் உடைத்தெறியும் விதமாக நபி (ஸல்) அவர்கள் இதற்கு ஓர் உச்சவரம்பை நிர்ணயிக்கின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இறந்து போனவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்த நாங்கள் தடுக்கப் பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின் அவனது மனைவி, நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். (அதாவது) இந்த நாட்களில் நாங்கள் சுர்மா இடவோ, நறுமணப் பொருட் களைப் பூசவோ, சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கு வதற்காகக் குளிக்கும் போது மணப் பொருட்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)&lt;br /&gt;நூல்: புகாரி 313 &lt;br /&gt;&lt;br /&gt;ஹுசைன் (ரலி) கொல்லப்பட்ட பின் மூன்று நாட்களுடன் அந்தச் சோகம் முடிந்து விடுகின்றது. இதை அவர்களது குடும்பத்தார் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டு, இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்லி தங்களுடைய வாழ்நாளில் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டனர். ஹுசைன் (ரலி)யின் குடும்பத்தார் ஒவ்வோர் ஆண்டும் முஹர்ரம் பத்தாம் நாளை சோக தினமாக அனுஷ்டிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஷியாக்கள் இதற்கு ஒவ்வொரு ஆண்டும் புத்துயிர் கொடுத்து, இஸ்லாத்தின் உண்மையான சித்திரத்தைச் சிதைத்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;ஷியாக்கள் மட்டுமல்லாமல் சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைக் கூறிக் கொள்வோரும் இந்தக் காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்யும் கூத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். &lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இவர்கள் செய்யும் அனாச்சாரங்கள், அட்டூழியங்கள், கேலிக் கூத்துக்கள் ஆகியவற்றை முதலில் வரிசையாகப் பார்த்து விட்டு, மார்க்க அடிப்படையில் அவற்றின் விளக்கத்தைப் பார்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பஞ்சா எடுத்தல் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஹர்ரம் மாதத்தின் முதல் பிறையிலிருந்து, பஞ்சா மையம் கொண்டிருக்கும் அலுவலம் களை கட்ட ஆரம்பித்து விடும். ஒரே ஊரில் தலைமை அலுவலகமும் இருக்கும், கிளை அலுவலகமும் இருக்கும். முஹர்ரம் 1ல் இதன் நடைவாசல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக பஞ்சா கொலு வீற்றிருக்கும். பஞ்சா அலுவலகத்தில் பிரமாண்ட பந்தல். அதில் எப்போதும் மக்கள் வெள்ளம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பலூன் வியாபாரிகள், மிட்டாய் வண்டிகள், பொம்மை வியாபாரிகள், ஐஸ் வண்டிகள் என இந்தப் பகுதி நிரம்பி வழியும். இந்தக் காட்சிகள் அனைத்தும் வேளாங்கண்ணி, திருப்பதி கோயில்களைத் தோற்கடித்து விடும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தெருமுனையில் திருக்கோயில் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக தெரு முனைகளில் உள்ள நுழைவு வாயிலில் அரசாங்கமோ, அல்லது தனி நபர்களோ கட்டடம் எதுவும் கட்ட முடியாது. அப்படி யாராவது கட்டினால் அந்தத் தெருவே பொங்கி எழுந்து, அதனைப் பொசுக்கி விடுவர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சந்திப் பிள்ளையார் சன்னதி போல் இந்தப் பஞ்சா அலுவலகத்தை மட்டும் பக்கீர்கள் பரிபாலணக் கமிட்டி, தெருவின் மத்தியில் கட்டி பராமரிக்கும் போது அதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொள்வர். அது தெய்வீக அருளை அன்றாடம் அள்ளித் தரும் ஆனந்த பவன் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். அதனால் தான் முச்சந்தியில் நிற்கும் இந்த மணி மண்டபத்தை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை கூட முணுமுணுப்பதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பஞ்சாவின் உடல் கட்டமைப்பு &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சா என்றால் ஐந்து என்று பொருள். ஐந்து ஆறுகள் ஓடுவதால் ஒரு மாநிலத்திற்கு பஞ்சாப் என்று பெயர். கிராமத்தில் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு அமைக்கப்படும் ஐந்து பேர் கொண்ட கமிட்டி பஞ்சாயத் என்று அழைக்கப்டுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அது போன்று தான் முஹர்ரம் பத்தாம் நாள் ஹுசைன் (ரலி) நினைவாக எடுக்கப்படும் பஞ்சாவில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்பட்டிருக்கும். இந்த ஐந்து விரல்களும் சிம்பாலிக்காக முஹம்மத் (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி) ஆகியோரைக் குறிக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த ஐந்து பேர்களும் கடவுளாக உருவகப்படுத்தப் பட்டுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் ஒரு கவிஞன், “எனக்கு ஐந்து பேர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் என்னை நரகிலிருந்து காப்பார்கள். அவர்கள் தாம் முஸ்தபா, முர்தளா (அலீ), பாத்திமா, அவர்களின் பிள்ளைகள் ஹசன், ஹுசைன்” என்று பாடியுள்ளான். &lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சா என்று சொல்லப்படும் ஐந்து விரல்கள் கொண்ட வெள்ளி கைச் சின்னம் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சட்டத்தினுள் ஜரிகைத் தாளைப் பின்னணியாகக் கொண்டு குடி கொண்டிருக்கும். இதைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்கள் வளைத்து நிற்கும். இது தான் பஞ்சா என்ற ஏவுகணையின் உடல் கட்டமைப்பாகும். அப்படியே இந்துக்கள் எடுக்கும் சப்பரத்திற்கு ஒப்பாக இந்தப் பஞ்சா அமைந்திருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஏழாம் பஞ்சா &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சா என்ற சப்பரம் பத்தாம் நாள் தான் தன்னுடைய தளத்திலிருந்து கிளம்பும். அதற்கு முன்னால் பக்த கோடிகள் இதனை விட்டு எங்கும் வெளியூர் போய் விடக் கூடாது என்பதால் ஏழாம் பஞ்சா என்று ஒன்று கிளம்புகின்றது. இந்த ஏழாம் பஞ்சாவில் ஹஸன், ஹுசைன் நினைவாக இரண்டு குதிரைகள் தயாராக நிற்கும். அதில் இரண்டு இளைஞர்கள் ஏறி அமர்வார்கள். இவர்கள் மீது அவ்லியாக்களுக்கு மிகவும் பிடித்த நிறமான(?) பச்சை நிறத் துணி போர்த்தப்பட்டிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வீரர்களைத் தாங்கி வரும் குதிரைகளுக்கு பக்தர்கள், பக்தைகளின் கூட்டம் வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கும். குடம் குடமாக வந்து தண்ணீரைக் கொண்டு வந்து குமரி மற்றும் குடும்பத்துப் பெண்கள் குதிரையின் கால்களில் கொட்டுவார்கள். இவ்வாறு கொட்டினால் அவர்களின் தேவைகள் நிறைவேறும் என்ற குருட்டு நம்பிக்கையில்!&lt;br /&gt;&lt;br /&gt;இரு குதிரைகளிலும் சவாரி செய்யும் இந்த வீரர்கள் யார் தெரியுமா? தங்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால், அல்லது தன் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் நோய் தீர்ந்து விட்டால் அவனை முஹர்ரம் ஏழாம் நாளில் ஹஸனாகவும், ஹுசைனாகவும் கொண்டு வந்து குதிரையில் ஏற்றுவேன் என்று பெற்றோர்களால் நேர்ச்சை செய்யப்பட்டவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கர்பலாவின் லைவ் காட்சி &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பச்சைப் போர்வை போர்த்தப்பட்டு பவனி வரும் இவர்களின் பாதடிகளில் தண்ணீராலும் பன்னீராலும் மக்கள் கழுவிக் கொண்டிருப்பார்கள். இதனால் பற்பல பாக்கியங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்! &lt;br /&gt;&lt;br /&gt;குதிரையில் தங்கள் குழந்தைகளை ஏற்றுவதற்கும் போட்டா போட்டி நடக்கும். இதற்கென காசை வாரி இறைப்பர். அதிகமான பணம் கொடுத்து முன் பதிவு செய்பவர்களுக்கு எந்த ஆண்டு குதிரை சவாரி செய்ய வேண்டும் என்பதற்கான நாளை பக்கீர்கள் குறித்துக் கொடுப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு விசா கிடைத்து, குதிரையில் ஏறக் கொடுத்து வைத்த இவர்கள் முஹர்ரம் 10 நாளும் நோன்பு நோற்க வேண்டும். ஆஷூரா 9, 10 நோன்புகளைக் கூட ஹஸன், ஹுசைன் நினைவாகத் தான் பிடிப்பதாக இந்த மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குதிரை வீரர்கள் போருக்குப் புறப்படுகின்றார்களா? என்று பார்த்தால் அவ்வாறு செய்வதில்லை. குதிரையில் ஆற்றுக்குச் சென்று குளிக்கின்றனர். இவ்வாறு செய்தால் ஷஹாதத் எனும் அந்தஸ்து (?) கிடைத்து விடுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;பக்தர்களின் வீட்டு வாசல்களுக்கு இந்தக் குதிரை வரும் போது, மக்கள் தாங்கள் நேர்ச்சை செய்திருந்த ஆடு, கோழிகளை இந்தக் கஞ்சா பக்கீர்களிடம் சமர்ப்பிப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பச்சைத் துணியால் மூடப்பட்ட இந்த இளைஞர்கள் அணிந்திருக்கும் கருப்புக் கண்ணாடியில் கர்பலாவின் காட்சி நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அது எப்படி? என்று யாராவது அந்த இளைஞரிடம் பேட்டி கேட்கும் போது, அவர் தான் கருப்புக் கண்ணாடியில் பார்த்ததைச் சொன்னால் தலை வெடித்து விடுமாம். பக்கீர்களின் பகுத்தறிவு சாம்ராஜ்யம் எப்படி கொடி கட்டிப் பறக்கின்றது என்று பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரேயடியாக பத்தாம் நாள் மட்டும் பஞ்சா என்றால் அது பக்தர்களைத் தக்க வைத்துக் கொள்ள உதவாது என்பதால் எட்டாம் பஞ்சா, ஒன்பதாம் பஞ்சா என்று வகை வகையாக பஞ்சா எடுத்து பக்தர்களை மூளைச் சலவை செய்கின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மீன் சாப்பிடத் தடை &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முஹர்ரம் பத்து நாட்களும் மீன் சாப்பிடக் கூடாது என்று ஒரு விதியை இவர்களாக தங்கள் இஷ்டத்திற்கு ஏற்படுத்தி வைத்துள் ளார்கள். இதன் விளைவாக பஞ்சா எடுக்கப்படும் ஊர்களில் இந்தப் பத்து நாட்களும் மீன் மிகவும் மலிவு விலையில் விற்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தாம்பத்தியத்திற்குத் தடை &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது போல் முஹர்ரம் 10 நாட்களும் கணவன், மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று தடையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந்தத் தடை இதற்கு மட்டுமல்ல! முக்கியமான மூன்று மவ்லிதுகளான சுப்ஹான மவ்லிது, முஹய்யித்தீன் மவ்லிது, ஷாகுல் ஹமீது மவ்லிது போன்ற மவ்லிதுகள் ஓதும் நாட்களிலும் இந்தத் தடை அமுலில் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தடைகளை மீறி யாரேனும் மீன் சாப்பிட்டு விட்டால் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குப் பரிகாரமாக பஞ்சா எடுக்கும் பக்கீர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை காணிக்கை செலுத்த வேண்டும். எவ்வளவு திமிர் இருந்தால் இந்தத் தடைச் சட்டத்தை முஸ்லிம்கள் மீது திணித்திருப்பார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பத்தாம் பஞ்சா &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஹர்ரம் பத்தாம் நாளை அரசாங்கம் முஹர்ரம் பண்டிகை என்று அறிவித்து அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மூஸா (அலை) அவர்களுக்குக் கிடைத்த அந்த வெற்றி நாள் மறக்கடிக்கப்பட்டு, தொலைக் காட்சிகளில் மாரடிக்கும் காட்சிகள் வெளியாகி இஸ்லாத்தின் தூய தோற்றத்தைச் சிதைத்து நாறடித்துக் கொண்டிருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பத்தாம் நாள் கிளைமாக்ஸ்! &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாஸாவிலிருந்து ஏவுகணை கிளம்புவது போன்று பத்தாம் நாள் தான் பஞ்சா என்ற பைத்தியக் காரத்தனத்தின் சின்னம் கிளம்பும் கவுண்ட் டவுன்’ நாள்! மாலையானதும் அதன் மையத்திலிருந்து பக்கீர்கள் தோள் பட்டையில், அல்லது வண்டியில் ஏறியதும் அதன் ஊர்வலம் துவங்கி விடும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பேண்டுக்கு மேல் ஜட்டி &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாவுக்கு முன்னால் சிலம்பாட்டப் படைகள் சிலம்பாட்டம் ஆடும். இவர்கள் வித்தியாசமாக பேண்டுக்கு மேல் ஜட்டி அணிந்து கொண்டு, பெண்கள் அணியும் நகைகளை அணிந்து கொண்டு சிலம்பாட்டம் ஆடுவார்கள். இந்த சிலம்புச் செல்வர்கள் பஞ்சாவின் முன்னால் வருவதற்கு முன், மேள தாளத்துடன் தெருத் தெருவாக சென்று தங்கள் வீரத்தை அரங்கேற்றுவர். அதன் பின் பஞ்சாவுக்கு முன்னர் வந்து ஆட்டம் போடுவர். தீப்பந்தம் சுழற்றுதல், பட்டை சுழற்றுதல், வாயில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு எரியும் தீக்குச்சியில் ஊதி தீப்பந்து உருவாக்குதல் போன்ற சாகசங்களைச் செய்து மக்களை பரவசத்தில் ஆழ்த்துவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;புலி வேஷம் போடுதல் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பஞ்சாவில் நேர்ச்சை செய்த சிலர் உடல் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டு, கோயிலில் சாமி வந்தவர்கள் போல் சுற்றிக் கொண்டிருப்பர். சிலர் புலி வேஷம் போட்டு வந்து மக்களைப் புல்லரிக்கச் செய்வர். &lt;br /&gt;&lt;br /&gt;ஹுசைன் (ரலி) யின் போர்க்கள நினைவாக தங்களுடன் வாள்கள், ஈட்டிகள் போன்றவற்றை எடுத்துச் செல்கின்றனர். பக்கீர்கள் ஒரு விதப் பொடியைத் தூவி பக்தர்களை மகிழ்ச்சியூட்டுவர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உப்பு மிளகு போடுதல் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புரதச் சத்து குறைவாக இருந்தால் உடலில் உண்ணிகள் தோன்றி துருத்திக் கொண்டிருக்கும். இதற்கு வைத்தியம் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. இந்த உண்ணி போக வேண்டும் என்று நேர்ந்து கொண்டு, பஞ்சா அலுவலகத்தில் கொண்டு போய், உப்பையும் மிளகையும் படைத்து விட்டு வந்தால் போதும். மின்னிக் கொண்டிருக்கும் உடல் உண்ணிகள் பறந்து போய் விடும். அப்படி ஒரு நம்பிக்கை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குழந்தைகள் வேண்டி கொழுக்கட்டை லிங்கம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண் குழந்தை வேண்டுமா? ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக்கட்டை செய்து பத்தாம் நாளன்று இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மக்களிடம் விநியோகித்தால் போதும். ஆண் குழந்தை பிறந்து விடும். (பெண் குழந்தைகளை யாரும் வேண்டுவ தில்லை) யார் இந்த மாவு லிங்கத்தைப் பெறுகின்றாரோ அவர் பாக்கியம் பெற்றவராவார். இது தவிர ஹஸன், ஹுசைனின் வாள், வேல் போன்ற வடிவத்திலும் கொழுக்கட்டைகள் செய்து வீசப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தீமிதியும், தீக்குளிப்பும் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு நல்ல கணவன் அமைந்தால் முஹர்ரம் பத்தாம் நாள் வந்து தீக்குளிப்பதாக பருவ வயதுப் பெண் நேர்ச்சை செய்வாள். நல்ல மாப்பிள்ளை வாய்த்த பின்னர் அந்தப் பெண்ணும், அவளது தாயாரும் பஞ்சாவுக்கு வந்து தங்களது தலைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டி நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கோயில் திருவிழாக்களில் தீமிதி நடப்பது போன்று தங்கள் பாவங்கள் தீர, நாட்டம் நிறைவேற தீமிதியும் நடத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஹஸன் (ரலி) அருந்திய &lt;/b&gt;&lt;b&gt;நஞ்சு பானம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹஸன் (ரலி) அவர்கள் நஞ்சுண்டதன் நினைவாக மக்களும் புளி கலந்த ஒரு பானகரம் என்ற பெயரில் அருந்திக் கொள்கின்றனர். உண்மையில் இவர்களின் நம்பிக்கைப் படி ஹஸன் (ரலி) மீது அவர்களுக்குப் பற்று இருக்குமானால் இவர்கள் நஞ்சை அருந்த வேண்டும். அவ்வாறு நஞ்சை அருந்தினால் இது போன்ற பஞ்சாக்கள் எல்லாம் பஞ்சாகப் பறந்து போகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;காதலர் தினம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பஞ்சாவில் நடைபெறும் ஆனந்தக் கூத்துக்களைக் கண்டு களிக்க காளையரும், கன்னியரும் ஜனத் திரளில் சங்கமித்துக் கொள்வார்கள். ஹுசைன் (ரலி) உயிர் நீத்த அந்த நாளைக் காளையர்கள், கன்னியர்களைப் பார்த்துப் பார்த்து ஹுசைன் (ரலி) யை நினைத்து உருகுவார்கள். பதிலுக்குக் கன்னியரும் திரும்பப் பார்த்து ஹுசைன் (ரலி)யை நினைவு கூர்வார்கள். இவ்வாறாக வீரர் ஹுசைன் (ரலி)யின் நினைவாக இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமுதாய வீர உணர்வுகளை ஈரப்படுத்திக் கொள்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மாரடித்தல் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கூட்டம் இப்படி கொட்டு மேள, தாளத்துடன் ஹுசைன் (ரலி)யின் நினைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு கூட்டம் தங்கள் மார்களில் அடித்துக் கொண்டு ஹுசைன் (ரலி)யை நினைவு கூர்ந்து கொள்கின்றனர். அவர்கள் மாரடித்து அழுது புலம்பி கர்பலா நாளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வெள்ளத்தில் மிதந்து வரும் விநாயகர் போல்.. &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விநாயகர் சதுர்த்தியன்று சிலையைத் தூக்கி வருவது போன்று பக்கீர்கள் தங்கள் தோள் புஜங்களில் இந்தப் பஞ்சாவைத் தூக்கி வருவர். அது வீதியில் உலா வரும் போது அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கும். மாலை மறைந்து இரவு வேளை ஆரம்பிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக் கைச் சின்னத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் மஞ்சள் ஜரிகையில் பெட்ரோமாக்ஸ் விளக்கின் மஞ்சள் ஒளி பட்டவுடன் அது ஒரு தங்க ஆறு ஓடுவது போன்று காட்சியளிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஒளி வெள்ளத்திலும் அதனைச் சுற்றி மேக மூட்டத்தைப் போன்று மண்டிக் கிளம்பி மணம் பரப்பும் சாம்பிராணி புகை ஓட்டத்திலும் பக்தர்கள் தங்கள் மனதைப் பறி கொடுத்துக் கொண்டிருப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பச்சைத் தலைப்பாகையுடன் பக்கீர்கள் மயில் இறகைக் கொண்டு ஆண், பெண் பேதமில்லாமல் தடவி வருடி விடுவார்கள். இதில் பக்தர்களின் மலைகள் போன்ற பாவங்கள் மழையாகக் கரைந்து போய் விடுமாம். தாய்மார்கள் மனமுருக நின்று அதைப் பார்த்து பிரார்த்தனை புரிந்து கொண்டிருப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக இறுதியில் அதை ஆற்றில் கொண்டு போய் கரைத்து விட்டு வருவார்கள். அவ்வாறு கரைத்து விட்டு வரும் போது அந்தப் பஞ்சாவை வெள்ளைத் துணியால் மூடி விட்டு, ஒப்பாரி வைத்து ஓலமிட்டவாறே கலைந்த அந்தப் பஞ்சாவுடன் வீடு திரும்புவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதன் பிறகு அது வரை தடுக்கப்பட்ட காரியங்கள் அனைத்தும் இவர்களுக்கு ஹலாலாகி விடுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இது வரை நாம் கண்டது பஞ்சா பற்றி ஒரு நேர்முகத் தொகுப்பு என்று கூட கூறலாம். இதில் நீங்கள் கண்ட காட்சிகளைக் கீழ்க்கண்ட பாவங்களாகப் பிரித்துக் கூறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;1. அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;2. அல்லாஹ்வின் அதிகாரத்தைக் கையில் எடுத்தல்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;&lt;b&gt;3. மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;4. புதுப்புது வணக்கங்களை மார்க்கத்தில் புகுத்தும் பித்அத்&lt;/span&gt;&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி) ஆகியோரின் நினைவாக ஐந்து விரல்களை உருவாக்கி அவற்றுக்கு தெய்வீக அந்தஸ்து வழங்குவது, இறந்த பிறகும் அவர்களுக்கு ஆற்றல் இருக்கின்றது என்று நம்புவது கடைந்தெடுத்த ஷிர்க் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;குதிரையின் குளம்புகளிலும், குதிரையின் மீதிருக்கும் இளைஞனின் கால்களிலும் அருள் கொப்பளிக்கின்றது என்று நினைத்து அவர்களின் கால்களில் தண்ணீரைக் கொட்டுவதும் கொடிய இணை வைத்தலாகும். இறந்து விட்ட அந்த ஐவரிடமிருந்தும் இவருக்கு ஆற்றல் கிடைக்கின்றது என்று நம்புவது தான் இந்தச் செயல்களுக்கு அடிப்படை!&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;“அவர்களுக்கு நடக்கிற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கிற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கிற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கிற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!” என்று கூறுவீராக! அல்குர்ஆன் 7:194,195 &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அல்குர்ஆன் 16:21 &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்பட இறந்து விட்ட யாராக இருந்தாலும் அவர்கள் பார்க்கவோ, செவியுறவோ மாட்டார்கள் என்பதை இந்த வசனங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குழந்தை பாக்கியம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான் அல்லது ஆண் களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றல் உடையவன்.அல்குர்ஆன் 42:49,50 &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன. அதை அடியார்களிடம் கேட்பது பைத்தியக் காரத்தனமும் பகிரங்க இணை வைப்பும் ஆகும். படைத்தல் என்ற இந்தப் பேராற்றல் வல்ல நாயனின் ஆட்சிக்குரிய தனி வலிமை! அந்த வலிமையை உணர்த்தி வார்க்கப்பட்ட சமுதாயதம் தான் இஸ்லாமியச் சமுதாயம்! அப்படிப்பட்ட இஸ்லாமிய சமுதாயம் குதிரையின் குளம்படியில் வந்து கும்பிட்டுக் குப்புற வீழ்ந்து கிடப்பது வேதனையிலும் வேதனை. &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை பாக்கியத்தை நாடி லிங்கத்தின் வடிவில் கொழுக்கட்டை செய்து கூட்டத்தில் விநியோகிப்பது இணை வைத்தல் மட்டுமில்லாமல் கேலிக் கூத்துமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நேர்ச்சை ஒரு வணக்கமே! &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனு தினமும் தொழுகையின் போது, அல்ஃபாத்திஹா அத்தியாத்தில், உன்னையே நாங்கள் வணங்கு கின்றோம். உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்று தொழுபவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்கின்றார்கள். இதில் இடம்பெறும் வணக்கம் என்ற வார்த்தையில் நேர்ச்சை செய்தலும் அடங்கும். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! அல்குர்ஆன் 22:29 &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வசனத்தின் படி நேர்ச்சையை அல்லாஹ்வுக்கு மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்றிருக்க இறந்து விட்ட அடியார்களுக்காக நேர்ச்சை செய்யும் அநியாயமும் அலங்கோலமும் இங்கே நடந்தேறுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் தீக்கங்குகளைத் தலையில் போட்டுக் கொண்டு இந்தத் தீ(ய) நேர்ச்சையெல்லாம் உடலுக்கு ஊறு விளைவிக்கின்ற, உயிருக்கு உலை வைக்கின்ற நேர்ச்சைகள். இவை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய் வோரை அல்லாஹ் விரும்புகிறான்.அல்குர்ஆன் 2:195 &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் தன் கையாலேயே தனக்கு நாசத்தை ஏற்படுத்திக் கொள்ள அல்லாஹ் தடை விதிக்கின்றான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்களிடையே தொங்கிய படி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “(கஅபாவுக்கு) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கின்றார்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவர் இவ்விதம் வேதனைப் படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி).நூல்: புகாரி 1865 &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் கூட, இது போன்று தம்மை வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளைச் செய்யக் கூடாது எனும் போது அதை மற்றவர்களுக்காகச் செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளங்கலாம். அப்படியே பாவமான காரியத்தில் நேர்ச்சை செய்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது என்ற சட்டமும் இந்த மக்களுக்குத் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 6696 &lt;br /&gt;&lt;br /&gt;இது வரை பஞ்சாவின் மூலம் இறைவனுக்கு இணை வைக்கும் மாபாதகம் நடப்பதைப் பற்றி பார்த்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.அல்குர்ஆன் 4:48 &lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.அல்குர்ஆன் 4:116 &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வசனங்களின் அடிப் படையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது அவனால் மன்னிக்கப்படாத பாவமாகும். சுவனத்திற்குச் செல்வதைத் தடுத்து நரகத்தில் நுழைத்து விடும் பாவமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுதல் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாவில் ஏற்படும் அடுத்த பாவம் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கத்தில் சட்டம் இயற்றல் என்பது அவனுடைய தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளதாகும். அதை ஷியாக்களின் வாரிசுகளான இந்தப் பக்கீர் சாஹிபுகள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட காரியங்களை அல்லாஹ் தடுத்து விடுகின்றான். தொழுகையில் முதல் தக்பீரின் போது இந்தத் தடை அமுலுக்கு வந்து விடுவதால் இது தக்பீர் தஹ்ரீமா எனப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அது போல் ஹஜ்ஜுக்குச் செல்லும் போது இஹ்ராமை மனதில் எண்ணி அதற்குரிய ஆடை அணிந்து விட்டால் அது வரை நமக்கு ஹலாலாக இருந்த தாம்பத்தியம், வேட்டையாடுதல், திருமணம் போன்ற காரியங்கள் ஹராமாகி விடுகின்றன. இது போன்று சில குறிப்பிட்ட வணக்ககங்களில் அல்லாஹ் நமக்குச் சில தடைகளை விதித்துள்ளான். இந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான தனி அதிகாரமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ்ஜின் போது இந்தத் தடையை மீறி விட்டால் நாம் ஓர் ஆடு அறுத்துப் பலி கொடுத்து பரிகாரம் தேட வேண்டும். இதுவும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது தான். இப்படி குறிப்பிட்ட வணக்கங்களின் போதும், பொதுவாகவும் ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. &lt;br /&gt;&lt;br /&gt;பாருங்கள்! இந்த அதிகாரத்தை, பஞ்சா எடுக்கும் பக்கீர் பண்டாரங்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு முஹர்ரம் பத்து நாட்களிலும் மீன் சாப்பிடக் கூடாது என்று தடை! தாம்பத்தியத்திற்குத் தடை! இந்தத் தடைகளை மீறி விட்டால் அதற்கு ஆடு, கோழி போன்றவற்றைப் பலி கொடுத்து பரிகாரம் தேட வேண்டும் என்று வைத்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு எவ்வளவு துணிச்சலும் நெஞ்சழுத்தமும் இருந்தால், திமிர் இருந்தால் அல்லாஹ்வின் இந்த அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுப்பார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.அல்குர்ஆன் 42:21 &lt;br /&gt;&lt;br /&gt;இவர்களோ அல்லாஹ்வின் இந்தக் கேள்விக்கு, நாங்கள் இருக்கின்றோம் என்று பதில் கூறுவது போல் செயல்படுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்?.அல்குர்ஆன் 66:1 &lt;br /&gt;&lt;br /&gt;என்று நபி (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் கேட்கின்றான். ஆனால் இவர்களோ அல்லாஹ் அனுமதியளித்ததை தங்கள் இஷ்டத்திற்கு ஹராமாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள். அல்குர்ஆன் 16:116 &lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக இதையெல்லாம் மார்க்கம் என்ற பெயரில் இட்டுக் கட்டியதால் அல்லாஹ்வின் மீதே பொய்யை இட்டுக் கட்டிய மாபெரும் துரோகத்தைச் செய்தவர்களாகின்றனர். அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதை அல்லாஹ் மிக வன்மையாகக் கண்டிக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள். அல்குர்ஆன் 6:21 &lt;br /&gt;&lt;br /&gt;அறிவின்றி மக்களை வழி கெடுப்பதற்காக அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக் கட்டுவோரை விட மிகப் பெரிய அநீதி இழைத்தோர் யார்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன் 6:144 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மாற்று மதக் கலாச்சாரம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சா எனும் சப்பரத்தை உருவாக்குதல், லிங்க வடிவில் கொழுக்கட்டை செய்தல், மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டித்தல், நினைவு நாள் கொண்டாடுதல் போன்றவை மாற்றுமதக் கலாச்சாரங்களில் உள்ளவையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆண் குழந்தை வேண்டுமென்று ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக்கட்டை செய்து விளம்புவது ஆபாசம் இல்லையா? என்று கேட்டால், இது எங்கள் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது என்று கூறுகின்றார்கள். இதை அப்படியே அல்லாஹ் தனது திருமறையில் படம் பிடித்துக் காட்டுகின்றான். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது “எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளை யிட்டான்” என்று கூறுகின்றனர். “அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?” என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்குர்ஆன் 7: 27 &lt;br /&gt;&lt;br /&gt;லிங்கத்தை உருவாக்கி அதற்கு வழிபாடு நடத்துவது, அதைப் புனிதமாகக் கருதுவதெல்லாம் அவர்களது கலாச்சாரமாகும். இந்தக் கலாச்சாரத்தை அப்படியே இவர்கள் இந்தப் பஞ்சாவில் செயல்படுத்தித் தங்களின் வந்தவழி பாரம்பரியத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்குச் சரியான பாடத்தைப் புகட்டி, மாற்றுக் கலாச
